LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- ரெ.கார்த்திகேசு

திரும்புதல்

 

நெடுஞ்சாலையை விட்டு சுங்கைப் பட்டானிக்குள் நுழையும் சாலையில் டோ ல் சாவடியில் கட்டணம் செலுத்திவிட்டு அவர்களுடைய மெர்சிடிஸ் புறப்பட்டபோதே மூர்க்கமான முன்னேற்றத்தின் அடையாளங்கள் எங்கணும் தெரிந்தன. ஒரு பிரமாண்டமான அனைத்துலக சூப்பர்மார்கெட்டின் உள்ளூர் கிளை; பிஸ்ஸா ஹட்; மேக்டோ னல்ட்ஸ். அனைத்துக் கட்டிடங்கள் முன்னாலும் நெருக்கியடித்துக்கொண்டு நிறுத்திய கார்கள்.
நீலக்கலரில் பளபளப்பு ஓடுகள் இட்ட நவீன வரிசை வீடுகள். ஒவ்வொரு வீட்டின் முன்னும் ஒரு புரோட்டோ ன் வாஜா அல்லது டொயோட்டா; சில வீடுகள் முன்னால் வோல்வோக்களும் பிஎம்டபிள்யூக்களும் கூட. 2020-இல் முன்னேற்ற நாடு என்ற அந்தஸ்த்தை அடைய வேண்டும் என்று பந்தயம் ஓடுகின்ற வளரும் மலேசியாவின் காலணித் தடங்கள்.
தான் இந்த ஊருக்கு ஒரு சொகுசு மெர்சிடிஸில் வந்து நுழைவது ஒரு கால வழு, இட வழுப் போல சுடர் உணர்ந்தாள். கார் ஏறிப் பழகிப் பத்தாண்டுகள், மெர்சிடிஸுக்கு உயர்ந்து ஐந்தாண்டுகள் ஆனாலும் இந்த இடத்தில் அது அந்நியமாகத் தெரிகிறது. இது நான் க்ரீச் க்ரீச்சென்று சத்தமிடும் சைக்கிளோட்டிக்கொண்டும் லொட லொடவென்று ஆடும் பஸ்ஸிலும் பள்ளிக்கூடம் சென்று வந்த ஊர். அப்போது இங்கு சூப்பர் மார்க்கெட்டுகள் இல்லை. கிருஷ்ணன் ஜவுளிக் கடையில்தான் துணி வாங்குவதெல்லாம். அங்கேதான் இளம்பிள்ளை வாதத்தில் கால் ஊனமான சரஸ்வதி அக்கா இருந்தார். அவரிடமிருந்துதான் தமிழ்ப் புத்தகம் இரவல் வாங்கிப் படித்தது.
“என்ன பிறந்த ஊர் வந்தவொண்ணப் பேச்சு மூச்சைக் காணோம்?” என்று அருண் கிண்டலாகக் கேட்டான். அவன் பக்கமாகத் திரும்பிக் காலங்குலம் இதழோரம் பிரித்துச் சிரித்தாள். அவனுக்கு இதைச் சொல்லி விளங்க வைப்பது கடினம் என்று தோன்றியது. திரும்பிப் பின்னிருக்கையில் ஜெய் என்ன செய்கிறான் என்று பார்த்தாள். சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தான். “பார் ஜெய், அம்மாவின் பிறந்த ஊர். உன் தாய் உருவாகிய மண். எந்தையும் தாயும் – தோட்டப்புறத் தொழிலாளர் பரம்பரை ஆனாலும் கூட — மகிழ்ந்து குலாவி இருந்த மண்” எனச் சொல்லத் தோன்றிற்று. தூங்குபவனை எழுப்ப மனம் வராமல் மீண்டும் வெளியே பார்த்தாள்.
இவனாவது தன்னோடு தாத்தாவைப் பார்க்க வருகிறேன் ஒப்புக் கொண்டது அவளுக்கு ஆறுதலாக இருந்தது. மூத்தவன் சிங்கப்பூரில் அருணின் அண்ணன் குடும்பத்துடன் தங்கி விட்டான். அங்கே வீடியோ கேம்ஸின் கவர்ச்சி அவனை ஆட்கொண்டு விட்டது. அப்பாவுக்கு நேரடியாக வந்து சொல்லிக் கொள்ளாமல் ஒரு நாளாவது அவர் வீட்டில் தங்காமல் ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட அவளுக்கு மனசில்லை. ஜெய்க்குத் தாத்தாவின் வீட்டில் ஆடுகளும் மாடுகளும் இருப்பதைச் சொன்னவுடன் பிடித்துக் கொண்டான். ஒரு மிருகக் காட்சிசாலையை பார்க்கும் தீவிர விருப்புடன் அவன் தாத்தா வீட்டுக்கு வர இணங்கினான்.
இபுராஹிம் வீதி கடந்து மணிக்கூண்டை நெருங்கியபோது பள்ளிக்கூடமும் தோழிகளும் அவர்களோடு சேர்ந்து பார்த்த படங்களும் பாடல்களும் பசியோடு வீட்டை அடையும் போது மணக்கும் அம்மாவின் கோழிக்கறி வாசனையும் ஒரு கெலடைஸ்கோப்பாக மனசில் சுழன்றுகொண்டிருந்த போது “ஆர் வீ இன் தாத்தாஸ் ஹவுஸ் ஆல்ரெடி?” என்று தனது மழலை ஆங்கிலத்தில் கேட்டுக் கொண்டே எழுந்து உட்கார்ந்தான் ஜெய்.
அவன் அப்படிப் பேசியது கூட அந்தக் கால இட வழுவில்தான் சேர்த்தி எனச் சட்டென்று தோன்றியது. அவன் லண்டனில் பாலர் பள்ளிகளில் படித்தவன். தீவிர கோக்னி வாசத்துடன் ஆங்கிலம் பேசினான்.
“வந்தாச்சி ஜெய். இன்னும் கொஞ்ச தூரம்தான்” என்று சொன்னாள் சுடர்.
*** *** ***
“ஏன் உங்கப்பா இந்த இடத்த விட்டுக் கிளம்ப மாட்டெங்கிறார்?” என்று கேட்டான் அருண். வீடு வந்து சேர்ந்து விருந்துண்டு இன்னும் இரண்டு மணி நேரம்கூட ஆகவில்லை. அவனுக்கு அலுத்ததுபோல் இருந்தது.
சுடருக்கும்தான் புரியவில்லை. ஏன் இந்த முன்னேற்ற ஆரவாரங்கள் அப்பாவைப் பாதிக்கவில்லை? ஏன் பட்டணத்துக்குப் போய் நவீன ஓடுகள் வேய்ந்த கார் போர்ச்சுடன் கூடிய எலெக்ட்ரிக் கேட் உள்ள வீட்டைக் கட்டிக்கொள்ளவில்லை? எப்படி அண்ணனும் அண்ணியும் அவர்களின் இரண்டு குழந்தைகளும் இப்படிக் கிராமச் சூழ்நிலையில் அப்பாவோடு இருக்க ஒப்புக்கொண்டார்கள்? எப்படி அவர்களின் குழந்தைகள் சரளமாகத் தமிழும் தேவையானால் அளவோடு ஆங்கிலமும் பேசிக் குதூகலமாக இருக்கிறார்கள்?
நவீன பொருளாதாரத்தால் அளக்க முடியாத வாழ்க்கை ரகசியங்கள் பல இருக்கின்றன என சுடர் நினைத்துக் கொண்டாள்.
அப்பாவுக்கு முன்னேற்ற எண்ணம் இல்லை என்று சொல்ல முடியுமா? இந்த வீடும் அதன் சுற்றுப் புறமும் இவ்வளவு நேர்த்தியாக இருக்கும்போது…? இருக்கிறது; ஆனால் அந்த முன்னேற்றத்தின் அச்சு வேறு மாதிரியானது.
தன் மனசின் ஒரு மூலையில் இந்த வாழ்க்கை பற்றிய ஏக்கம் ஒன்று குமிழாக எழுந்து ஊதிப்பெருத்து பொக்கென்று உடைந்து மன அறைகளின் எல்லாச் சுவர்களிலும் வழிவதை அவள் உணர முடிந்தது.
அப்பாவின் அப்பா தோட்டப் பாட்டாளியாகத்தான் இந்த நாட்டுக்கு வந்தார். இதே சுங்கைப் பட்டானிக்குப் பக்கத்தில் ஒரு தோட்டத்தில் ஆங்கிலேய காலனித்துவவாதிகளுக்குக் கீழே காடழித்துக் கொட்டைபோட்டு ரப்பர் மரம் வளர்த்து, கொத்தடிமை வாழ்க்கையின் துன்பத்தைத் தணிக்கக் குடிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு ஒரு நாள் கள்ளச் சாரயத்துக்குப் பலியாகிப் போனார்.
அவரது எச்சங்கள் இரண்டும் தோட்டத் தமிழ்ப் பள்ளிக்குப் போயின. மூத்தது அப்பனின் அச்சில் இருந்தது. முரடாக இருந்தது. 8 வயதில் சுருட்டுப் பிடித்தது. 10 வயதில் சொக்கறா வேலைக்குப் போய் சம்பாரித்தது. சம்பாரிக்கும் திமிரில் குடித்தது. பின்னொரு நாள் குடிபோதையில் நடந்து வந்தபோது லோரியில் அடிபட்டுச் செத்தது.
இளையதுதான் அப்பா. அப்பாவின் கதையை இலேசில் அவரிடமிருந்து பறிக்க முடியாது. மிகக் கொஞ்சமாகத்தான் பேசுவார். தன் சாதனைகளை மட்டுப் படுத்திப் பேசித்தான் பழக்கம். தவணை முறையில் அவர் பிள்ளைகளுக்குச் சொல்லியது:
அப்பா காலையில் தமிழ்ப் பள்ளிக்கும் மத்தியானம் அப்பனுக்குத் துணையாக மரம் வெட்டவும் போனார். ஐந்தாம் வகுப்பு முடிக்கும்போதே அப்பனின் சாவு. ஆதரவு இழந்தவுடன் அப்பா படிப்பை விட்டார். ஆனால் தோட்டவேலைக்குப் போகவில்லை. தோட்டத்து மளிகைக் கடையில் பையனாகச் சேர்ந்தார். உழைப்பும் விசுவாசமும் காட்டினார். வியாபாரம் கற்றுகொண்டார். காசு சேர்த்தார். பக்கத்தில் சிறிதாகப் புதிய கடை போட்டார். பழைய கடைக்காரர் பொறாமையில் கடைக்குத் தீ வைத்ததில் அது பொசுங்கியது.
அப்பா கேஸ் எதுவும் போடவில்லை. சண்டை பிடிக்கவில்லை. கடன் வாங்கிக் கடையை மீண்டும் எழுப்பினார். வியாபாரம் வளர்த்தார். தோட்டப்புறப் பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கொண்டார்.
சுதந்திர மலாயாவின் முன்னேற்ற வேகத்தில் விவசாயம் முக்கியம் இழந்து தோட்டங்கள் துண்டுபோடப்பட்டு விலையான நாட்களில் மற்றவர்கள் பண்டத்தையும் பாத்திரத்தையும் தூக்கிக்கொண்டு ஒடிய நாட்களில் அப்பா மட்டும் துண்டு போடப்பட்ட நிலங்களில் ஒன்றை முன்பணம் கொடுத்து வாங்கினார். அப்புறம் முதுகின் வலிமையும் சிக்கனத்தின் சீர்மையும் அதை அவருக்கு முழுதாக்கிக் கொடுத்தன.
ரெண்டு ஏக்கர் இருக்கலாம். தென்னை மரங்கள் நட்டார். தேங்காய் வியாபாரம் நினைத்தால் அபாரமாக ஓடும். நினைத்தால் படுத்துவிடும். விவசாயத்தின் மவுசு குறைந்து விட்டாலும் அப்பாவுக்கு அதில் ஒரு பிடிப்பு ஏற்பட்டுவிட்டது. கலங்காமல் இருந்தார்.
