LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

அமெரிக்காவில் மற்றொரு தமிழ் அறிஞர் ... முனைவர் இராமசாமி செல்வராசு !

நேற்று முகநூலில் வேதி அறிவியல் அறிஞர் ஜெயபாண்டியன் கோட்டாளம் அவர்களின் தமிழ்ப்பணிபற்றிப் பதிவிட்டிருந்தேன்.
இன்று மற்றொரு வேதிப்பொறியியல் அறிஞர் ... தமிழ் ஆய்வாளர்பற்றிப் பதிவிடுகிறேன்!
 
என்னைப்போன்ற தமிழாசிரியர்களுக்குப் ''போட்டியாக .. ஒரு படி மேலாக'' ... தமிழ் ஆய்வுலகில் நிறைகுடமாக ... அமைதியாகத் தன் தமிழ் ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்துகொண்டிருப்பவர் நண்பர் முனைவர் இராமசாமி செல்வராசு அவர்கள்!
 
தமிழகத்தின் ஈரோடு நகரைச் சேர்ந்தவர். சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேதிப்பொறியியலில் ( Chemical enginnering) இளங்கலைப் பட்டம்பெற்று (1987-91) , பின்னர் அமெரிக்காவில் University of Louisville - இல் முதுகலை, முனைவர் பட்டங்களை (91-95) வேதிப் பொறியியலில் பெற்றுள்ளார்!
 
தனது கல்விக்குப்பிறகு அமெரிக்காவிலேயே பல்வேறு நிறுவனங்களில் வேதிப்பொறியியல் - குறிப்பாக எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிறுவனங்களில் - தனது பணிகளைத் தொடர்ந்துவருகிறார்!
 
அது ஒருபுறம் இருக்க .... அவரது தமிழ்மொழி ஆய்வுப்பணி என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். முகநூல்வழியேதான் தொடர்பு ஏற்பட்டது! தமிழ்மொழி, கணினித்தமிழ்பற்றி நான் ஏதாவது ஒரு இடுகை முகநூலில் இட்டால், அதற்கு முதல் விமர்சகராக திரு. இராமசாமி செல்வராசு அவர்கள்தான் தனது கருத்துக்களை முன்வைப்பார்! அவர் என்ன சொல்வாரோ என்ற அச்சமும் ஆர்வமும் எனக்கு இருக்கும்!
எனக்கு மிகவும் வியப்பாக இருக்கும் அவரது ஆழமான .. நுட்பமான தமிழ்மொழிப் புலமை கண்டு! மண்ணில் எண்ணெய் தோண்டுவதுபற்றிய ஆய்வுப் பணியில் இருப்பவருக்கு ... தமிழ்மொழி இலக்கணங்களின் நுட்பங்களைத் தோண்டி வெளிக்கொணரும் திறமையும் இருக்கிறது! அவர் ஒரு கருத்தை முன்வைத்தால், அதை மறுப்பது அவ்வளவு எளிது இல்லை!
 
தமிழ்மொழியின் பல நுட்பமான இலக்கணக்கூறுகளை அவரிடமிருந்து நான் கற்றுள்ளேன்... பெற்றுள்ளேன் என்பதை இங்கு மிகவும் அழுத்தமாகக் கூறுகிறேன்! எப்படி அவர் இந்தத் தமிழ் இலக்கண நுட்பங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார் என்று நான் வியப்பது உண்டு!
 
அதற்கு அடிப்படை .. அவரது அறிவியல் ஆய்வுமுறைகளே என்பதில் ஐயம் இல்லை! இயற்கையின் அமைப்பு... செயல்பாடுகள் அனைத்தும் குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டே அமைந்துள்ளன என்ற அவரது அறிவியல் அறிவு... தமிழின் பண்புகளும் குறிப்பிட்ட விதிகளுக்குட்பட்டே அமைந்திருக்கின்றன என்ற பார்வைக்கு இட்டுச் சென்றிருக்கிறது!
 
என்னுடைய அடையாறு அலுவலகத்திற்கு ஒரு தடவை வந்திருந்து சிறப்பித்தார்! என்னுடனும் பேராசிரியர் அ. கோபால், முனைவர் கி. உமாதேவி திரு. சரவணன் (கணினிப்பொறியியல் நிபுணர்) ஆகியோருடன் சில மணி நேரங்கள் செலவழித்தார்!
இவரைப்பற்றிப் பேராசிரியர் செ.இரா. செல்வக்குமார் அவர்கள் ( மின்னியல் துறை, வாட்டர்லூ பல்கலைக்கழகம், கனடா) கூறிய ஒரு கருத்து ... ''தமிழுலகில் ஒரு 100 செல்வராசு இருந்தால் ஒளிருமே!''
 
அவருடைய இணையப் பக்கம் செல்ல ...
 
 
by Swathi   on 20 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சமஸ்கிருதம் ஆக்கப்பட்ட  தமிழ்ச் சொற்கள். சமஸ்கிருதம் ஆக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள்.
மூன்று தமிழ்ச்சங்கங்களின் சிறப்புகள் மூன்று தமிழ்ச்சங்கங்களின் சிறப்புகள்
தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும் தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும்
செம்மொழியும் - பேராசிரியர் முனைவர்.ஜார்ஜ் ஹார்ட் பரிந்துரையும் செம்மொழியும் - பேராசிரியர் முனைவர்.ஜார்ஜ் ஹார்ட் பரிந்துரையும்
தமிழை எவ்வாறெல்லாம் பிழையாக எழுதுவார்கள் ? தமிழை எவ்வாறெல்லாம் பிழையாக எழுதுவார்கள் ?
It seems Tamil is the only group that does not use a borrowed word to say language. It seems Tamil is the only group that does not use a borrowed word to say language.
தமிழ் பழமொழிகள் சிந்தித்து ரசிப்பதற்கு தமிழ் பழமொழிகள் சிந்தித்து ரசிப்பதற்கு
மணிமேகலை அமுத சுரபி நாள்   - அட்சயதிதி இரண்டுக்கும் ஏதும் தொடர்பு உண்டா? மணிமேகலை அமுத சுரபி நாள் - அட்சயதிதி இரண்டுக்கும் ஏதும் தொடர்பு உண்டா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.