|
|||||
வட்டிக்கு விடுதல் |
|||||
வட்டிக்கு விடுதல் வட்டிக்குக் கொடுப்பதை நெறிப்படுத்தும் சட்டம்: உரிமம் இல்லாமல் வட்டிக்குப் பணம் கொடுப்பது சட்டப்படி குற்றமா, அப்படி வட்டிக்குக் கொடுத்தால் என்ன தண்டனை போன்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் உண்டு. வட்டிக்குப் பணம் கொடுத்து, வாங்குவதை முறைப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாநிலமும் தனியாகச் சட்டம் கொண்டு வந்துள்ளது. அதில் தமிழ்நாடு 1957லிருந்து வட்டிக்குப் பணம் கொடுப்பதை நெறிப்படுத்தும் சட்டம் (வுயஅடையேனர ஆழநெல டுநனெநசள யுஉவ 1957) கொண்டு வந்து அதை நடைமுறைப்படுத்தியும் உள்ளது. வட்டிக்கு விடும் தொழில் செய்பவர்கள்: அச்சட்டத்தின்படி வட்டிக்குப் பணம் கொடுப்பதைத் தொழிலாக நடத்துபவர்கள் முறைப்படி வட்டாட்சியரிடம் அனுமதி பெற்று நடத்த வேண்டும். இத்தொழிலைத் தனிநபராகவோ, கூட்டாகப் பங்குதாரர்களாகவோ நடத்தலாம். ஆனால் இந்தச் சட்டம் வங்கிகளுக்கோ, வட்டிக்குப் பணம் கொடுக்கும் கூட்டுறவுச் சங்கங்களுக்கோ, நிதி நிறுவனங்களுக்கோ பொருந்தாது. ஏனென்றால் வைப்புத்தொகை வாங்குவது மற்றும் வட்டிக்குப் பணம் கொடுப்பது போன்றவை வங்கி நடைமுறைக்குக் கீழ் வருவதால் அதற்கு ரிசர்வ் வங்கியில் அனுமதி பெற வேண்டும். வட்டாட்சியரிடம் பெற வேண்டிய உரிமம்: ‘ நான் வைப்புத்தொகை எதுவும் வாங்கவில்லை, வெறுமனே பணம் மட்டுமே வட்டிக்குக் கொடுத்து வாங்குகிறேன்’ என்றால் அதற்கு வட்டாட்சியரிடம் உரிமம் வாங்க வேண்டும். அடகுக்கடை வைத்திருப்பவர்கள் உரிமம் வாங்குவது போன்று, இதற்கும் ஆழநெல டுநனெநசள யுஉவ 1957-ன் கீழ் உள்ள சட்டத்தின் கீழ் உரிமம் வாங்க வேண்டும். அப்படி இல்லாமல் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவதை முழுநேரத் தொழிலாகச் செய்வது சட்டப்படி குற்றம். எனவே முழுநேரத் தொழிலாக ஒரு இடத்தில் நிறுவனம் தொடங்கி முழு நேரத் தொழிலாக வட்டிக்கு விடுவதைச் செய்தால் உரிமம் எடுக்க வேண்டும். உதவி செய்வதற்குத் தேவையற்ற உரிமம்:: பொதுவாக ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் தனிநபரானவர் மற்ற உறவினர்களுக்கு உதவியின் பொருட்டு வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவார். அவர்களை முழுநேர வட்டிக்கு விடும் தொழிலாளராக நாம் எடுத்துக் கொள்ள முடியாது. இதில் உரிமம் எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வட்டிக்கு விடுதலின் தண்டனை: ஒருவேளை ‘ஒருவர் உரிமம் எடுக்காமல் வட்டிக்கு விடும் தொழிலைச் செய்தார்’ என்று புகார் வந்தால் அதற்குத் தண்டனையாக ஆயிரம் ரூபாய் நீதிமன்றத்தால் விதிக்கப்படும். சிறைத் தண்டனை எதுவும் இல்லை. இதில் கோடிக்கணக்கில் பணம் வட்டிக்குக் கொடுத்திருந்து உரிமம் வாங்கவில்லை என்று குற்றச்சாட்டு வந்தாலும் சட்டம் தொகையைப் பற்றிச் சொல்லவில்லை. ‘உரிமம் வாங்காமல் வட்டிக்குப் பணம் கொடுத்து தொழில் செய்வதுதான் குற்றம்’ என்கிறது. அதற்கு ரூ.1000 அபராதம் என்பதுதான் சட்ட நடவடிக்கை ஆகும். |
|||||
by Lakshmi G on 08 Nov 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|