கட்டுரை காணொளி போட்டி இந்த முயற்சியை முன்னெடுக்கும் வலைத்தமிழ் டிவி நிறுவனத்திற்கு எங்கள் குலதெய்வம் ராவுத்தர் பெரியாண்டவர் கோவில் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ராவுத்தர் பெரியாண்டவர் துணை! ( இந்து கடவுளின் பெயரையும் இஸ்லாமிய கடவுளின் பெயரையும் சுமந்திருக்கும் எங்கள் குல தெய்வத்தின் வரலாற்றை இக்கட்டுரையில் காண்போம்)
ராவுத்தர் பெரியாண்டவர்:
* குல தெய்வ வழிபாடுகளில் குலதெய்வ வழிபாடு என்பது அவர்களுடைய முன்னோர்கள் பல தலைமுறைகளாக வழிபட்டு வந்த தெய்வம் ஆகும். குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு
* எங்களது குலதெய்வம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகரில் அமைந்துள்ளது.
* மதநல்லிணக்கம் ஒற்றுமையை உணர்த்தும் கோயிலாக உள்ளது
* இங்கு விநாயகருக்கும் இஸ்லாமிய பெரியவர் சிக்கந்தர்க்கும் அருகருகே சிலை அமைத்து வழிபாடு நடத்தப்படுபவடு குறிப்பிடத்தக்கதாகும்.
ராவுத்தர் பெரியாண்டவர் வரலாறு: (திருமண்)
* சுமார் 200 ஆண்டுக்கு முன்பு, திருச்செந்தூர் சென்று அக்காலத்தில் வழிபட்டு வந்தனர். அடிக்கடி திருச்செந்தூர் சென்று வழிபட முடியாததால், பெரியாண்டவரை வழிபட அங்கிருந்து திருமண் எடுத்து வர முயன்றனர்.
* அப்போது திருமண்ணோடு அவர்களால் திரும்பி வர முடியாதபடி இடையூறுகள் ஏற்பட்டது. மனம் நொந்து ஆண்டவனை வேண்டும் போது அங்கு வந்த என்ற இஸ்லாமிய பெரியவர் விவரம் கேட்டார்.
* திருமண் எடுத்து செல்ல முடியடதது பற்றி அறிந்துகொண்டார். அப்போது சில தீய சக்திகள் திருமண்ணை கொண்டு செல்ல விடாமல் தடுப்பதனை இஸ்லாமிய பெரியவர் உணர்ந்தாரம்.
* ரவுத்தரை வணங்கி அந்த பெரியவர் திருமண்ணை எடுத்து சிவகாசி வந்து, தற்போதுள்ள கோவிலில் வைத்து வழிபாடு செய்த்துவிட்டு திரும்பினார்.
*இதனால் "ராவுத்தர் பெரியாண்டவர் கோவில்" என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
*இதனால் சிக்கந்தர் அவர்களுக்கும் இங்கு வழிபாடு நடைபடுகிறது.
* இத்தகைய மத நல்லிணக்க ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் இந்த கோவில் சிவகாசிக்கு மேலும் சிறப்பு சேர்கிறது.
ராவுத்தர் பெரியாண்டவர்:
* குலதெய்வம் என்பது நம்மைப் போலவே வாழ்ந்த நம்முடைய முனோர்களாகவும் நம் பூர்வீகத்தை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
* அவர்களையே நம் குலசாமியாக போற்றி வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.
*குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு தருணத்திலும் மகான்களும் சித்தபுருஷர்களும் வலியுறுத்திக் கொன்டே வந்திருக்கிறார்கள்.
*குலதெய்வத்தை தினமும் வணங்க வேண்டும். நம் வீட்டில் எந்த விஷேஷம் நடந்தாலும் முதலில் குலதெய்வத்திடம் சொல்லி வழிபடுவதை வழக்கமாக கொள்ள வேண்டும்.
* குலதெய்வ வழிபாடு 7 தலைமுறைகளை காக்கும்.
* நாங்கள் - "எங்கள் குலதெய்வம் ராவுத்தர் பெரியாண்டவரை வணங்காத நாள் இல்லை. தினமும் வணங்குவோம்.
*நம் குலத்தை கண்ணைப் போல் காத்தருள்வார்கள் குலதெய்வங்கள். |