அந்தத் தோட்டத்தில்தான் அண்ணனும் சுடரும் வளர்ந்தது. அவளுக்கு விவரம் தெரிந்ததிலிருந்து அதுதான் வீடு. ரப்பர் காட்டின் கொடுமைகள் ஒழிந்த சுதந்திர வாழ்க்கை. தென்னை மட்டையில் அண்ணன் அவளை உட்கார வைத்து இழுத்திருக்கிறார். வீட்டில் கொப்பரை காய வைத்துப் பக்கத்தில் ஒரு செக்கில் கொடுத்து மணக்க மணக்கத் தேங்காய் எண்ணெய் பிழிந்திருக்கும் நினைவுகள் இருந்தன. அவளுடைய செல்ல ஆடு ஒன்று இருந்தது. அதற்கு அவர்கள் “மாடன்” என்று பெயர் வைத்தார்கள். அவள் “மாடு” என்று கூப்பிட்டால் அது ஓடிவந்து அவள் கையில் பலா மரத் தழை வாங்கித் தின்னும். ஓ, பலாமரம் எங்கே? வெட்டிவிட்டார்கள் போல!
அப்பாவோ அம்மாவோ காலையில் படுக்கை விட்டு எழும் காட்சியை சுடர் பார்த்ததேயில்லை. அவள் எழும்போது அம்மா அடுப்பங்கரையில் ஏதாகிலும் ஆக்கிக்கொண்டிருப்பாள். பின்னாளில் அவள் தோக்கியோவிலும் பாங்காக்கிலும் லண்டனிலும் தன் அப்பார்ட்மன்டில் இருந்து காலையில் துயிலெழும் நாட்களில் அம்மாவின் தாளிப்பின் வாசம் வருவதாகக் கற்பனை செய்து கொண்டிருக்கிறாள்.
அப்பா பூஜையில் உட்கார்ந்திருப்பார். அவளும் அண்ணனும் பள்ளிக்கூடம் போகக் குளித்துவிட்டு வர அவர்களை உட்காரவைத்து ஏதாகிலும் ஒரு தேவாரம் சொல்லாமல் அவர்களை விட மாட்டார்.
“பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடை மேல்….”
தேவாரங்களின் அர்த்தங்கள் விளங்கிக் கொண்டது பின்னால் தமிழ்ப் பள்ளியில். அங்குதான் கல்வி தொடங்கியது. தமிழ் வாத்தியார் பெயர் சுப்பிரமணியம். “சுடர்க்கொடி” என்ற பெயரை “சுடர்” என்று முதன் முதலில் மாற்றி அழைத்தவர் அவர்தான். தட்டுத் தடுமாறிய கல்விதான். மாணவர்கள் வேறு போக்கில்லாததால் அங்கு வந்து சேர்ந்தவர்கள் போல்தான் இருந்தார்கள். ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடுதான் சொல்லிக் கொடுத்தார்கள். எத்தனை சொல்லியும் உரிக்க முடியாத பாறைகளாக இருந்த சிலரை ரோத்தானால் வெளுத்திருக்கிறார்கள். வாத்தியாரிடம் அடி வாங்கிய செய்தியை வீட்டில் போய்ச் சொல்ல முடியாது. சொன்னால் வாத்தியாரைக் கோபப் படுத்திய குற்றத்திற்கு மேலும் தோல் உரியும். இந்த மொக்கை மாணவர்களை அடித்துத் துவைப்பது ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உகந்த பொழுது பொக்காக இருந்தது.
ஆனால் சுடருக்குப் படிப்பு வந்தது. “சூட்டிகையாக இருக்கிறாள்” என வாத்தியார் மெச்சிக் கொள்வார்.
அண்ணன் தமிழ் ஆரம்பப் பள்ளியை முடித்து மலாய் இடைநிலைப் பள்ளிக்குப் போய் அந்தப் புதிய இடத்தில் ஒன்றிப்போக முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். மலாய் மாணவர்கள் சீன மாணவர்களின் பகடிகளைப் பொறுக்க முடியாமல் ஓரிரு ஆண்டுகளில் அப்பாவுக்குத் துணையாக வீட்டில் தங்கிவிட்டார்.
இந்த நிலையில் தன் முறை வந்ததும் அவளும் நடுக்கத்துடன்தான் மலாய் இடைநிலைப் பள்ளிக்குச் சென்றாள். ஆனால் பிடித்துவிட்டது. பிற இன மாணவர்களின் கொடுமை இருந்தது. முதலில் பயத்தில் குனிந்திருந்தாள். பின்னர் குனிந்தால் மேலும் குட்டுவார்கள் என்று தெரிந்தபோது திரும்பிச் சீறினாள். “அனாக் ஹிண்டு” (இந்துப் பிள்ளை) என்று அவளைக் கிண்டலடித்த மலாய் மாணவர்களையும் “கிலிங்ஙா கூய்” (கலிங்கப் பேய்) என்ற சீன மாணவர்களையும் அவள் சண்டை பிடித்து வென்றாள். ஆசிரியர்களிடம் கொண்டு நிறுத்தினாள். பிறகு மற்ற நல்ல மாணவர்கள் அவளை நெருங்கி வந்தார்கள். அவர்களில் ஒருத்தியாக ஏற்றுக்கொள்ளப்பட்டாள். அப்புறம் அவர்களில் சிலர் அவளுடைய நெருங்கிய தோழிகள் ஆனார்கள். இப்போதும் உலகத்தின் பல பாகங்களில் வாழ்ந்துகொண்டு அவளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு இருக்கிறார்கள், லத்தீஃபா, சியூ யின், ரொஹானா…
*** *** ***
ஜெய்க்கு அங்கிருந்த ஆடுகள் மிகவும் பிடித்துப் போய்விட்டன. முதலில் மிரண்டான். அம்மாவின் பஞ்சாபிச் சட்டையின் நுனியைப் பற்றிக்கொண்டு அவள் தொடையோடு ஒட்டிப் போயிருந்தான். ஆனால் அந்த ஆடுகள் அவன் கையில் இருந்த புல்லைச் சாப்பிட வந்து உரசியவுடன் அவற்றோடு ஒட்டிக் கொண்டான். அவன் முழுக்கவும் சொகுசு அடுக்குமாடி வீடுகளில் வாழ்ந்தவன். பாங்கோக்கில் பிறந்தவன். பாங்கோக்கிலும் லண்டனிலும் வாழ்ந்தவன். பிறந்ததிலிருந்து லிஃப்டும் காரும் சூப்பர் மார்க்கெட்டும் கணினியும் அவனுக்கு அத்துப்படி. ஆனால் அவன் பாதங்கள் பச்சை மண்ணை மிதித்ததில்லை. தொலைக்காட்சியில் எனிமல் பிளனெட்டிலும் எப்போதாவது சென்று வரும் விலங்குக் காட்ச்஢ சாலைகளிலும் தவிர்த்து அவன் விலங்குகளைக் கண்டு பழகியதில்லை.
இப்போது இங்கு மாடுகள் இருந்தன. ஆடுகள் இருந்தன. அப்பாவும் அண்ணனும் சில மேல்நாட்டுக் கோழி வகைகளையும் வாங்கி வளர்த்து வந்தார்கள். மூன்று நாய்கள் அவற்றுக்கெல்லாம் காவலாக வளைய வளைய ஓடின. பலகையில் கூடுகள் அடித்து ஒரு ஐந்து ஜோடிப் புறாவும் வளர்த்தார்கள். ஜெய் மருட்சியும் சிரிப்பும் பூரிப்புமாக இருந்தான். டிஸ்கவரி சேனெலில் அவன் தொட முடியாதவைகளியெல்லாம் இங்கு தொடவும் தடவவும் முடிந்தது.
அவ்வப்போது மொய்த்த கொசுக்களை அதிசயத்துடன் கவனித்தான். லண்டனில் அவன் கொசுக்களைப் பார்த்ததில்லை. அவை கடிப்பதை வேடிக்கை பார்த்தான். கொசுவை எப்படி அடிப்பதென்று அண்ணனின் பிள்ளைகள் சொல்லிக் கொடுத்தார்கள். கொசு நசுங்கியதில் வந்த ரத்தத்தைப் பார்த்து அழுதான்.
ஆனால் மற்ற மிருகங்கள் எல்லாம் அவனைப் பூரிக்கச் செய்தன. தொட்டும் தட்டியும் விளையாண்டான். அப்பாவின் நாய்கள் அவனைக் கீழே தள்ளி முகம் நக்கின. கையால் தலநயை மூடிக் கொண்டு கால்களை உதைத்துக்கொண்டுக் குலுங்கக் குலுங்கச் சிரித்தான். அவனை இழுத்து வந்து குளிப்பாட்டப் பெரும் பாடாய்ப் போனது. அப்போதுதான் அப்படிக் கேட்டான்:
“அம்மா, கேன் ஐ ஸ்டே இன் தாத்தாஸ் ஹௌஸ்?”
*** *** ***
எப்படி வாழ்க்கை இந்த அளவுக்கு மாறியது என்பது நினைக்கும்போது சுடருக்கு வியப்பாகத்தான் இருந்தது. இடைநிலைப் பள்ளயில் படித்து முடிந்ததும் அவளுக்கு மலாயாப் பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்தது. ஆங்கிலம் சிறப்புப் பாடமாக எடுத்து கல்விப் போதனையில் டிப்ளோமாவும் வாங்கினாள். அவள் குடும்பத்தில் அவர்கள் பரம்பரையில் முதல் பட்டதாரி. அங்குதான் அருணைச் சந்தித்தாள். பொருளாதாரத் துறையில் இரண்டாம் ஆண்டு மாணவனாக இருந்தான் அருண் என்கிற அருணாச்சலம். அழகன். தன்னைப்போல எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவன் எனத் தெரிந்தது. தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதவனாக இருந்தான். ஆனால் நன்றாக நகைச்சுவையாகத் தமிழ் பேசினான். பேச்சு வளர்ந்து நேசமாகி ஏதோ ஒரு ரசாயனத்தில் அது காதலும் ஆனது. அப்பாவின் ஆசியில் கல்யாணத்தில் பூத்தது.
அவனுக்கு மலேசிய வெளிநாட்டுச் சேவையில் வேலை கிடைத்தது. ஓராண்டு விஸ்மா புத்ராவில் இருந்து பயிற்சி முடிந்தவுடன் அவனைத் தோக்கியோவில் மலேசியத் தூதரகத்தில் துணைச் செயலாளராகப் போட்டார்கள். தோக்கியோவின் நவீன தொழில் நுணுக்கச் சூழலில் சுத்தமான கிருமி நாசினி தெளித்த வாழ்வு அப்பாவின் வீட்டிலிருந்து முற்றிலும் வேறு பட்டிருந்தது. உலகில் வேறு விதமான வாழ்க்கைகளும் இருக்கின்றன என அவளுக்குப் புலனாயிற்று. தூதரகத்தில் மலாய்ச் சீனக் குடும்பங்களோடு அணுக்கமாகப் பழகக் கற்றுக் கொண்டாள். கொஞ்சம் ஜப்பானிய மொழியும் பேசப் பழகினாள்.
