செல்வத்தை அள்ளித்தரும் மகாலட்சுமிக்கு கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் உள்ள மேட்டூர் மகாதானபுரத்தில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் நடந்து வரும் விசித்திரமான வழிபாடு பக்தர்களை வியக்க வைக்கிறது.ஆடிப்பெருக்கு திருவிழா இங்கு விசேஷமாக நடைபெறும்.
அன்று பக்தர்கள் மொட்டை அடித்து, தங்கள் தலையில் தேங்காயை உடைத்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்.இந்த அம்மன் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. கோயிலை சுற்றிவர மூன்று பிரகாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. |