LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் வளர்ச்சிக் கோரிக்கைகள் Print Friendly and PDF

கன்னியாகுமரியில் அறிவிக்கவேண்டி திருக்குறள் வளர்ச்சிக்கான கோரிக்கைகள் - தொடர்பாக

அனுப்புநர்,                                                25/12/2024

திருக்குறள் அமைப்புகள் , தமிழ்ச்சங்கங்கள் சார்பாக

வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி

பெறுநர்,

மாண்புமிகு அமைச்சர்,

தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரம்,

சென்னை.

 

மதிப்பிற்குரிய ஐயா,

 

பொருள்: கன்னியாகுமரியில் அறிவிக்கவேண்டி திருக்குறள் வளர்ச்சிக்கான கோரிக்கைகள் - தொடர்பாக 

மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொறுப்பேற்று திருக்குறள் முற்றோதல் போட்டிக்கு இருந்த பரிசுத் தொகை ரூபாய் 10000/- என்பதை ரூபாய் 15000/-என்று அறிவித்ததும்,  மாணவர்களின் எண்ணிக்கையின் உச்ச வரம்பு 70 என்ற கட்டுப்பாட்டை நீக்கி,1330 திருக்குறள் சொல்லும் அனைவருக்கும்  பரிசு என்று அறிவித்ததும்  திருக்குறள் பரவலாக்கத்திற்கு மிகப்பெரிய உந்துசக்தியாகப் பார்க்கப்படுகிறது.

கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை வைத்து 25 ஆம் ஆண்டு வெள்ளிவிழா நிகழ்வு கொண்டாடும் இந்த வேளையில்  கீழ்காணும் திருக்குறள் சார்ந்த வேண்டுகோள்களை  உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் , வலைத்தமிழ் , வள்ளுவர் குரல் குடும்பம், தமிழ் வளர்ச்சி மன்றம் ,வெர்ஜினியா அமெரிக்கா,  பைபிள் அச்சகத்தில் திருக்குறள் அச்சடித்து உலகத்திற்கு வழங்கிய உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை, சிகாகோ, அமெரிக்கா , குறள் வழி மாத இதழ், அனைத்திந்திய தமிழ்ச்சங்கப் பேரவை , உலகத் தமிழ்க்காப்புக் கூட்டியக்கம், கற்க அறக்கட்டளை  உள்ளிட்ட திருக்குறள் களப்பணி செய்யும் அமைப்புகளின் சார்பாக  தமிழ் வளர்ச்சித் துறைக்கு   கீழ்க்காணும் கோரிக்கைகளை வைக்கிறோம்.

கோரிக்கைகள் :

  1. அரசின் முற்றோதல் போட்டிக்கு துணைநின்று அதிக மாணவர்களை திருக்குறள் முற்றோதல் மனனமாக செய்யவைக்க , உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கமும், தமிழ் வளர்ச்சி மன்றம், அமெரிக்காவும் இணைந்து மாவட்டத்திற்கு 1000 நூல்கள் வீதம் ஒரு ஆண்டுக்கு 40000 திருக்குறள் நூல்கள்  என அடுத்த 10 ஆண்டுகளுக்கு 4 இலட்சம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் வழங்கும் திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. மேலும், அவர்களுக்கு முற்றோதல் முடித்த பயிற்சியாளர்கள்களைக் கொண்டு உரிய மனன உத்தியுடன் இலவசப் பயிற்சியளிக்கும் செயல்பாட்டையும் முன்னெடுக்கிறோம்.

இது தொடர்பாக மாவட்டம் முழுதும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பயணித்து இலவசப் பயிற்சி வழங்கும் திருக்குறள் மனன முற்றோதல் பயிற்சியாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருவருக்கு , இலவச அரசுப்பேருந்துப் பயணம், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை போன்று வழங்கக் கோருகிறோம்.

  1. தற்போது திருக்குறள் முற்றோதல் போட்டி தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமே உள்ளது. இதை புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளுக்கும் விரிவாக்கி அறிவிக்கக் கோருகிறோம்.  அயலகத் தமிழர்களுக்கு ஒரு தனித்  துறையை உருவாக்கி தொலைநோக்குடன் செயல்படும் இவ்வரசின் இந்த அறிவிப்பு உலகத் தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவது மட்டுமின்றி, சனவரியில் நடைபெறும் அயலகத் தமிழர்  மாநாட்டிற்கு வரும் உலகத் தமிழர்கள் தங்கள் நன்றியை அரசுக்குத் தெரிவிப்பார்கள்.

3.திருக்குறள் முற்றோதல் மனனமாகச் சொல்லும் திறன் வாய்ந்த கல்லூரி மாணவிகளுக்கும் ,சென்ற சில ஆண்டுகளுக்கு முன் வரை பரிசும் சான்றிதழும் கொடுக்கப் பட்டுள்ளது.தற்போது அவர்களுக்கு இது வழங்கப்படவில்லை.முது நிலை மாணவர்களை ,கூடுதலாகப் பொருளும் கூறச் சொல்லி திருக்குறள் முற்றோதல் முது நிலை என வகைப் படுத்தி சான்றிதழும் ,ரூபாய் 25000/- என பரிசுத் தொகையும் உயர்த்தி வழங்கலாம்.