அப்புறம் பாங்கோக்கிற்கு மாற்றினார்கள். அங்குதான் முதல் பையன் கணேஷ் பிறந்தான். இரண்டாண்டுகள் கழித்து ஜெய் பிறந்தான். அங்கிருந்து லண்டனுக்கு அருணை முதல் நிலைச் செயலாளராக மாற்றினார்கள். மூன்றாண்டுகள் அங்கிருந்த பின் இப்போது ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சிறிய நாட்டுக்கு அவனை முதல் முறையாகத் தூதராக நியமித்திருக்கிறார்கள். ஓர் இந்திய வமிசாவளி வந்த குடிமகனுக்கு ஒரு மலாய் இஸ்லாமிய நாடு கொடுத்துள்ள இந்த அங்கீகாரம் அவர்கள் இருவரையும் பூரிக்க வைத்தாலும்…
“ஆப்பிரிக்காவுக்கா?” என்று அயர்ந்தாள் சுடர்.
“அப்படித்தான் சுடர். முதலில் இந்த மாதிரி சின்ன தூரமான நாடுகள்ளதான் போடுவாங்க! அப்புறம்தான் ஐரோப்பிய நாடுகள்ள போடுவாங்க! எவ்வளவு பெரிய கௌரவம் இது! வேணான்னு சொல்ல முடியுமா?” என்றான்.
“அப்ப புள்ளைங்க படிப்பு?” மூத்தவன் அப்போதுதான் லண்டனில் படிக்க ஆரம்பித்திருந்தான். ஜெய் பாலர் பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தான்.
“யோசிச்சுட்டேன். ரெண்டு பேரையும் சிங்கப்பூர்லெ என் அண்ணன் வீட்டில விட்டிடுவோம். அங்க அவங்க இண்டர்நேஷனல் ஸ்கூலுக்குப் போவாங்க. எல்லாச் செலவையும் அரசாங்கம் கொடுக்கும்.”
அவளுக்கு இதயத்தைப் பிழிந்தது. ஒரே சமயத்தில் இரண்டு பிள்ளைகளையும் பிரிந்திருப்பதா? என்ன மாதிரி வாழ்க்கை இது? சொகுசுக்குக் குறைவில்லை. ஆனால் வேர்கள் பிடிக்காத வாழ்க்கை. இரண்டாண்டுகள் இங்கே, இரண்டாண்டுகள் அங்கே… ஒரு கலாச்சாரத்தின் முகம் பிடிபடுவதற்குள் இன்னொரு கலாச்சாரத்தின் மத்தியில்… ஒரு மொழியின் நெளிவு சுளிவுகள் நாவில் வரத் தொடங்கும்போது இன்னொரு மொழிக்கு…
ஆனால் அருண் அந்த வாழ்க்கையைப் பெரிதும் அநுபவித்தான். அவன் குடும்பத்தில் எந்தக் கலாச்சார பாரங்களும் இல்லை. தமிழறியாத குடும்பம். தூதரக வாழ்வின் அயராத, திரும்பத் திரும்ப வரும் விருந்துகளும் சடங்குகளும் அவளை அலுக்க வைத்தபோது அவன் அடுத்ததிற்கு ஆர்வத்தோடு காத்திருந்தான். டிசி எண்ணுள்ள காரும் சீருடை அணிந்த ஓட்டுநரும் சூட் போட்டுக் கொள்வதும் சில்க் டை கட்டுவதும் அவனைப் பெரிய மனிதனாக ஆக்குவதாக அவன் நினைத்துக் கொண்டிருந்தான். சுடர் தன் கலாச்சார வேர்களுக்கு ஏங்கினாலும் அவன் நலனே தன் நலன் என இருப்பதும் தன் கலாச்சார வேர்களின் ஒரு பகுதிதான் என அமைதி பெற்றாள்.
ஆனால் இதன் மொத்த விலையாக இரண்டு குழந்தைகளையும் விட்டுப் பிரிந்திருப்பதென்பது எளிதில் சமரசப் படுத்திக் கொள்ளும் விஷயமாக இருக்கவில்லை.
*** *** ***
“விளையாட்றியா சுடர்?” என்று கேட்டான் அருண். அவன் கேள்வியில் கோபம் கொப்புளித்திருந்தது.
அப்பாவின் வீட்டில் அவர்கள் கழித்த இரவு வேறு மாதிரி இருந்தது. அங்கே கார்களின் தொடர்ந்த இரைச்சல்கள் இல்லை. கவிழ்ந்திருக்கும் மோனத்தை மெல்ல வருடும் தென்னை ஓலைகளின் சலசலப்புக்களும் ஆட்டுக்குட்டிகளின் அரைத்தூக்கத்துக் கனைப்புகளுமே இருந்தன. அப்பா எல்லா அறைகளுக்கும் ஜன்னலில் கொசு வலைகள் அடித்து வைத்திருந்தார். ஆகவே உள்ளே கொசுத் தொல்லைகள் இல்லை. ஃபேன் போட்டிருந்தார். ஜன்னலில் கொஞ்சமாகக் காற்று வந்தது.
ஜெய் களைத்துத் தூங்கி விட்டிருந்தான். அவனுக்கு எப்போதும் பெரிய படுக்கையில் தனியாகப் படுத்துத்தான் பழக்கம். ஆனால் இந்த வீட்டில் அப்பாவுடனும் அம்மாவுடனும் ஒரு சிறிய படுக்கையில் உடம்புச் சூட்டைப் பகிர்ந்து கொண்டு படுப்பது அவனுக்குப் பிடித்தமாக இருந்தது. ஆடுகள் பற்றிப் பல கேள்விகள் கேட்டுவிட்டு அயர்ந்து போய் அருணின் மீது ஒரு காலைத் தூக்கிப் போட்டவாறு அவன் தூங்கிப் போனான்.
அப்போதுதான் சுடர் அந்த விஷயத்தை ஆரம்பித்தாள்.
“அருண், நான் ஒண்ணு கேக்கிறேன்!”
அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான். அவள் இத்தனை தயக்கத்துடன் எதனையும் கேட்டதில்லை. கேட்டது எதனையும் அவன் மறுத்ததில்லை. ஆகவே இந்தப் பீடிகை அவனை ஆச்சரியப் படுத்தி இருக்க வேண்டும்.
“ஜெய்க்கு இந்த இடம் பிடிச்சுப் போச்சி! இங்க இருக்க விருப்பப் பட்றான்”
“தெரியும் சுடர். ஆனா நாளைக்கே நாம் குவாலலும்பூர் போயாகணுமே! ரெண்டு நாள் விஸ்மா புத்ராவில பிரிஃபிங் இருக்கே! எப்படி இன்னொரு நாள் இருக்க முடியும்?”
“அருண், நான் சொல்றது இன்னொரு நாளைக்கு இல்ல; சில வருஷங்களுக்கு”
அப்போதுதான் அதிர்ந்து கேட்டான்: “விளையாட்றியா சுடர்?”
“இல்ல அருண். மூத்தவன் சிங்கப்பூர்ல இருந்து படிக்கட்டும். ஜெய் இங்க இருக்கட்டுமே!”
“இங்கயா? இந்தப் பட்டிக் காட்டிலயா? ஏன்?”
“இது பட்டிக் காடு இல்ல அருண். இது என் அப்பாவின் வீடு. தாய் மண். கலாச்சார மண். இதில இருந்துதான் நாம் உருவானோம். பாங்கோக்கிலும் சிங்கப்பூரிலும் உள்ள காங்க்ரீட்டில் இல்ல!”
“என்ன உளர்ர சுடர்? இங்கே அவன் என்ன படிப்பான்? என்ன கத்துக்குவான்?”
“இங்கே அவன் பக்கத்தில் சரஸ்வதி பள்ளிக்கூடத்தில தமிழ் படிப்பான். அப்பாக்கிட்ட இருந்து பண்பாடு கத்துக்குவான். அண்ணன் குழந்தைகள் கிட்ட இருந்து ஒட்டி உறவாப் பழகிற கலாச்சாரம் கத்துக்குவான். குடும்பம்னா என்னன்னு கத்துக்குவான். மண்ணை நேசிப்பான். மனுஷனா இருப்பான்.”
“அவனுக்கு உயர்வான ஆங்கிலக் கல்வியக் கொடுக்க அரசாங்கம் செலவு பண்ணத் தயாரா இருக்கு. என்னை விடப் பெரிய மனுஷனா அவன ஆக்கணும்னு கனவு கண்டுகிட்டிருக்கேன் சுடர்!”
“உயர்வான மனுஷனா வர்ரதுக்குப் பல வழிகள் இருக்கு அருண். மொதல்ல அப்பா அவனுக்குக் கலாச்சார அடித்தளம் போடட்டும். அப்புறம் நீங்க அவனை உங்க அச்சில் வார்க்கக் காலம் இருக்கும்!” அவள் குரல் கொஞ்சம் உடைந்தது போல இருந்தது.
“என்ன ஆச்சு உனக்கு? ஏன் இப்படி உணர்ச்சி வசப்பட்ற?”
கொஞ்சமாக அழுதாள். “மன்னிச்சிக்குங்க அருண். நான் உங்களை அடைஞ்சி நீங்கள் கொடுத்த அன்பான வாழ்க்கையை அடைஞ்சி ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கேன். ஆனா இங்க திரும்பி வந்து அப்பாவோட வாழ்க்கைய மறுபடி புதுசா பாக்கும்போதுதான் எதையெல்லாம் பறிகொடுத்து இதை அடைஞ்சிருக்கோம்னு தெரியிது. நாமாவது இந்த மண் வாசனைகள அனுபவிச்சிட்டு ஒரு சொகுசு வாழ்க்கைக்குப் போனோம். ஆனா நம்ப பிள்ளைகளுக்கு இந்த வாழ்க்கை கொஞ்சமும் கொடுத்து வைக்காமப் போயிடுமோன்னு நெனைக்கிறபோது எனக்குப் பொறுக்கலிங்க! அவனே இன்னைக்கு இங்கே இருக்கட்டுமான்னு கேட்டபோது என்னால முடியாதுன்னு சொல்ல மனம் வரல!”
“சின்னப் பிள்ளை சுடர்! அவனுக்கு என்ன தெரியும்?”
“அவனுக்குத் தெரியுதுங்க! நமக்குத்தான் தெரியாமப் போச்சி!”
விம்மல் பெரிதாக வந்துவிட்டது. அவன் பேசாமல் இருந்தான். அழ விட்டான். முதுகைத் தடவிக் கொடுத்தான். “சரி சரி! ஏதோ பைத்தியம் மாதிரி பேசற! படு! காலையில பேசிக்குவோம்!” என்றான்.
ஜெய்க்குப் போர்த்திவிட்டு அருணுக்கு முதுகைக் காட்டியவாறு ஒருக்களித்துப் படுத்தாள் சுடர். அழுகையின் தீவிரம் தணிந்தவுடன் ஏதோ பெரிய குற்றம் செய்துவிட்டோ ம் என்ற உணர்வு நெஞ்சை அடைத்தது. ஒரு கணம் பித்தம் தலைக்கேறி இருந்த போது யோசிக்காமல் அருணை ஆழமாகப் புண் படுத்திவிட்டோ ம் எனத் தோன்றியது.
இரவு கனமாக இருந்தது. அப்பாவின் ஆசைப் புறாக்கள் மட்டும் குர் குர்ரென இதமாக இரவுப் பேச்சுக்கள் பேசிக் கொண்டிருந்தன. அருணும் தூங்காமல் இருந்தான் எனத் தெரிந்தது. நீண்ட நேரம் புரண்டு புரண்டு படுத்து அப்புறம் அசைவுகள் இல்லாமல் இருந்தான். தூங்கிவிட்டான் போலும் என அவள் நினைத்திருந்த நேரத்தில் அவன் கை நீண்டு அவள் தோளை அழுத்தியது.
(முடிந்தது)
(இந்தக் கதை ரெ.கார்த்திகேசுவின் “இன்னொரு தடவை” (2001) என்னும் சிறுகதைத் தொகுதியிலிருந்து எடுக்கப் பட்டது)
இந்த கதை 14முறை படிக்கப்பட்டது!

