LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

பெரும்பேராசிரியர் முனைவர் அ. காமாட்சிநாதன் (1936)

பெரும்பேராசிரியர் முனைவர் அ. காமாட்சிநாதன் (1936) ... நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர். என்னைப் போன்ற அவரது மாணவர்கள் எல்லோரும் வியப்படையும் அறிவார்ந்த ஒரு பேராசிரியர். தமிழ் இலக்கியம், தமிழ்மொழி, மொழியியல் துறைகளில் உண்மையில் கரைகண்டவர். தமிழில் இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் பெற்ற இவர், கேரளப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வ.அய். சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் (1964-67) பெற்றார். சங்க இலக்கியங்களில் ஒன்றான நற்றிணையின் மொழிநடையைப் பற்றிய ஆய்வே அவரது முனைவர் பட்ட ஆய்வாகும். பின்னர், 1964-67 ஆம் ஆண்டுகளில் கேரளப் பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறையில் ஆய்வு உதவியாளராக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். 1967 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் இணைந்தார்.

1967 முதல் 1997 வரை அங்கேயே பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றார். இடையில் (1974-77) மூன்று ஆண்டுகள் பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரியின் தமிழ்முதுகலைத் துறையின் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் , இரண்டு ஆண்டுகள் ( 1994-96) பூனாவிலுள்ள டெக்கான் கல்லூரி மொழியியல் துறையில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். ஆங்கிலம், ஜெர்மன், மலையாளம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் திறனுடையவர். தமிழ்மொழி, சமஸ்கிருத மொழிகளுக்கிடையிலுள்ள ஒற்றுமை வேற்றுமைபற்றிய ஒப்பிலக்கண ஆய்வில் பேராசிரியர் மிகச் சிறந்த ஒருவர் ஆவார். இலக்கணப் பேராசிரியர்களான எல்.வி. இராமசாமி ஐயர், பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி ஆகியோரின் இலக்கணப்புலமைபற்றிப் பல கட்டுரைகளைப் பேராசிரியர் எழுதியுள்ளார். ஏராளமான மாணவர்கள் இவரது வழிகாட்டுதலில் எம்ஃபில், முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளனர். 1967-72 ஆம் ஆண்டுகளில் காமன்வெல்த் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான பேராசிரியர்கள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர்கள் இங்கிலாந்து சென்று வந்துகொண்டிருந்தனர். அப்போது, பேராசிரியர் காமாட்சிநாதனுக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் அவர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்பவில்லை. அதற்குக் காரணம், இங்கிலாந்திலிருந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு வருகைதரும் பேராசிரியர்கள் பேராசிரியர்களாகக் கருதப்பட்டனர்.

ஆனால் இங்கிருந்து இங்கிலாந்து செல்லும் பேராசிரியர்கள் மாணவர்களாகவே அங்கு கருதப்பட்டனர். இதில் உடன்பாடு இல்லாத பேராசிரியர், அங்கு செல்ல விரும்பவில்லை. சங்க இலக்கியங்களுக்கான சொல்லடைவுத் திட்டம் ( Index Verborum of Sangam Classics) என்ற ஒரு ஆய்வுத்திட்டம், மொழிநடையின் அடிப்படையில் சங்க இலக்கியங்களின் காலவரிசை, மொழிப் புவியியல் ( Linguistic Geography) , பேரா. எல்.வி. இராமசாமி ஐயர் எழுதியுள்ள திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணக் கட்டுரைகளின் தொகுப்பு, மொழியியல் வரலாறு போன்ற பல ஆய்வுத்திட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளார். 2381 சங்கல இலக்கியப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் நிதியுதவியுடன் நற்றிணை இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, தேவையான குறிப்புகளுடன் தரும் ஒரு திட்டத்தை முடித்துள்ளார். 50-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைப் பேராசிரியர் வெளியிட்டுள்ளார். நற்றிணைமீது பேராசிரியருக்கு ஈடுபாடு அதிகம் என்ற காரணத்தால் , தனது இல்லத்திற்கே 'நற்றிணை' என்று பெயரிட்டுள்ளார். இந்தோ- ஆரிய மொழிகளில் காணப்படுகிற பிறமொழிச் சொற்கள்பற்றிய ஒரு ஆய்வையும் செய்துள்ளார். நான் 1973-75 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் முதுகலை படிக்கும்போது, எங்களுக்கு " மொழியியல் வரலாறு ( History of Linguisitcs) " பாடம் நடத்தினார். அவருடைய அறிவுத்திறனைக் கண்டு நாங்கள் வியந்துநிற்போம்.

அவருடைய ஆங்கிலமொழிநடை மிகச் சிறப்பானதாக இருக்கும். தமிழ் இலக்கணத்தில் எவ்வளவு புலமை உண்டோ , அவ்வளவு புலமை அவருக்கு ஆங்கிலத்திலும் உண்டு. இவரைப்பற்றி மொழியியல் அறிஞர்கள் காத்ரே, கமில் சுலபில், சி.ஆர். சங்கரன், அ. சிதம்பரம்செட்டியார் போன்றோர் மிகவும் பாராட்டிக் கூறியுள்ளனர். ஒரு தடவை பேரா. வ.அய். சுப்பிரமணியம் அவர்கள் தனக்கு வாய்ப்பு இருந்தால், இவரைத் தனது துறையில் பேராசிரியராக நியமிப்பேன் என்று கூறியுள்ளார். தற்போது இவருக்கு 80. இன்றும் மொழியியல் ஆய்வில் தளராமல் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்.

by Swathi   on 20 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.