LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

தமிழறிஞர் பேராசிரியர் எஸ். இராஜேந்திரன் (1950)

பேராசிரியர் எஸ். இராஜேந்திரன் (1950) … எனது தொடரில் நான்காம் தலைமுறை – எனது தலைமுறையைச் சேர்ந்த மொழியியல் பேராசிரியர். தமிழகத்தில் இன்று தமிழ்க் கணினிமொழியியல் துறையில் குறிப்பிடத்தக்க ஒரு சிலரில் ஒருவர். நாகர்கோவிலைச் சேர்ந்தவர். வேதியியலில் இளங்கலைப் பட்டம் (1971) பெற்றபிறகு, கேரளப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முதுகலைப்பட்டமும் (1971), பூனா பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டமும் (1978) பெற்றார். பின்னர் இந்தியமொழிகள் நடுவண் நிறுவனம் (1979-80), பூனா டெக்கான் கல்லூரி (1980-83), கல்கத்தாவில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் மொழிப்பிரிவு (1983-89) ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியபிறகு, தமிழகத்திற்குத் திரும்பி, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் விரிவுரையாளராக, இணைப்பேராசிரியராக, பேராசிரியராக, துறைத்தலைவராக 1989-2011 வரை 22 ஆண்டுகள் பணியாற்றிப் பணி ஓய்வு பெற்றார்.
 
தற்போது கோவை அமிர்தா பல்கலைக்கழகத்தின் மின்னணுத்துறையில் உள்ள கணினிமொழியியல் பிரிவில் சிறப்புநிலை மொழியியல் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். தமிழ், ஆங்கில மொழிகளோடு, இந்தி, மலையாளம் மொழிகளிலும் புலமை உடையவர். இவரது முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு – ‘ தமிழ் வினைச்சொற்களின் தொடரியல் , பொருண்மையியல் பண்புகள் ( Syntax and Semantics of Tamil Verbs )”. முதுமுனைவர் ஆய்வுக்குத் ‘தமிழ் வினைச்சொற்களின் பொருண்மையியல் ( Semantics of Tamil Verbs) “ என்ற தலைப்பில் தமிழ் வினைச்சொற்களைப்பற்றி மிக நுண்ணிய ஆய்வை மேற்கொண்டார். தொடர்ந்து தமிழ்ப் பொருண்மையியலில் விரிவான ஆய்வை மேற்கொண்டுவருகிற இவர், உலக அளவில் உள்ள பல்வேறு கணினிமொழியியல் நிறுவனங்களுடன் இணைந்து ‘ சொல்வலை ( WORDNET) ‘ என்ற மிகப்பெரிய ஆய்வுத்திட்டத்தில் தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளுக்கும் பணியாற்றிவருகிறார். தமிழ்த்தரவுத்தளம் ( Tamil Corpus Analysis ), தமிழ் மின்னகராதி ( Tamil E-dictionary), தமிழ் – ஆங்கில , இந்தி மற்றும் திராவிட மொழிகள் இயந்திரமொழிபெயர்ப்பு (Machine Translation) போன்ற மிக முக்கியமான கணினிமொழியியல் பிரிவுகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். தற்கால மொழியியல் நோக்கில் தமிழ்ச்சொல்லாக்கம்பற்றிய ( Word-formation – Generative Morphology) ஒரு துறையிலும் சிறப்பான பங்கை ஆற்றியுள்ளார்.
 
தமிழ்ச் சொல்லாக்கம்பற்றி இரண்டு முக்கிய நூல்கள் உட்பட 7 நூல்கள் எழுதியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் ( AU-KBC Centre ), கான்பூர் ஐஐடி , அமிர்தா பல்கலைக்கழகம் , மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களுக்குத் தமிழ்க்கணினிமொழியியல் தொடர்பான பல பணிகளை மேற்கொண்டுவருகிறார். தமிழ்க் கணினிமொழியியலில் பல மாணவர்களை உருவாக்கியிருக்கிறார். ஏராளமான தேசிய, உலக அளவிலான கருத்தரங்குகள், பயிலரங்குகளில் பங்கேற்று ஆய்வுகளை அளித்துள்ளார். நான் ஏற்கனவே எழுதியுள்ள முனைவர் வி. தனலட்சுமி அவர்களும் இவருடைய மாணவியே. மற்றொரு மாணவி முனைவர் காமாட்சி அவர்கள் இயந்திரமொழிபெயர்ப்பில் முனைவர் பட்டம் பெற்று, இன்று சென்னை மாநிலக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியையாகப் பணியாற்றுகிறார்.
 
தமிழ்க் கணினிமொழியியலில் பேராசிரியர் ஆற்றியுள்ள பணிகள் மிகவும் பாராட்டத்தக்கவை. கணினித்தமிழ் வளர்ச்சிக்கு இவருடைய ஆய்வுகள் பெரிதும் பயன்படும் என்பதில் எனக்கு ஐயமேயில்லை. இவர் பணி இன்றும் தொடர்கிறது என்பதில் மகிழ்ச்சி.
 
இவருடைய மின்னஞ்சல் முகவரி - rajushush@gmail.com.
 
 
 
 
-தெய்வ சுந்தரம் நயினார்
 
 
 
 
 
 
by Swathi   on 20 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சமஸ்கிருதம் ஆக்கப்பட்ட  தமிழ்ச் சொற்கள். சமஸ்கிருதம் ஆக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள்.
மூன்று தமிழ்ச்சங்கங்களின் சிறப்புகள் மூன்று தமிழ்ச்சங்கங்களின் சிறப்புகள்
தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும் தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும்
செம்மொழியும் - பேராசிரியர் முனைவர்.ஜார்ஜ் ஹார்ட் பரிந்துரையும் செம்மொழியும் - பேராசிரியர் முனைவர்.ஜார்ஜ் ஹார்ட் பரிந்துரையும்
தமிழை எவ்வாறெல்லாம் பிழையாக எழுதுவார்கள் ? தமிழை எவ்வாறெல்லாம் பிழையாக எழுதுவார்கள் ?
It seems Tamil is the only group that does not use a borrowed word to say language. It seems Tamil is the only group that does not use a borrowed word to say language.
தமிழ் பழமொழிகள் சிந்தித்து ரசிப்பதற்கு தமிழ் பழமொழிகள் சிந்தித்து ரசிப்பதற்கு
மணிமேகலை அமுத சுரபி நாள்   - அட்சயதிதி இரண்டுக்கும் ஏதும் தொடர்பு உண்டா? மணிமேகலை அமுத சுரபி நாள் - அட்சயதிதி இரண்டுக்கும் ஏதும் தொடர்பு உண்டா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.