         நெடுஞ்சாலையை விட்டு சுங்கைப் பட்டானிக்குள் நுழையும் சாலையில் டோ ல் சாவடியில் கட்டணம் செலுத்திவிட்டு அவர்களுடைய மெர்சிடிஸ் புறப்பட்டபோதே மூர்க்கமான முன்னேற்றத்தின் அடையாளங்கள் எங்கணும் தெரிந்தன. ஒரு பிரமாண்டமான அனைத்துலக சூப்பர்மார்கெட்டின் உள்ளூர் கிளை; பிஸ்ஸா ஹட்; மேக்டோ னல்ட்ஸ். அனைத்துக் கட்டிடங்கள் முன்னாலும் நெருக்கியடித்துக்கொண்டு நிறுத்திய கார்கள்.நீலக்கலரில் பளபளப்பு ஓடுகள் இட்ட நவீன வரிசை வீடுகள். ஒவ்வொரு வீட்டின் முன்னும் ஒரு புரோட்டோ ன் வாஜா அல்லது டொயோட்டா; சில வீடுகள் முன்னால் வோல்வோக்களும் பிஎம்டபிள்யூக்களும் கூட. 2020-இல் முன்னேற்ற நாடு என்ற அந்தஸ்த்தை அடைய வேண்டும் என்று பந்தயம் ஓடுகின்ற வளரும் மலேசியாவின் காலணித் தடங்கள்.தான் இந்த ஊருக்கு ஒரு சொகுசு மெர்சிடிஸில் வந்து நுழைவது ஒரு கால வழு, இட வழுப் போல சுடர் உணர்ந்தாள்.

