LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

பேராசிரியர் கி. கருணாகரன்

பேராசிரியர் 1941 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 -ஆம் நாள் பிறந்தார். இளங்கலை அறிவியல் படித்த அவர் மொழியியல்மீது ஆர்வம்கொண்டு, மொழியியல் பேரறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் அவர்களின் வழிகாட்டுதலில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை மொழியியல் பயின்றார். பின்னர் மொழியியலில் முனைவர் பட்டமும் பெற்றார். தமிழ் முதுகலைப்பட்டம், சமூகவியல் முதுகலைப்பட்டமும் பெற்றுள்ளார். தெலுங்கு, கன்னடத்திலும் பட்டயங்கள் பெற்றுள்ளார். அமெரிக்காவில் மொழிவளர்ச்சித் திட்டம் என்ற பிரிவில் உயர் பட்டயமும் பெற்றுள்ளார்.
தமிழகத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம் (துணைவேந்தராக) , காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மொத்தத்தில் 34 ஆண்டுகள் தனது கல்விப் பணியை ஆற்றியுள்ளார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், கனடா, மலேசியா ஆகிய நாடுகளில் 20 ஆண்டுகள் தமிழ், மொழியியல் துறைகளில் பணியாற்றியுள்ளார். இங்கிலாந்தில் யார்க் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆண்டும், அமெரிக்காவில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் 11 ஆண்டுகளும் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் 3 மாதங்களும் ஹவாய்ப் பல்கலைக்கழகத்தில் 6 மாதங்களும் கனடா டொராண்டோ பல்கலைக் கழகத்தில் 3 மாதங்களும் மலேசியாப் பல்கலைக் கழகத்தில் 8 ஆண்டுகளும் பணியாற்றி உள்ளார். மொரீசியஸ் பல்கலைக்கழகத்திலும் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
 
அவருடைய வழிகாட்டுதலில் 35 மாணவர்கள் முனைவர் பட்டமும் 50 மாணவர்கள் எம் ஃபில் பட்டமும் பெற்றுள்ளனர். 10-க்குமேற்பட்ட மிகப்பெரிய ஆய்வுத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார். 30-க்குமேற்பட்ட ஆய்வு நூல்கள், 150-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். பல்வேறு பல்கலைக்கழகங்களில் இவரது நூல்கள் பாடநூல்களாக வைக்கப்பட்டுள்ளன.
 
இந்தியாவிலும் அயல்நாடுகளிலிலும் தனது ஆய்வுகளுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
 
இந்தியாவில் பேராசிரியர்கள் தெ.பொ.மீ., ச. அகத்தியலிங்கம், வ .அய். சுப்பிரமணியன், டி பி பட்நாயக், இ. அண்ணாமலை, எம் எஸ் திருமலை போன்றவர்களுடனும் மேலைநாடுகளில் பேராசிரியர்கள் ஆஷர், லோபெஷ், பீட்டர் ஹூக் போன்றவர்களுடன் பணியாற்றியுள்ளார்.
 
எல்லாவற்றிற்கும் மேலாக நான் அவரிடம் சிறப்பாகப் பார்ப்பது... 80 வயதிலும் எவ்விதத் தளர்ச்சியும் இல்லாமல், தனது ஆய்வுப்பணிகளை - குறிப்பாக மொழியியல்துறை ஆய்வுகளை- மேற்கொண்டு வருவதே ஆகும். நாடெங்கும் அவரிடம் பயின்ற மாணவர்கள் இன்று பேராசிரியர்களாகப் பணியாற்றிவருகின்றனர். தமிழகத்தில் தமிழ் மொழியியல் கழகம் ஒன்றைச் சில ஆண்டுகளுக்குமுன் தோற்றுவித்து, அதன் வாயிலாக இன்றுவரை வெற்றிகரமாக தனது ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொண்டுவருகிறார். தற்போது திராவிட மொழியியல் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றிவருகிறார்.
 
மொழியியல்துறையின் மீதான அவரது பற்றும் மாணவர்களின் வளர்ச்சியில் அவர் காட்டும் ஆர்வமும் உண்மையிலேயே வியக்கத்தக்கன. அவருடைய இணையரான முனைவர் புஷ்பவல்லி அவர்களும் மொழியியல் ஆய்வாளர் என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.
 
பேராசிரியர் அவர்கள் தனது இளம் வயதிலிருந்தே திராவிட இயக்கத்தில் ஊறித் திளைத்தவர் என்பதையும் இங்கு நான் குறிப்பிட்டாகவேண்டும். சமூக உணர்வுடைய பேராசிரியர். அதனாலேயே சமூகமொழியியல், மொழி வளர்ச்சித்திட்டம் ஆகிய துறைகளில் மிகச் சிறப்பான பணிகளை மேற்கொண்டும் வருகிறார்.
 
-தெய்வ சுந்தரம் நயினார்
 
by Swathi   on 20 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.