இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் மூன்று நதிகள் பாய்வதால் "தீர்த்த சங்கமம்' என்றும், ஒரே ராஜகோபுரத்தின் கீழ்,
சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் அமைந்துள்ளதால் "÷க்ஷத்திர சங்கமம்' என்றும், அமிர்தலிங்கேஸ்வரர், சகஸ்ரலிங்கேஸ்வரர் மற்றும் காயத்ரி
லிங்கேஸ்வரர் என பல்வேறு மூர்த்திகள் ஒருங்கினைந்து உள்ளதால் "மூர்த்தி சங்கமம்' என்றும் அழைக்கப்படுகிறது.ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த
இந்த கோயிலைச் சுற்றிலும் பல்வேறு லிங்கங்கள் இருந்தாலும், கோயில் வளாகத்திலேயே காவிரியாற்றோரம் "காயத்ரி லிங்கேஸ்வரர்' தனி
சன்னதியில் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கிச் சென்றால் வேண்டிய வரங்களை உடனே பெறலாம் என்பது ஐதீகம். பராசர முனிவர், குபேரர்,
சூரியன் ஆகியோர் மூலஸ்தானம் வந்து வணங்கிச் சென்றனர். இத்தல விருட்சம் இலந்தை மரம். காயத்ரி லிங்கேஸ்வரர் முன்னால் சென்று, காயத்ரி
மந்திரத்தை சொல்லத் தகுதியுடைய உச்சரிப்பு பிறழாமல் சொல்லக்கூடியவர்கள், ஒரு தடவை சொன்னால் போதும், லட்சம் தடவை சொன்ன பலன்
கிட்டும்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் மூன்று நதிகள் பாய்வதால் "தீர்த்த சங்கமம்' என்றும், ஒரே ராஜகோபுரத்தின் கீழ், சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் அமைந்துள்ளதால் அமிர்தலிங்கேஸ்வரர், சகஸ்ரலிங்கேஸ்வரர் மற்றும் காயத்ரி லிங்கேஸ்வரர் என பல்வேறு மூர்த்திகள் ஒருங்கினைந்து உள்ளதால் "மூர்த்தி சங்கமம்' என்றும் அழைக்கப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலைச் சுற்றிலும் பல்வேறு லிங்கங்கள் இருந்தாலும், கோயில் வளாகத்திலேயே காவிரியாற்றோரம் "காயத்ரி லிங்கேஸ்வரர்' தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
இவரை வணங்கிச் சென்றால் வேண்டிய வரங்களை உடனே பெறலாம் என்பது ஐதீகம். பராசர முனிவர், குபேரர், சூரியன் ஆகியோர் மூலஸ்தானம் வந்து வணங்கிச் சென்றனர். இத்தல விருட்சம் இலந்தை மரம். காயத்ரி லிங்கேஸ்வரர் முன்னால் சென்று, காயத்ரி மந்திரத்தை சொல்லத் தகுதியுடைய உச்சரிப்பு பிறழாமல் சொல்லக்கூடியவர்கள், ஒரு தடவை சொன்னால் போதும், லட்சம் தடவை சொன்ன பலன் கிட்டும்.
|