 

       கார் ஏறிப் பழகிப் பத்தாண்டுகள், மெர்சிடிஸுக்கு உயர்ந்து ஐந்தாண்டுகள் ஆனாலும் இந்த இடத்தில் அது அந்நியமாகத் தெரிகிறது. இது நான் க்ரீச் க்ரீச்சென்று சத்தமிடும் சைக்கிளோட்டிக்கொண்டும் லொட லொடவென்று ஆடும் பஸ்ஸிலும் பள்ளிக்கூடம் சென்று வந்த ஊர். அப்போது இங்கு சூப்பர் மார்க்கெட்டுகள் இல்லை. கிருஷ்ணன் ஜவுளிக் கடையில்தான் துணி வாங்குவதெல்லாம். அங்கேதான் இளம்பிள்ளை வாதத்தில் கால் ஊனமான சரஸ்வதி அக்கா இருந்தார். அவரிடமிருந்துதான் தமிழ்ப் புத்தகம் இரவல் வாங்கிப் படித்தது.“என்ன பிறந்த ஊர் வந்தவொண்ணப் பேச்சு மூச்சைக் காணோம்?” என்று அருண் கிண்டலாகக் கேட்டான். அவன் பக்கமாகத் திரும்பிக் காலங்குலம் இதழோரம் பிரித்துச் சிரித்தாள். அவனுக்கு இதைச் சொல்லி விளங்க வைப்பது கடினம் என்று தோன்றியது. திரும்பிப் பின்னிருக்கையில் ஜெய் என்ன செய்கிறான் என்று பார்த்தாள். சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தான். “பார் ஜெய், அம்மாவின் பிறந்த ஊர். உன் தாய் உருவாகிய மண். எந்தையும் தாயும் – தோட்டப்புறத் தொழிலாளர் பரம்பரை ஆனாலும் கூட — மகிழ்ந்து குலாவி இருந்த மண்” எனச் சொல்லத் தோன்றிற்று. தூங்குபவனை எழுப்ப மனம் வராமல் மீண்டும் வெளியே பார்த்தாள்.இவனாவது தன்னோடு தாத்தாவைப் பார்க்க வருகிறேன் ஒப்புக் கொண்டது அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

 

         மூத்தவன் சிங்கப்பூரில் அருணின் அண்ணன் குடும்பத்துடன் தங்கி விட்டான். அங்கே வீடியோ கேம்ஸின் கவர்ச்சி அவனை ஆட்கொண்டு விட்டது. அப்பாவுக்கு நேரடியாக வந்து சொல்லிக் கொள்ளாமல் ஒரு நாளாவது அவர் வீட்டில் தங்காமல் ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட அவளுக்கு மனசில்லை. ஜெய்க்குத் தாத்தாவின் வீட்டில் ஆடுகளும் மாடுகளும் இருப்பதைச் சொன்னவுடன் பிடித்துக் கொண்டான். ஒரு மிருகக் காட்சிசாலையை பார்க்கும் தீவிர விருப்புடன் அவன் தாத்தா வீட்டுக்கு வர இணங்கினான்.இபுராஹிம் வீதி கடந்து மணிக்கூண்டை நெருங்கியபோது பள்ளிக்கூடமும் தோழிகளும் அவர்களோடு சேர்ந்து பார்த்த படங்களும் பாடல்களும் பசியோடு வீட்டை அடையும் போது மணக்கும் அம்மாவின் கோழிக்கறி வாசனையும் ஒரு கெலடைஸ்கோப்பாக மனசில் சுழன்றுகொண்டிருந்த போது “ஆர் வீ இன் தாத்தாஸ் ஹவுஸ் ஆல்ரெடி?” என்று தனது மழலை ஆங்கிலத்தில் கேட்டுக் கொண்டே எழுந்து உட்கார்ந்தான் ஜெய்.அவன் அப்படிப் பேசியது கூட அந்தக் கால இட வழுவில்தான் சேர்த்தி எனச் சட்டென்று தோன்றியது. அவன் லண்டனில் பாலர் பள்ளிகளில் படித்தவன். தீவிர கோக்னி வாசத்துடன் ஆங்கிலம் பேசினான்.“வந்தாச்சி ஜெய். இன்னும் கொஞ்ச தூரம்தான்” என்று சொன்னாள் சுடர்.

 

        “ஏன் உங்கப்பா இந்த இடத்த விட்டுக் கிளம்ப மாட்டெங்கிறார்?” என்று கேட்டான் அருண். வீடு வந்து சேர்ந்து விருந்துண்டு இன்னும் இரண்டு மணி நேரம்கூட ஆகவில்லை. அவனுக்கு அலுத்ததுபோல் இருந்தது.சுடருக்கும்தான் புரியவில்லை. ஏன் இந்த முன்னேற்ற ஆரவாரங்கள் அப்பாவைப் பாதிக்கவில்லை? ஏன் பட்டணத்துக்குப் போய் நவீன ஓடுகள் வேய்ந்த கார் போர்ச்சுடன் கூடிய எலெக்ட்ரிக் கேட் உள்ள வீட்டைக் கட்டிக்கொள்ளவில்லை? எப்படி அண்ணனும் அண்ணியும் அவர்களின் இரண்டு குழந்தைகளும் இப்படிக் கிராமச் சூழ்நிலையில் அப்பாவோடு இருக்க ஒப்புக்கொண்டார்கள்? எப்படி அவர்களின் குழந்தைகள் சரளமாகத் தமிழும் தேவையானால் அளவோடு ஆங்கிலமும் பேசிக் குதூகலமாக இருக்கிறார்கள்?நவீன பொருளாதாரத்தால் அளக்க முடியாத வாழ்க்கை ரகசியங்கள் பல இருக்கின்றன என சுடர் நினைத்துக் கொண்டாள்.அப்பாவுக்கு முன்னேற்ற எண்ணம் இல்லை என்று சொல்ல முடியுமா? இந்த வீடும் அதன் சுற்றுப் புறமும் இவ்வளவு நேர்த்தியாக இருக்கும்போது…? இருக்கிறது; ஆனால் அந்த முன்னேற்றத்தின் அச்சு வேறு மாதிரியானது.தன் மனசின் ஒரு மூலையில் இந்த வாழ்க்கை பற்றிய ஏக்கம் ஒன்று குமிழாக எழுந்து ஊதிப்பெருத்து பொக்கென்று உடைந்து மன அறைகளின் எல்லாச் சுவர்களிலும் வழிவதை அவள் உணர முடிந்தது.

