LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி

உயிருக்குள் உயிர்

உன்னைத் தொட்டுறவாடும்

உன் தோழி விரல்களாய் - நான்

இருக்கக் கூடாதோ!



உன் விழியோடு உரசி உறவாடும்

பார்வைக் கதிர்களாய் - நான்

பரவக்கூடாதோ!



உன் மார்போடு பட்டுறவாடும்

பாசி மணிகளாய் - நான்

பற்றக்கூடாதோ!



உன் கூந்தலை கட்டி உறவாடும்

மலர் கண்ணியாய் - நான்

மாறக்கூடாதோ!



உன் பாதங்களைக் கொஞ்சி உறவாடும்

கொழுசு மணிகளாய் - நான்

மயங்கக்கூடாதோ!



உன் இதழ்மேல் தவழும்

தேனீர்த் துளிகளாய் - நான்

துளிர்க்கக்கூடாதோ!



உன் உள்ளம் கலக்கும்

உயிர் மூச்சாய் - நான்

உருகக்கூடாதோ!



உன் பொன் பாதம் உரசும்

பாத அணிகளாய் - நான்

பற்றக்கூடாதோ!



உன் மேனி நனைக்கும்

நன்னீர்த் துளிகளாய் - நான்

நழுவக்கூடாதோ!



தினம் நீ முகம்பார்க்கும்

கண்ணாடியாய் - நான்

இரசிக்கக் கூடாதோ!



கண் இமையில் மயங்கி நிற்கும்

கரு மையாய் - நான்

கரையக்கூடாதோ!



உன் உடலோடு உறவாடும்

உடையாக - நான்

ஆதல்கூடாதோ!



என் உள்ளத்துள் உன்னை

உயிரோடு உயிராக - நான்

உருமாறக்கூடாதோ!

by Swathi   on 07 Mar 2015  0 Comments
Tags: உயிருக்குள் உயிர்   Uyirukkul Uyir   கா.பாலபாரதியின் கவிதைகள்   Kaa.Baala Bharathi Kavithaigal   Kaa.Baala Bharathi Poems   Uyirukkul Uyir Kavithai   Kavithai about Uyirukkul Uyir  
 தொடர்புடையவை-Related Articles
எங்கள் தமிழகம் எங்கள் தமிழகம்
நெஞ்சைத் தருவாரோ நெஞ்சைத் தருவாரோ
யாருக்காக வாழ்வேன் யாருக்காக வாழ்வேன்
(இ)(தி)ரும(ன)(ண)ம் (இ)(தி)ரும(ன)(ண)ம்
அவளைப் பாடவா அவளைப் பாடவா
தயக்கம் தவிர் தயக்கம் தவிர்
அது இது அது இது
தோற்றுப் போனேன் தோற்றுப் போனேன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.