4.திருக்குறளை பொருளோடு கூறும் எவருக்கும் வயது ஒரு தகுதியாக / தடையாக இன்றி அனைவருக்கும் வழங்கலாம்.

  1. ஐம்பது ஆண்டுகளுக்கு மேற்பட்டக் கோரிக்கையாக உள்ள திருக்குறள் தேசிய நூல் அறிவிப்பும், யுனெசுகோ அங்கீகாரமும் பெரிய அளவில் நகர்வுகள் இல்லாத நிலையில், இதற்கென தொடர்ச்சியாக சந்தித்து முன்நகர்த்த ஏதுவாக ஆழமாக களப்பணிகளில் ஈடுபட்டுள்ள திருக்குறள் அறிஞர்களை, ஆர்வலர்களைக்கொண்ட "திருக்குறள் தேசிய நூல் " குழு, "திருக்குறள் யுனெசுகோ அங்கீகாரம் " குழு என இரண்டு குழுக்களை தமிழ்நாடு அரசு இச்சிறப்பு மிகு தருணத்தில் அறிவிக்கக் கோருகிறோம்.
  2. திருக்குறளுக்காக அரிய பங்களிப்புகளைச் செய்த ஆளுமைகளை நினைவுபடுத்தி , அவர்களின் அடியொற்றி இளைஞர்கள் உருவாகும் வகையில் அவர்களின் பங்களிப்புகளை முறையாக , முழுமையாக ஆவணப்படுத்த வேண்டுகிறோம்.

7.திருக்குறள் மனன முற்றோதல் முடித்து அரசின் முற்றோதல் பரிசை வென்ற அனைவரையும் திருக்குறள் இளநிலை பட்டயப் படிப்பு முடித்ததாகக் கருதி , அடுத்தகட்டமாக திருக்குறளை கசடறக் கற்று , பொருள் உணர்ந்து வாழ்க்கையில் பின்பற்ற வகை செய்யப்பட வேண்டும். அதற்கு  ஏதுவாக திருக்குறள் பொருளை முழுமையாக உள்வாங்கியுள்ளார்களா என்று அறிய  இணையவழி திறனறித் தேர்வை வடிவமைத்து தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் வழங்கவேண்டும் என்று கோருகிறோம்.

நன்றி..

by Swathi   on 23 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கீழடி- வெளியிடப்படாத ஆய்வறிக்கை விரைவில் வெளிப்படவேண்டும். கீழடி- வெளியிடப்படாத ஆய்வறிக்கை விரைவில் வெளிப்படவேண்டும்.
தமிழ்நாட்டில் நூறு விழுக்காடு ஆட்சித்தமிழை நிலைநிறுத்துவோம்! தமிழ்நாட்டில் நூறு விழுக்காடு ஆட்சித்தமிழை நிலைநிறுத்துவோம்!
செந்தமிழ்த் திருத்தேர் தூயதமிழ் மாணவர் இயக்கம் பன்னாட்டுத் தூயதமிழ் மாணவர் மாநாடு - 2025 -மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செந்தமிழ்த் திருத்தேர் தூயதமிழ் மாணவர் இயக்கம் பன்னாட்டுத் தூயதமிழ் மாணவர் மாநாடு - 2025 -மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் நடத்தும் மாணவர் எழுச்சித்தமிழ் மாநாட்டுத் தீர்மானங்கள் உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் நடத்தும் மாணவர் எழுச்சித்தமிழ் மாநாட்டுத் தீர்மானங்கள்
முதலாவது உலகத் தமிழிசை மாநாடு -2019 தீர்மானங்கள் முதலாவது உலகத் தமிழிசை மாநாடு -2019 தீர்மானங்கள்
அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை- தமிழ்ப் பல்கலைக் கழகம் நடத்திய 'தமிழ்க் கூடல்-2024' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்  அமைச்சரிடம் ஒப்படைப்பு அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை- தமிழ்ப் பல்கலைக் கழகம் நடத்திய 'தமிழ்க் கூடல்-2024' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அமைச்சரிடம் ஒப்படைப்பு
தமிழர்கள் தமிழ்ச் சங்கத்தினர் ஆற்ற வேண்டிய சில  குறள் சார்ந்த பணிகள்.... தமிழர்கள் தமிழ்ச் சங்கத்தினர் ஆற்ற வேண்டிய சில குறள் சார்ந்த பணிகள்....
தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சருக்கு மே  2024 ல் வழங்கப்பட்ட கோரிக்கை மனு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சருக்கு மே 2024 ல் வழங்கப்பட்ட கோரிக்கை மனு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.