 

       அப்பாவின் அப்பா தோட்டப் பாட்டாளியாகத்தான் இந்த நாட்டுக்கு வந்தார். இதே சுங்கைப் பட்டானிக்குப் பக்கத்தில் ஒரு தோட்டத்தில் ஆங்கிலேய காலனித்துவவாதிகளுக்குக் கீழே காடழித்துக் கொட்டைபோட்டு ரப்பர் மரம் வளர்த்து, கொத்தடிமை வாழ்க்கையின் துன்பத்தைத் தணிக்கக் குடிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு ஒரு நாள் கள்ளச் சாரயத்துக்குப் பலியாகிப் போனார்.அவரது எச்சங்கள் இரண்டும் தோட்டத் தமிழ்ப் பள்ளிக்குப் போயின. மூத்தது அப்பனின் அச்சில் இருந்தது. முரடாக இருந்தது. 8 வயதில் சுருட்டுப் பிடித்தது. 10 வயதில் சொக்கறா வேலைக்குப் போய் சம்பாரித்தது. சம்பாரிக்கும் திமிரில் குடித்தது. பின்னொரு நாள் குடிபோதையில் நடந்து வந்தபோது லோரியில் அடிபட்டுச் செத்தது.இளையதுதான் அப்பா. அப்பாவின் கதையை இலேசில் அவரிடமிருந்து பறிக்க முடியாது. மிகக் கொஞ்சமாகத்தான் பேசுவார். தன் சாதனைகளை மட்டுப் படுத்திப் பேசித்தான் பழக்கம். தவணை முறையில் அவர் பிள்ளைகளுக்குச் சொல்லியது:அப்பா காலையில் தமிழ்ப் பள்ளிக்கும் மத்தியானம் அப்பனுக்குத் துணையாக மரம் வெட்டவும் போனார். ஐந்தாம் வகுப்பு முடிக்கும்போதே அப்பனின் சாவு. ஆதரவு இழந்தவுடன் அப்பா படிப்பை விட்டார். ஆனால் தோட்டவேலைக்குப் போகவில்லை. தோட்டத்து மளிகைக் கடையில் பையனாகச் சேர்ந்தார். உழைப்பும் விசுவாசமும் காட்டினார். வியாபாரம் கற்றுகொண்டார். காசு சேர்த்தார்.

 

       பக்கத்தில் சிறிதாகப் புதிய கடை போட்டார். பழைய கடைக்காரர் பொறாமையில் கடைக்குத் தீ வைத்ததில் அது பொசுங்கியது.அப்பா கேஸ் எதுவும் போடவில்லை. சண்டை பிடிக்கவில்லை. கடன் வாங்கிக் கடையை மீண்டும் எழுப்பினார். வியாபாரம் வளர்த்தார். தோட்டப்புறப் பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கொண்டார்.சுதந்திர மலாயாவின் முன்னேற்ற வேகத்தில் விவசாயம் முக்கியம் இழந்து தோட்டங்கள் துண்டுபோடப்பட்டு விலையான நாட்களில் மற்றவர்கள் பண்டத்தையும் பாத்திரத்தையும் தூக்கிக்கொண்டு ஒடிய நாட்களில் அப்பா மட்டும் துண்டு போடப்பட்ட நிலங்களில் ஒன்றை முன்பணம் கொடுத்து வாங்கினார். அப்புறம் முதுகின் வலிமையும் சிக்கனத்தின் சீர்மையும் அதை அவருக்கு முழுதாக்கிக் கொடுத்தன.ரெண்டு ஏக்கர் இருக்கலாம். தென்னை மரங்கள் நட்டார். தேங்காய் வியாபாரம் நினைத்தால் அபாரமாக ஓடும். நினைத்தால் படுத்துவிடும். விவசாயத்தின் மவுசு குறைந்து விட்டாலும் அப்பாவுக்கு அதில் ஒரு பிடிப்பு ஏற்பட்டுவிட்டது. கலங்காமல் இருந்தார்.அந்தத் தோட்டத்தில்தான் அண்ணனும் சுடரும் வளர்ந்தது. அவளுக்கு விவரம் தெரிந்ததிலிருந்து அதுதான் வீடு. ரப்பர் காட்டின் கொடுமைகள் ஒழிந்த சுதந்திர வாழ்க்கை. தென்னை மட்டையில் அண்ணன் அவளை உட்கார வைத்து இழுத்திருக்கிறார்.

 

        வீட்டில் கொப்பரை காய வைத்துப் பக்கத்தில் ஒரு செக்கில் கொடுத்து மணக்க மணக்கத் தேங்காய் எண்ணெய் பிழிந்திருக்கும் நினைவுகள் இருந்தன. அவளுடைய செல்ல ஆடு ஒன்று இருந்தது. அதற்கு அவர்கள் “மாடன்” என்று பெயர் வைத்தார்கள். அவள் “மாடு” என்று கூப்பிட்டால் அது ஓடிவந்து அவள் கையில் பலா மரத் தழை வாங்கித் தின்னும். ஓ, பலாமரம் எங்கே? வெட்டிவிட்டார்கள் போல!அப்பாவோ அம்மாவோ காலையில் படுக்கை விட்டு எழும் காட்சியை சுடர் பார்த்ததேயில்லை. அவள் எழும்போது அம்மா அடுப்பங்கரையில் ஏதாகிலும் ஆக்கிக்கொண்டிருப்பாள். பின்னாளில் அவள் தோக்கியோவிலும் பாங்காக்கிலும் லண்டனிலும் தன் அப்பார்ட்மன்டில் இருந்து காலையில் துயிலெழும் நாட்களில் அம்மாவின் தாளிப்பின் வாசம் வருவதாகக் கற்பனை செய்து கொண்டிருக்கிறாள்.அப்பா பூஜையில் உட்கார்ந்திருப்பார். அவளும் அண்ணனும் பள்ளிக்கூடம் போகக் குளித்துவிட்டு வர அவர்களை உட்காரவைத்து ஏதாகிலும் ஒரு தேவாரம் சொல்லாமல் அவர்களை விட மாட்டார்.“பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடை மேல்….”தேவாரங்களின் அர்த்தங்கள் விளங்கிக் கொண்டது பின்னால் தமிழ்ப் பள்ளியில். அங்குதான் கல்வி தொடங்கியது.

 

        தமிழ் வாத்தியார் பெயர் சுப்பிரமணியம். “சுடர்க்கொடி” என்ற பெயரை “சுடர்” என்று முதன் முதலில் மாற்றி அழைத்தவர் அவர்தான். தட்டுத் தடுமாறிய கல்விதான். மாணவர்கள் வேறு போக்கில்லாததால் அங்கு வந்து சேர்ந்தவர்கள் போல்தான் இருந்தார்கள். ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடுதான் சொல்லிக் கொடுத்தார்கள். எத்தனை சொல்லியும் உரிக்க முடியாத பாறைகளாக இருந்த சிலரை ரோத்தானால் வெளுத்திருக்கிறார்கள். வாத்தியாரிடம் அடி வாங்கிய செய்தியை வீட்டில் போய்ச் சொல்ல முடியாது. சொன்னால் வாத்தியாரைக் கோபப் படுத்திய குற்றத்திற்கு மேலும் தோல் உரியும். இந்த மொக்கை மாணவர்களை அடித்துத் துவைப்பது ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உகந்த பொழுது பொக்காக இருந்தது.ஆனால் சுடருக்குப் படிப்பு வந்தது. “சூட்டிகையாக இருக்கிறாள்” என வாத்தியார் மெச்சிக் கொள்வார்.அண்ணன் தமிழ் ஆரம்பப் பள்ளியை முடித்து மலாய் இடைநிலைப் பள்ளிக்குப் போய் அந்தப் புதிய இடத்தில் ஒன்றிப்போக முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். மலாய் மாணவர்கள் சீன மாணவர்களின் பகடிகளைப் பொறுக்க முடியாமல் ஓரிரு ஆண்டுகளில் அப்பாவுக்குத் துணையாக வீட்டில் தங்கிவிட்டார்.இந்த நிலையில் தன் முறை வந்ததும் அவளும் நடுக்கத்துடன்தான் மலாய் இடைநிலைப் பள்ளிக்குச் சென்றாள். ஆனால் பிடித்துவிட்டது. பிற இன மாணவர்களின் கொடுமை இருந்தது.

