LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் ஆர்வலர்கள்

கணினித்தமிழ் ஆய்வாளர் பேராசிரியை முனைவர் ஆர். பத்மமாலா (1978)

பேராசிரியை முனைவர் ஆர். பத்மமாலா (1978) ... கணினியியல் துறையிலிருந்து தமிழ்க் கணினிமொழியியல் துறைக்கு ஒரு நல்ல வரவு. ஆசிரியப் பணியையும் ஆய்வுப்பணியையும் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒரு ஆய்வாளர். திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர் ( முதலாவதாகத் தேர்ச்சிபெற்று, தங்கப்பதக்கம் பெற்றார்) , பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கணினியியலில் எம்சிஏ பட்டம் பெற்றார். பின்னர் சிவகாசி ஸ்டாண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ் ராஜரத்தினம் கல்லூரியில் நான்கு ஆண்டுகளும், மும்பையில் ஒரு கல்லூரியில் ஓராண்டும், சென்னையில் அக்னி பொறியியல் கல்லூரியில் ஓராண்டும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 2009 ஆம் ஆண்டு முனைவர் பட்ட ஆய்வில் விருப்பம்கொண்டு, பதவியைத் துறந்து, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளராகச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் பிரிவில் பேரா. ந. தெய்வ சுந்தரம் வழிகாட்டுதலில் இணைந்தார். தமிழில் இயந்திர மொழிபெயர்ப்புமென்பொருளை உருவாக்குவதற்கு மிக அடிப்படையாகத் தேவைப்படும் தமிழ்த் தொடரியல் பகுப்பி ( Syntactic Parser) பற்றிய ஆய்வை மேற்கொண்டார். ஆய்வின் தலைப்பு - Issues in Syntactic Parser for Modern Tamil என்பதாகும். ஆய்வின் தேவையை ஓட்டி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி நிறுவனத்தின் இயற்கைமொழி ஆய்வு ( Natural Language Processing - NLP) என்ற முதுநிலைப் பட்டயப் படிப்பையும் முடித்தார்.

2014 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டத்தைக் கணினிமொழியியல் துறையில் பெற்றார். அதன்பின்னர், சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியிலும், தற்போது தாம்பரம் கிறித்தவக் கல்லூரியிலும் கணினியியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். தேசிய, சர்வதேசியக் கருத்தரங்குகளில் பங்கேற்று இதுவரை ஏழு ஆய்வுக் கட்டுரைகளை அளித்துள்ளார். இவற்றில் பல உலகத்தரம் வாய்ந்த ஆய்விதழ்களில் வெளிவந்துள்ளன.

மலேசியாவிலும் பாண்டிச்சேரியிலும் நடைபெற்ற உத்தமத்தின் மாநாட்டில் பங்கேற்று தமிழ்க் கணினிமொழியியல் தொடர்பான இரண்டு ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியுள்ளார். இவரது முனைவர் பட்ட ஆய்வு தமிழ்க்கணினிமொழியியல் ஆய்வில் ஒரு படிக்கல்லாக அமைந்துள்ளது. இயந்திரமொழிபெயர்ப்புக்கு மட்டுமல்லாமல், தமிழில் தானியங்கி இலக்கணப் பிழைதிருத்திக்கும் இவரது ஆய்வு பயன்படும். தொடரியல் பிழை மட்டுமல்லாமல், பொருண்மையியல் பிழைகளையும் களைவதற்கான வழிமுறைகளை இவர் முன்வைத்துள்ளார். 'பையன்கள் வந்தான்' என்பதைத் தொடரியல் அடிப்படையில் தவறு என்று காட்டக்கூடிய இவரது ஆய்வு, ' பூனை சிரித்தது', ' பாறை தூங்கியது' போன்ற பொருண்மையியல், உலகியல் அறிவு (Semantics and Pragmatics) ஆகியவற்றில் ஏற்படும் பிழைகளையும் எடுத்துக்காட்டக்கூடியதாக அமைந்துள்ளது பாராட்டுதலுக்கு உரியதாகும். உருபனியல், தொடரியல், பொருள்மயக்கம் (Word Sense Disambiguation) மூன்றையும் கையாளக்கூடிய தமிழ்க் கணிமொழியியல் வழிமுறைகளில் தற்போது இவர் ஈடுபட்டுள்ளார். பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவின் உதவியுடன் இவர் தற்போது ஒரு ஆய்வுத்திட்டத்தை ( Development of a NLP Tool for Word Sense Disambiguation of Tamil words using Ontology Engineering and WordNet) மேற்கொண்டுவருகிறார்.

இவரது வளர்ச்சிக்கு மிக உறுதுணை இவரது தாயார் பேராசிரியை என். கமலா அவர்கள். இவர் பணி ஓய்வுபெற்ற ஒரு கணிதப்பேராசிரியை. முனைவர் பத்மமாலாவின் கணவரும் ( திரு. ஆர். இராஜேஸ்வரன்) ஒரு மென்பொருள்பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு குழந்தைகள் இவர்களுக்கு. விருதுநகரைச் சேர்ந்த இவர் தற்போது சென்னையில் குடியிருப்பு. இலக்கிய இரசனையும் இவருக்கு அதிகம். இவரது முகநூல் பக்கத்தில் இது நன்கு வெளிப்படுகிறது. பேராசிரியை ஆர். பத்மமாலா அவர்கள் தமிழ்க்கணினிமொழியல், மொழித்தொழில்நுட்பத் துறையில் நிச்சயமாகப் பல சாதனைகளைப் புரிவார் என்று உறுதியாக நம்பலாம்.

by Swathi   on 21 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.