LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

நாடகவியல் பேராசிரியர் ... கலைஞர் ... ஆய்வறிஞர் திரு. மு. இராமசாமி

நாடகத்துறைப் பேராசிரியர்... நாடகத்துறையில் தனக்கென்று ஒரு தனித்துவச் சிறப்பை ஈட்டியவர்.. திரைத்துறையிலும் தனது திறமையை வெளிப்படுத்திவருபவர்... முற்போக்குச் சிந்தனையாளர்... தனிமனித வாழ்க்கையிலும் சமூகச் செயல்பாடுகளிலும் நேர்மையைக் கடைப்பிடிக்கிறவர்... தனது கொள்கைகளையும் நேர்மையையும் பாதிக்கிற எவ்வித விட்டுக்கொடுப்பையும் எப்போதும் செய்துகொள்ளாதவர்... இவர்தான் பேராசிரியர் மு. இராமசாமி அவர்கள்!
 
இவர் முதுகலைத் தமிழ் படிப்பில் (1971-73) பாளையங்கோட்டை தூயசவேரியர் கல்லூரியில் என்னுடைய வகுப்புத்தோழர் ... மதுரைப் பல்கலைக்கழத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி மறைந்த பெரும்பேராசிரியர் மு. முத்துச்சண்முகனார் அவர்களின் உருவாக்கம்
 
பாளையங்கோட்டை தூயசவேரியர் கல்லூரியில் தமிழ் முதுகலை (1971-1973) படிப்பிலிருந்து எங்களது நட்பு தொடங்கி, தற்போது 45 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது. . மதுரைப் பல்கலைக்கழகத்தில் பேரா. முத்துச்சண்முகம் அவர்களிடம் முனைவர் பட்ட ஆய்வுக்கு நான் விண்ணப்பிப்பதற்குத் துணையாக என்னுடன் வந்தார். என்னைவிட மதிப்பெண் அவருக்கு அதிகம் . எனவே மு.ரா. வையே விண்ணப்பிக்கும்படி பேராசிரியர் கூறினார். எனக்கு இடம் கிடைக்காதே என்பதற்காக வேண்டாம் என்று மறுத்த அவரைக் கட்டாயப்படுத்தி, பேராசிரியரிடம் இணையச் சொன்னேன். பின்னர் மு.ரா. பேராசிரியரின் செல்லப்பிள்ளை ஆனார்.
 
தோற்பாவைக்கூத்தில் முனைவர் பட்டம்.. நாட்டுப்புறவியல், நாடகக்கலை இரண்டிலும் இன்று தலைசிறந்த பேராசிரியர் ... நடிகரும்கூட. அநீதியையோ அநியாயத்தையோ கண்டுவிட்டால், பொங்கி எழுவார். எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார். மதுரைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய அவர் பின்னர் தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் நாடகத்துறையின் தலைவரானார். நிஜநாடக இயக்கக்குழுவைத் தோற்றுவித்து, இன்றுவரை நடத்திவருகிறார். முற்போக்குச் சிந்தனையாளர். அவரது துணைவியார் மறைந்த பேரா. திருமதி செண்பகம் அவர்கள் சிறந்த ஒப்பிலக்கிய ஆய்வாளர்.
by Swathi   on 20 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.