ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரக மூர்த்தமானது. பன்னெடுங்காலத்துக்கு முன்பு சுயம்புவாகத் தோன்றியது சிறப்பு.சுமார் 500 வருடங்கள் பழைமை மிக்க
திருக்கோயில் இது. ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரக மூர்த்தமானது. பன்னெடுங்காலத்துக்கு முன்பு சுயம்புவாகத் தோன்றியது. அதற்குச் சின்னதாக ஒரு சன்னதி
அமைத்து, தங்களின் இஷ்ட தெய்வமாகவும் குலதெய்வமாகவும் வழிபடத் துவங்கினார்கள் ஊர்மக்கள். அடுத்தடுத்த கால கட்டங்களில், ஸ்ரீகிருஷ்ணரின்
பேரருளைப் பெற்று செழித்தவர்கள், கோயிலுக்கு நில புலன்களை வழங்கினார்கள்; திருப்பணிக்கு உதவினார்கள்!அர்த்த மண்டபம், மகா மண்டபம் என
பிரமாண்டமாகத் திகழ்கிறது ஸ்ரீகிருஷ்ணபெருமாள் கோயில். கிழக்குப் பார்த்தபடி காட்சி தரும் ஸ்ரீகிருஷ்ணர், கொள்ளை அழகு ! இவருக்கு அவல்
நைவேத்தியம் செய்து வழிபட்டால், பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறலாம்; திருமண வரம் கைகூடும். நஷ்டத்தில் இயங்கி வந்த வியாபாரம் லாபம்
கொழிக்கும் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். இந்தத் தலத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர், மிகவும் விசேஷமானவர். இவருக்கு புதன் மற்றும்
சனிக்கிழமைகளில் வெற்றிலை மாலை சார்த்திப் பிரார்த்தித்தால், மனக்கிலேசங்கள் யாவும் விலகிவிடும்; எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும் என்பது
இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை. புரட்டாசி சனிக்கிழமைகள், ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி ஆகியவை சிறப்புற கொண்டாடப்படுகின்றன.
ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரக மூர்த்தமானது. பன்னெடுங்காலத்துக்கு முன்பு சுயம்புவாகத் தோன்றியது சிறப்பு. சுமார் 500 வருடங்கள் பழைமை மிக்க திருக்கோயில் இது. ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரக மூர்த்தமானது. பன்னெடுங்காலத்துக்கு முன்பு சுயம்புவாகத் தோன்றியது. அதற்குச் சின்னதாக ஒரு சன்னதி அமைத்து, தங்களின் இஷ்ட தெய்வமாகவும் குலதெய்வமாகவும் வழிபடத் துவங்கினார்கள் ஊர்மக்கள்.
அடுத்தடுத்த கால கட்டங்களில், ஸ்ரீகிருஷ்ணரின் பேரருளைப் பெற்று செழித்தவர்கள், கோயிலுக்கு நில புலன்களை வழங்கினார்கள், திருப்பணிக்கு உதவினார்கள்!அர்த்த மண்டபம், மகா மண்டபம் என பிரமாண்டமாகத் திகழ்கிறது ஸ்ரீகிருஷ்ணபெருமாள் கோயில். கிழக்குப் பார்த்தபடி காட்சி தரும் ஸ்ரீகிருஷ்ணர், கொள்ளை அழகு, இவருக்கு அவல் நைவேத்தியம் செய்து வழிபட்டால், பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறலாம்; திருமண வரம் கைகூடும்.
நஷ்டத்தில் இயங்கி வந்த வியாபாரம் லாபம் கொழிக்கும் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். இந்தத் தலத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர், மிகவும் விசேஷமானவர். இவருக்கு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வெற்றிலை மாலை சார்த்திப் பிரார்த்தித்தால், மனக்கிலேசங்கள் யாவும் விலகிவிடும்; எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை. புரட்டாசி சனிக்கிழமைகள், ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி ஆகியவை சிறப்புற கொண்டாடப்படுகின்றன. |