இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.ஜோதிடத்தில் செவ்வாய் வீட்டில் சுக்கிரனும், சுக்கிரன் வீட்டில் செவ்வாய் இருந்தால் அதை பரிவர்த்தனை யோகம் என்பர்.அதுபோல இங்கு சுவாமி ஆற்றலை அம்பாள் வாங்கிச் சிவமயமாக உள்ளாள்.அம்பாள் ஆற்றலைச் சுவாமி வாங்கி சக்திமயமாக உள்ளார். இதை பரிவர்த்தனை நிலை என்பர். இங்கு அம்பாளுக்கு தான் சிறப்பு எல்லாமே என்பதும் சிறப்பாகும்.
எனவே, சக்திதலமாகிய மதுரைக்குரிய மந்திர, யந்திர, தந்திர முறைகள் இங்கும் பின்பற்றப்படுகிறது. அம்மை நோயினை முத்துப் போட்டதாகக் கூறுவது மரபு. முத்துக் கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்தைச்சுற்றி நீர் கட்டச் செய்வர். இதனால் முத்துநோய் இறங்குகிறது.
முத்துக்களை ஆற்றி குணப்படுத்தியதால் அன்னை முத்து + ஆற்று + அம்மன் = முத்தா(ற்ற)ரம்மன் எனவும் அழைக்கப்படுகிறாள்.கடற்கரையில் அமைந்துள்ள இக்கோயிலில் சுவாமி அம்பாள் ஒரே பீடத்தில் வடக்கு பார்த்து இருக்கிறார்கள். அம்மை நோய் குணமடைய இங்கு வழிபடலாம் பிள்ளை வரம் வேண்டுதலுக்கு பெயர் பெற்றது. |