இயக்குனர் மணிரத்னம் மகேஷ்பாபுவை வைத்து படம் ஒன்றை இயக்கப்போகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிக்குமாறு மணிரத்னம் ஸ்ருதி ஹாஸனை அணுகியுள்ளார். ஸ்ருதிக்கும் மணியின் படத்தில் நடிக்க விருப்பம் உள்ளதால் ஓகே சொல்லிவிட்டாராம். மணிரத்தினம் படத்தில் நாகர்ஜுனா, பஹத் பாசில், ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டோரும் நடிக்கவிருக்கிறார்கள். ஐஸ்வர்யா குழந்தை பெற்ற பிறகு நடிக்கும் முதல் படம் இது தான்.
படத்தில் ஸ்ருதி மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். ஐஸ்வர்யா ராய்க்கு நெகட்டிவ் கேரக்டராம். அப்படி என்றால் ஐஸ் தான் வில்லியா? அப்படிதான் சொல்லுன்றாங்க. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக இருக்கிறதாம்.
|