 

           முதலில் பயத்தில் குனிந்திருந்தாள். பின்னர் குனிந்தால் மேலும் குட்டுவார்கள் என்று தெரிந்தபோது திரும்பிச் சீறினாள். “அனாக் ஹிண்டு” (இந்துப் பிள்ளை) என்று அவளைக் கிண்டலடித்த மலாய் மாணவர்களையும் “கிலிங்ஙா கூய்” (கலிங்கப் பேய்) என்ற சீன மாணவர்களையும் அவள் சண்டை பிடித்து வென்றாள். ஆசிரியர்களிடம் கொண்டு நிறுத்தினாள். பிறகு மற்ற நல்ல மாணவர்கள் அவளை நெருங்கி வந்தார்கள். அவர்களில் ஒருத்தியாக ஏற்றுக்கொள்ளப்பட்டாள். அப்புறம் அவர்களில் சிலர் அவளுடைய நெருங்கிய தோழிகள் ஆனார்கள். இப்போதும் உலகத்தின் பல பாகங்களில் வாழ்ந்துகொண்டு அவளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு இருக்கிறார்கள், லத்தீஃபா, சியூ யின், ரொஹானா…

 

        ஜெய்க்கு அங்கிருந்த ஆடுகள் மிகவும் பிடித்துப் போய்விட்டன. முதலில் மிரண்டான். அம்மாவின் பஞ்சாபிச் சட்டையின் நுனியைப் பற்றிக்கொண்டு அவள் தொடையோடு ஒட்டிப் போயிருந்தான். ஆனால் அந்த ஆடுகள் அவன் கையில் இருந்த புல்லைச் சாப்பிட வந்து உரசியவுடன் அவற்றோடு ஒட்டிக் கொண்டான். அவன் முழுக்கவும் சொகுசு அடுக்குமாடி வீடுகளில் வாழ்ந்தவன். பாங்கோக்கில் பிறந்தவன். பாங்கோக்கிலும் லண்டனிலும் வாழ்ந்தவன். பிறந்ததிலிருந்து லிஃப்டும் காரும் சூப்பர் மார்க்கெட்டும் கணினியும் அவனுக்கு அத்துப்படி. ஆனால் அவன் பாதங்கள் பச்சை மண்ணை மிதித்ததில்லை. தொலைக்காட்சியில் எனிமல் பிளனெட்டிலும் எப்போதாவது சென்று வரும் விலங்குக் காட்ச்஢ சாலைகளிலும் தவிர்த்து அவன் விலங்குகளைக் கண்டு பழகியதில்லை.இப்போது இங்கு மாடுகள் இருந்தன. ஆடுகள் இருந்தன. அப்பாவும் அண்ணனும் சில மேல்நாட்டுக் கோழி வகைகளையும் வாங்கி வளர்த்து வந்தார்கள். மூன்று நாய்கள் அவற்றுக்கெல்லாம் காவலாக வளைய வளைய ஓடின. பலகையில் கூடுகள் அடித்து ஒரு ஐந்து ஜோடிப் புறாவும் வளர்த்தார்கள். ஜெய் மருட்சியும் சிரிப்பும் பூரிப்புமாக இருந்தான். டிஸ்கவரி சேனெலில் அவன் தொட முடியாதவைகளியெல்லாம் இங்கு தொடவும் தடவவும் முடிந்தது.அவ்வப்போது மொய்த்த கொசுக்களை அதிசயத்துடன் கவனித்தான். லண்டனில் அவன் கொசுக்களைப் பார்த்ததில்லை. அவை கடிப்பதை வேடிக்கை பார்த்தான். கொசுவை எப்படி அடிப்பதென்று அண்ணனின் பிள்ளைகள் சொல்லிக் கொடுத்தார்கள். கொசு நசுங்கியதில் வந்த ரத்தத்தைப் பார்த்து அழுதான்.ஆனால் மற்ற மிருகங்கள் எல்லாம் அவனைப் பூரிக்கச் செய்தன. தொட்டும் தட்டியும் விளையாண்டான். அப்பாவின் நாய்கள் அவனைக் கீழே தள்ளி முகம் நக்கின. கையால் தலநயை மூடிக் கொண்டு கால்களை உதைத்துக்கொண்டுக் குலுங்கக் குலுங்கச் சிரித்தான். அவனை இழுத்து வந்து குளிப்பாட்டப் பெரும் பாடாய்ப் போனது. அப்போதுதான் அப்படிக் கேட்டான்:“அம்மா, கேன் ஐ ஸ்டே இன் தாத்தாஸ் ஹௌஸ்?”

 

       எப்படி வாழ்க்கை இந்த அளவுக்கு மாறியது என்பது நினைக்கும்போது சுடருக்கு வியப்பாகத்தான் இருந்தது. இடைநிலைப் பள்ளயில் படித்து முடிந்ததும் அவளுக்கு மலாயாப் பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்தது. ஆங்கிலம் சிறப்புப் பாடமாக எடுத்து கல்விப் போதனையில் டிப்ளோமாவும் வாங்கினாள். அவள் குடும்பத்தில் அவர்கள் பரம்பரையில் முதல் பட்டதாரி. அங்குதான் அருணைச் சந்தித்தாள். பொருளாதாரத் துறையில் இரண்டாம் ஆண்டு மாணவனாக இருந்தான் அருண் என்கிற அருணாச்சலம். அழகன். தன்னைப்போல எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவன் எனத் தெரிந்தது. தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதவனாக இருந்தான். ஆனால் நன்றாக நகைச்சுவையாகத் தமிழ் பேசினான். பேச்சு வளர்ந்து நேசமாகி ஏதோ ஒரு ரசாயனத்தில் அது காதலும் ஆனது. அப்பாவின் ஆசியில் கல்யாணத்தில் பூத்தது.அவனுக்கு மலேசிய வெளிநாட்டுச் சேவையில் வேலை கிடைத்தது. ஓராண்டு விஸ்மா புத்ராவில் இருந்து பயிற்சி முடிந்தவுடன் அவனைத் தோக்கியோவில் மலேசியத் தூதரகத்தில் துணைச் செயலாளராகப் போட்டார்கள். தோக்கியோவின் நவீன தொழில் நுணுக்கச் சூழலில் சுத்தமான கிருமி நாசினி தெளித்த வாழ்வு அப்பாவின் வீட்டிலிருந்து முற்றிலும் வேறு பட்டிருந்தது. உலகில் வேறு விதமான வாழ்க்கைகளும் இருக்கின்றன என அவளுக்குப் புலனாயிற்று. தூதரகத்தில் மலாய்ச் சீனக் குடும்பங்களோடு அணுக்கமாகப் பழகக் கற்றுக் கொண்டாள். கொஞ்சம் ஜப்பானிய மொழியும் பேசப் பழகினாள்.அப்புறம் பாங்கோக்கிற்கு மாற்றினார்கள். அங்குதான் முதல் பையன் கணேஷ் பிறந்தான். இரண்டாண்டுகள் கழித்து ஜெய் பிறந்தான். அங்கிருந்து லண்டனுக்கு அருணை முதல் நிலைச் செயலாளராக மாற்றினார்கள்.

 

         மூன்றாண்டுகள் அங்கிருந்த பின் இப்போது ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சிறிய நாட்டுக்கு அவனை முதல் முறையாகத் தூதராக நியமித்திருக்கிறார்கள். ஓர் இந்திய வமிசாவளி வந்த குடிமகனுக்கு ஒரு மலாய் இஸ்லாமிய நாடு கொடுத்துள்ள இந்த அங்கீகாரம் அவர்கள் இருவரையும் பூரிக்க வைத்தாலும்…“ஆப்பிரிக்காவுக்கா?” என்று அயர்ந்தாள் சுடர்.“அப்படித்தான் சுடர். முதலில் இந்த மாதிரி சின்ன தூரமான நாடுகள்ளதான் போடுவாங்க! அப்புறம்தான் ஐரோப்பிய நாடுகள்ள போடுவாங்க! எவ்வளவு பெரிய கௌரவம் இது! வேணான்னு சொல்ல முடியுமா?” என்றான்.“அப்ப புள்ளைங்க படிப்பு?” மூத்தவன் அப்போதுதான் லண்டனில் படிக்க ஆரம்பித்திருந்தான். ஜெய் பாலர் பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தான்.“யோசிச்சுட்டேன். ரெண்டு பேரையும் சிங்கப்பூர்லெ என் அண்ணன் வீட்டில விட்டிடுவோம். அங்க அவங்க இண்டர்நேஷனல் ஸ்கூலுக்குப் போவாங்க. எல்லாச் செலவையும் அரசாங்கம் கொடுக்கும்.”அவளுக்கு இதயத்தைப் பிழிந்தது. ஒரே சமயத்தில் இரண்டு பிள்ளைகளையும் பிரிந்திருப்பதா? என்ன மாதிரி வாழ்க்கை இது? சொகுசுக்குக் குறைவில்லை. ஆனால் வேர்கள் பிடிக்காத வாழ்க்கை.

 

         இரண்டாண்டுகள் இங்கே, இரண்டாண்டுகள் அங்கே… ஒரு கலாச்சாரத்தின் முகம் பிடிபடுவதற்குள் இன்னொரு கலாச்சாரத்தின் மத்தியில்… ஒரு மொழியின் நெளிவு சுளிவுகள் நாவில் வரத் தொடங்கும்போது இன்னொரு மொழிக்கு…ஆனால் அருண் அந்த வாழ்க்கையைப் பெரிதும் அநுபவித்தான். அவன் குடும்பத்தில் எந்தக் கலாச்சார பாரங்களும் இல்லை. தமிழறியாத குடும்பம். தூதரக வாழ்வின் அயராத, திரும்பத் திரும்ப வரும் விருந்துகளும் சடங்குகளும் அவளை அலுக்க வைத்தபோது அவன் அடுத்ததிற்கு ஆர்வத்தோடு காத்திருந்தான். டிசி எண்ணுள்ள காரும் சீருடை அணிந்த ஓட்டுநரும் சூட் போட்டுக் கொள்வதும் சில்க் டை கட்டுவதும் அவனைப் பெரிய மனிதனாக ஆக்குவதாக அவன் நினைத்துக் கொண்டிருந்தான். சுடர் தன் கலாச்சார வேர்களுக்கு ஏங்கினாலும் அவன் நலனே தன் நலன் என இருப்பதும் தன் கலாச்சார வேர்களின் ஒரு பகுதிதான் என அமைதி பெற்றாள்.ஆனால் இதன் மொத்த விலையாக இரண்டு குழந்தைகளையும் விட்டுப் பிரிந்திருப்பதென்பது எளிதில் சமரசப் படுத்திக் கொள்ளும் விஷயமாக இருக்கவில்லை.

