LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

பேராசிரியர் கோ. கேசவன்

80 – களில் சமூகவியல் நோக்கில் தமிழ் இலக்கியத் திறனாய்வை மேற்கொண்டவர்களில் மிக முக்கியமான ஒருவர். மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் தமிழ் இலக்கியம், பண்பாடு, மொழி ஆகியவைபற்றி மிக ஆழமான ஆய்வுகளை முன்வைத்தவர். பேரா. க. கைலாசபதி, பேரா. க. சிவத்தம்பி , பேரா. நா. வானமாமலை போன்றோரின் வரிசையில் இடம் பிடித்தவர். மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் முதுகலைப்பட்டத்தையும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றவர். 1970 முதல் அவரது மறைவுவரை (1998 ) 28 ஆண்டுகள் தமிழ்நாடு அரசுக் கலைக் கல்லூரிகளில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அவருடைய முதல் நூலாகிய ‘ மண்ணும் மனித உறவுகளும் ‘ என்ற நூலுக்கும் ‘இயக்கமும் இலக்கியப் போக்குகளும்’ என்ற நூலுக்கும் பேரா. க. கைலாசபதி அவர்கள் முன்னுரை எழுதியுள்ளார். ‘தனக்கு ஆராய்ச்சிப் பயணத்தில் மற்றொரு தோழன் கிடைத்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி ‘ என்று அவர் தெரிவித்திருந்தார்.

‘ தமிழகத்தின் உயர்கல்வி மாணவர் மட்டங்களில் மார்க்சிய விமர்சனம் கால்கோள்கொண்டுவிட்டது என்பதற்கான முதல் உதாரணமாக விளங்கியவர் கோ. கேசவன்’ என்று பேரா. க. சிவத்தம்பி குறிப்பிடுகிறார். கேசவனின் முனைவர் பட்ட ஆய்வானது பாரதியியல் ஆகும். ‘பள்ளு இலக்கியம் – ஒரு சமூகவியல் பார்வை’ , கதைப்பாடல்களும் சமூகமும் ‘ ‘ இலக்கிய விமரிசனம் – ஒரு மார்க்சியப் பார்வை’ ‘ தமிழ்ச்சிறுகதைகளில் உருவம்’, ‘திராவிட இயக்கமும் மொழிக் கொள்கையும்’, ‘பாரதியும் அரசியலும்’, தலித் இலக்கியம் – சில கட்டுரைகள்’ ‘ பாரதி முதல் கைலாசபதி வரை’ ஆகிய நூல்கள் தமிழ் இலக்கியம், மொழி சம்பந்தப்பட்ட இவரது குறிப்பிடத்தக்க ஆய்வுகளாகும்.

தமிழ்ச்சமூகம்பற்றி வேறு பல ஆய்வுநூல்களையும் ஏராளமான கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். பேரா. க . கைலாசபதி போன்றே இவரும் திடீரென்று தனது 51 வயதிலேயே இவ்வுலகத்தைவிட்டு மறைந்தார் என்பது மிகுந்த வேதனைக்குரியது. எனக்கும் இவருக்கும் சமூக, இலக்கியத் தளங்களில் 30 ஆண்டுகள் நெருங்கிய தொடர்பு என்பதில் மகிழ்வடைகிறேன்.

by Swathi   on 20 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.