LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

அப்போதும்; நினைத்து நினைத்து நோகும் அம்மா..

காய்கறி
வாங்கி வருகையில்
ஒரு கேரட் உடைத்துத் தந்த அப்பா

வெண்டைக்காய் வாங்கி வருகையில்
கொஞ்சம் கடித்துக்கொண்டு தந்த அம்மா

தக்காளி நறுக்குகையில்
ஒரு துண்டு கேட்கும் தம்பி

வெங்காயம் நானுரித்தால்
கண்ணீர் வருமென்று வாங்கிக்கொண்ட
அண்ணன்

பூண்டுரிக்கும் போதே
நுனி தேய்த்து
கதைகள் பல சொன்னப் பாட்டி

கட்டம்கட்டி ஆடுகையில்
கூதலாட்டம் ஆடிய தோழி

காத்திருந்தேன்
நெஞ்சே வெடித்துவிட்டதென சொன்ன அவன்

கவலை வேண்டாம்  
நானிருக்கேன்னு சொன்ன அவர்

இது உன் வீடு
உள்ளே வான்னு அணைத்துக்கொண்ட
மாமியா(ர்)

அம்மான்னா அம்மாதான்’ வளர்ந்ததும்
கொஞ்சியப் பிள்ளைகள்

அவ இல்லைன்னா
நானில்லை ம்மா – முளைவிட்ட
தலைமுறை

நானும்
அம்மான்னே கூப்பிடவா அத்தே’
வலதுகால் பாராமல் உள்நுழைந்த மறுமகள்

அப்பத்தா
அம்மம்மான்னு
உயிர்விடும் அன்புப் பெயரப்பிஞ்சுகள்..

இப்படி
இன்னும்
யார் யாரை நினைத்துக்கொண்டு
சொட்டுகிறதோ தெரியவில்லை

படுக்கையிலிருக்கும்
அம்மாவின் கண்களிலிருந்துச் சொட்டுமந்த
ஒவ்வொருச் சொட்டுக் கண்ணீரும்.

by Swathi   on 29 May 2015  0 Comments
Tags: அம்மா   அம்மா கவிதை   Mother Poems   Amma Kavithai           
 தொடர்புடையவை-Related Articles
அம்மா - கவிப்புயல் இனியவன் அம்மா - கவிப்புயல் இனியவன்
அம்மா - எஸ்.கண்ணன் அம்மா - எஸ்.கண்ணன்
அப்போதும்; நினைத்து நினைத்து நோகும் அம்மா.. அப்போதும்; நினைத்து நினைத்து நோகும் அம்மா..
அம்மா அம்மா
அன்னையர் தினம் - தாய்மை - வித்யாசாகர் அன்னையர் தினம் - தாய்மை - வித்யாசாகர்
தமிழில் அம்மா, அப்பா என்ற வார்த்தை எப்படி உருவானது ? தமிழில் அம்மா, அப்பா என்ற வார்த்தை எப்படி உருவானது ?
இன்றைய தாய் இன்றைய தாய்
அம்மா அம்மா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.