 

         விளையாட்றியா சுடர்?” என்று கேட்டான் அருண். அவன் கேள்வியில் கோபம் கொப்புளித்திருந்தது.அப்பாவின் வீட்டில் அவர்கள் கழித்த இரவு வேறு மாதிரி இருந்தது. அங்கே கார்களின் தொடர்ந்த இரைச்சல்கள் இல்லை. கவிழ்ந்திருக்கும் மோனத்தை மெல்ல வருடும் தென்னை ஓலைகளின் சலசலப்புக்களும் ஆட்டுக்குட்டிகளின் அரைத்தூக்கத்துக் கனைப்புகளுமே இருந்தன. அப்பா எல்லா அறைகளுக்கும் ஜன்னலில் கொசு வலைகள் அடித்து வைத்திருந்தார். ஆகவே உள்ளே கொசுத் தொல்லைகள் இல்லை. ஃபேன் போட்டிருந்தார். ஜன்னலில் கொஞ்சமாகக் காற்று வந்தது.ஜெய் களைத்துத் தூங்கி விட்டிருந்தான். அவனுக்கு எப்போதும் பெரிய படுக்கையில் தனியாகப் படுத்துத்தான் பழக்கம். ஆனால் இந்த வீட்டில் அப்பாவுடனும் அம்மாவுடனும் ஒரு சிறிய படுக்கையில் உடம்புச் சூட்டைப் பகிர்ந்து கொண்டு படுப்பது அவனுக்குப் பிடித்தமாக இருந்தது. ஆடுகள் பற்றிப் பல கேள்விகள் கேட்டுவிட்டு அயர்ந்து போய் அருணின் மீது ஒரு காலைத் தூக்கிப் போட்டவாறு அவன் தூங்கிப் போனான்.அப்போதுதான் சுடர் அந்த விஷயத்தை ஆரம்பித்தாள்.“அருண், நான் ஒண்ணு கேக்கிறேன்!”அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான். அவள் இத்தனை தயக்கத்துடன் எதனையும் கேட்டதில்லை. கேட்டது எதனையும் அவன் மறுத்ததில்லை. ஆகவே இந்தப் பீடிகை அவனை ஆச்சரியப் படுத்தி இருக்க வேண்டும்.“ஜெய்க்கு இந்த இடம் பிடிச்சுப் போச்சி! இங்க இருக்க விருப்பப் பட்றான்”“தெரியும் சுடர். ஆனா நாளைக்கே நாம் குவாலலும்பூர் போயாகணுமே! ரெண்டு நாள் விஸ்மா புத்ராவில பிரிஃபிங் இருக்கே! எப்படி இன்னொரு நாள் இருக்க முடியும்?”“அருண், நான் சொல்றது இன்னொரு நாளைக்கு இல்ல; சில வருஷங்களுக்கு”அப்போதுதான் அதிர்ந்து கேட்டான்: “விளையாட்றியா சுடர்?”“இல்ல அருண்.

 

          மூத்தவன் சிங்கப்பூர்ல இருந்து படிக்கட்டும். ஜெய் இங்க இருக்கட்டுமே!”“இங்கயா? இந்தப் பட்டிக் காட்டிலயா? ஏன்?”“இது பட்டிக் காடு இல்ல அருண். இது என் அப்பாவின் வீடு. தாய் மண். கலாச்சார மண். இதில இருந்துதான் நாம் உருவானோம். பாங்கோக்கிலும் சிங்கப்பூரிலும் உள்ள காங்க்ரீட்டில் இல்ல!”“என்ன உளர்ர சுடர்? இங்கே அவன் என்ன படிப்பான்? என்ன கத்துக்குவான்?”“இங்கே அவன் பக்கத்தில் சரஸ்வதி பள்ளிக்கூடத்தில தமிழ் படிப்பான். அப்பாக்கிட்ட இருந்து பண்பாடு கத்துக்குவான். அண்ணன் குழந்தைகள் கிட்ட இருந்து ஒட்டி உறவாப் பழகிற கலாச்சாரம் கத்துக்குவான். குடும்பம்னா என்னன்னு கத்துக்குவான். மண்ணை நேசிப்பான். மனுஷனா இருப்பான்.”“அவனுக்கு உயர்வான ஆங்கிலக் கல்வியக் கொடுக்க அரசாங்கம் செலவு பண்ணத் தயாரா இருக்கு. என்னை விடப் பெரிய மனுஷனா அவன ஆக்கணும்னு கனவு கண்டுகிட்டிருக்கேன் சுடர்!”“உயர்வான மனுஷனா வர்ரதுக்குப் பல வழிகள் இருக்கு அருண். மொதல்ல அப்பா அவனுக்குக் கலாச்சார அடித்தளம் போடட்டும். அப்புறம் நீங்க அவனை உங்க அச்சில் வார்க்கக் காலம் இருக்கும்!” அவள் குரல் கொஞ்சம் உடைந்தது போல இருந்தது.“என்ன ஆச்சு உனக்கு? ஏன் இப்படி உணர்ச்சி வசப்பட்ற?”கொஞ்சமாக அழுதாள். “மன்னிச்சிக்குங்க அருண்.

 

         நான் உங்களை அடைஞ்சி நீங்கள் கொடுத்த அன்பான வாழ்க்கையை அடைஞ்சி ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கேன். ஆனா இங்க திரும்பி வந்து அப்பாவோட வாழ்க்கைய மறுபடி புதுசா பாக்கும்போதுதான் எதையெல்லாம் பறிகொடுத்து இதை அடைஞ்சிருக்கோம்னு தெரியிது. நாமாவது இந்த மண் வாசனைகள அனுபவிச்சிட்டு ஒரு சொகுசு வாழ்க்கைக்குப் போனோம். ஆனா நம்ப பிள்ளைகளுக்கு இந்த வாழ்க்கை கொஞ்சமும் கொடுத்து வைக்காமப் போயிடுமோன்னு நெனைக்கிறபோது எனக்குப் பொறுக்கலிங்க! அவனே இன்னைக்கு இங்கே இருக்கட்டுமான்னு கேட்டபோது என்னால முடியாதுன்னு சொல்ல மனம் வரல!”“சின்னப் பிள்ளை சுடர்! அவனுக்கு என்ன தெரியும்?”“அவனுக்குத் தெரியுதுங்க! நமக்குத்தான் தெரியாமப் போச்சி!”விம்மல் பெரிதாக வந்துவிட்டது. அவன் பேசாமல் இருந்தான். அழ விட்டான். முதுகைத் தடவிக் கொடுத்தான். “சரி சரி! ஏதோ பைத்தியம் மாதிரி பேசற! படு! காலையில பேசிக்குவோம்!” என்றான்.ஜெய்க்குப் போர்த்திவிட்டு அருணுக்கு முதுகைக் காட்டியவாறு ஒருக்களித்துப் படுத்தாள் சுடர். அழுகையின் தீவிரம் தணிந்தவுடன் ஏதோ பெரிய குற்றம் செய்துவிட்டோ ம் என்ற உணர்வு நெஞ்சை அடைத்தது. ஒரு கணம் பித்தம் தலைக்கேறி இருந்த போது யோசிக்காமல் அருணை ஆழமாகப் புண் படுத்திவிட்டோ ம் எனத் தோன்றியது.இரவு கனமாக இருந்தது.

 

     அப்பாவின் ஆசைப் புறாக்கள் மட்டும் குர் குர்ரென இதமாக இரவுப் பேச்சுக்கள் பேசிக் கொண்டிருந்தன. அருணும் தூங்காமல் இருந்தான் எனத் தெரிந்தது. நீண்ட நேரம் புரண்டு புரண்டு படுத்து அப்புறம் அசைவுகள் இல்லாமல் இருந்தான். தூங்கிவிட்டான் போலும் என அவள் நினைத்திருந்த நேரத்தில் அவன் கை நீண்டு அவள் தோளை அழுத்தியது.(முடிந்தது)(இந்தக் கதை ரெ.கார்த்திகேசுவின் “இன்னொரு தடவை” (2001) என்னும் சிறுகதைத் தொகுதியிலிருந்து எடுக்கப் பட்டது)இந்த கதை 14முறை படிக்கப்பட்டது!

by parthi   on 15 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.