மாசி மாதத்தின் முப்பது நாட்களும், சூரியக் கதிர்கள், சிவசுப்ரமணியரின் மீது விழுந்து வணங்குவது சிறப்பு.சுமார் 300 வருடங்களுக்கு முன்பு, முருகப்பெருமானை
நோக்கிக் கடும் தவம் இருந்தார் சித்தர் ஒருவர். தவத்தின் போது ஒருநாள் இரவு, அவருடைய கை வேறு, கால் வேறு, உடல் வேறு எனத் தனித் தனியாகக்
கிடந்தது. அதைக் கண்டு ஊரே சிலிர்த்தது; அவரை வணங்கியது.அதையடுத்து, நான் சமாதி நிலையை அடைந்ததும், அந்த இடத்தில் முருகப்பெருமான் சிலை
வைத்து, அவருக்கு ஆலயம் அமைத்து வழிபடுங்கள், என்று அருளினாராம் சித்தர், அதன்படி ஒருநாள் அவர் சமாதி அடைய அங்கே அழகிய சிவசுப்ரமணிய
ஸ்வாமி சிலை வைத்து, ஊர்மக்கள் ஒன்றுகூடி, அங்கே முருகனுக்கு கோயில் அமைத்தனர். அன்று துவங்கி இன்றளவும், அனைவருக்கும் அருளையும்
பொருளையும் அள்ளித் தருகிறார் முருகக் கடவுள். நடராஜர் சன்னதிக்கு எதிரில், சென்னகேசவ பெருமாள் காட்சி தருகிறார். அவரைத் தொழுதபடி ஆஞ்சநேயர்
தரிசனம் அளிக்கிறார். தவிர விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்கை, சண்டிகேஸ்வரர், இடும்பன், வீரபத்திரர், நலவீரர்கள் ஆகியோரையும் தரிசிக்கலாம்.
மாசி மாதத்தின் முப்பது நாட்களும், சூரியக் கதிர்கள், சிவசுப்ரமணியரின் மீது விழுந்து வணங்குவது சிறப்பு. சுமார் 300 வருடங்களுக்கு முன்பு, முருகப்பெருமானை நோக்கிக் கடும் தவம் இருந்தார் சித்தர் ஒருவர். தவத்தின் போது ஒருநாள் இரவு, அவருடைய கை வேறு, கால் வேறு, உடல் வேறு எனத் தனித் தனியாகக் கிடந்தது. அதைக் கண்டு ஊரே சிலிர்த்தது, அவரை வணங்கியது.
அதையடுத்து, நான் சமாதி நிலையை அடைந்ததும், அந்த இடத்தில் முருகப்பெருமான் சிலை வைத்து, அவருக்கு ஆலயம் அமைத்து வழிபடுங்கள், என்று அருளினாராம் சித்தர், அதன்படி ஒருநாள் அவர் சமாதி அடைய அங்கே அழகிய சிவசுப்ரமணிய ஸ்வாமி சிலை வைத்து, ஊர்மக்கள் ஒன்றுகூடி, அங்கே முருகனுக்கு கோயில் அமைத்தனர். அன்று துவங்கி இன்றளவும், அனைவருக்கும் அருளையும் பொருளையும் அள்ளித் தருகிறார் முருகக் கடவுள்.
நடராஜர் சன்னதிக்கு எதிரில், சென்னகேசவ பெருமாள் காட்சி தருகிறார். அவரைத் தொழுதபடி ஆஞ்சநேயர் தரிசனம் அளிக்கிறார். தவிர விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்கை, சண்டிகேஸ்வரர், இடும்பன், வீரபத்திரர், நலவீரர்கள் ஆகியோரையும் தரிசிக்கலாம். |