ஆதிகேசவர் சிலை முழுக்க சாளக்கிராமத்தால் செய்யப்பட்டதாகும். பிரதோஷ நாளன்று லட்சுமி நரசிம்மருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. அந்நேரத்தில்
சுவாமியை வழிபட்டால் பயங்கள் நீங்கும், எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும் என்கிறார்கள்.இத்தலத்தில் சிவன் சங்கமேஸ்வரராகவும், திருமால்
ஆதிகேசவராகவும் அருளுகின்றனர். சிவன் வலது புறத்தில் லிங்க வடிவத்தில் இருக்க, திருமால் இடது புறத்தில் அர்ச்சாவதார (மனித வடிவம்) வடிவத்தில்
இருக்கிறார். இவ்விருவரின் சன்னதிகளுக்கு இடையே அம்பாள் வேதநாயகி, தாயார் சவுந்திரவல்லியின் சன்னதிகள் அமைந்துள்ளது. அம்பாள், தாயாருக்கு
சிவன், பெருமாள் இருவரும் பாதுகாப்பாக இருந்து அருளுவதாக இக்கோலத்தை சொல்கிறார்கள். தம்பதியர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் அவர்களுக்குள்
ஒற்றுமை கூடும், தாம்பத்யம் சிறக்கும் என்பது நம்பிக்கை.வடக்கு மற்றும் தென் திசையில் இரண்டு ராஜகோபுரங்கள் இருக்கிறது. இவை சிவன், ஆதிகேசவர்
இருவருக்கும் பொதுவானதாக கருதப்படுகிறது. பிரதான வாசல் வழியே நுழைந்தவுடன் வலப்புறத்தில் ஆதிகேசவர் சன்னதி இருக்கிறது. ஒரே தலத்தில்
சிவன், திருமால் இருவரையும் தரிசிப்பது விசேஷமான பலன்களைத் தரும்.
ஆதிகேசவர் சிலை முழுக்க சாளக்கிராமத்தால் செய்யப்பட்டதாகும். பிரதோஷ நாளன்று லட்சுமி நரசிம்மருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. அந்நேரத்தில் சுவாமியை வழிபட்டால் பயங்கள் நீங்கும், எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும் என்கிறார்கள். இத்தலத்தில் சிவன் சங்கமேஸ்வரராகவும், திருமால் ஆதிகேசவராகவும் அருளுகின்றனர். சிவன் வலது புறத்தில் லிங்க வடிவத்தில் இருக்க, திருமால் இடது புறத்தில் அர்ச்சாவதார வடிவத்தில் இருக்கிறார்.
இவ்விருவரின் சன்னதிகளுக்கு இடையே அம்பாள் வேதநாயகி, தாயார் சவுந்திரவல்லியின் சன்னதிகள் அமைந்துள்ளது. அம்பாள், தாயாருக்கு சிவன், பெருமாள் இருவரும் பாதுகாப்பாக இருந்து அருளுவதாக இக்கோலத்தை சொல்கிறார்கள். தம்பதியர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் அவர்களுக்குள் ஒற்றுமை கூடும், தாம்பத்யம் சிறக்கும் என்பது நம்பிக்கை.
வடக்கு மற்றும் தென் திசையில் இரண்டு ராஜகோபுரங்கள் இருக்கிறது. இவை சிவன், ஆதிகேசவர் இருவருக்கும் பொதுவானதாக கருதப்படுகிறது. பிரதான வாசல் வழியே நுழைந்தவுடன் வலப்புறத்தில் ஆதிகேசவர் சன்னதி இருக்கிறது. ஒரே தலத்தில் சிவன், திருமால் இருவரையும் தரிசிப்பது விசேஷமான பலன்களைத் தரும். |