LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் ஆர்வலர்கள்

கணினித்தமிழ் ஆய்வாளர் திரு. சு. கார்த்திகேயன் (1983)

கணினித்தமிழ் ஆய்வாளர் திரு. சு. கார்த்திகேயன் (1983)

 

திரு. சு. கார்த்திகேயன் (1983) ... கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்தொடர்பான பணிகள், ஆய்வுகளில் தமிழறிஞர்கள் மட்டுமல்லாமல், கணினித்துறை சார்ந்தவர்களும் ஈடுபட்டுவருகின்றனர். இந்த வளர்ச்சியானது தமிழாய்வு என்பது பல துறைசார்ந்த ஒரு ஆய்வாக மலர்ந்துவருகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
 
திரு. சு. கார்த்திகேயன் அவர்கள் இத்துறையில் கடந்த 10 ஆண்டுகளுக்குமேலாகத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவருகிறார். நாமக்கல் பி.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினிச்செயற்பாட்டில் இளங்கலைப்பட்டமும் ( BCA) , பாரதியார் பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகத்துறையில் முதுகலை அறிவியல்பட்டமும் ( M.Sc., Electronic media - Education), அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயற்கைமொழி ஆய்வில் ( Natural Language Processing - NLP ) முதுகலைப்பட்டயமும் பெற்றுள்ளார்.
 
கணினிநிரலாக்கம், இணையதள வடிவமைப்பு, மின்கல்வி போன்ற துறைகளில் சிறந்த பயிற்சிபெற்றுள்ள இவர் , முதலில் மைசூரிலுள்ள இந்தியமொழிகள் நடுவண் நிறுவனத்தில் பழங்குடி மக்கள் வாழ்வுபற்றிய ஆவணப்படம் தயாரிப்பிலும், வங்காளம், மணிப்புரி, கன்னடம் ஆகிய மொழிகளை இணையவழி கற்பித்தலுக்கான நிரலாக்கத்திலும் தன்னை ஈடுபடுத்தினார். பின்னர், சென்னையில் இயங்கும் செம்மொழித்தமிழ் மத்திய
ஆய்வுநிறுவனத்தில் நிரலாக்கராக இணைந்து, கடந்த பத்தாண்டுகளுக்குமேலாக இணையவழிச் செம்மொழித் தமிழ்த் திட்டத்தின்கீழ் சங்க இலக்கியங்களுக்கான இணையவழிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றிவருகிறார்.
 
செவ்வியல் தமிழ் இலக்கியங்களைக் கற்போருக்குச் செவ்வியல்மொழியில் பயிற்சி தரவும், இலக்கியங்களின் நயம் பாராட்டவும், ஆய்வுநோக்கில் அணுகுவதற்கும் தேவையான பயிற்சியை இணையவழி அளிக்கும் திட்டமே இவர் பங்கு கொண்டுவரும் திட்டமாகும். இத்திட்டதின்கீழ் இணையப் பாடங்கள் ஒழுங்கமைத்துத் தரப்பட்டுள்ளன. இவற்றோடு மாணவர்களுக்குக் கூடுதலாக உதவிசெய்ய இணைய வகுப்பறைகள் , காட்சிக் குறும்படங்கள்
ஆகியவையும் ஆங்காங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அகம், புறம், அறம், காப்பியம், இலக்கணம் என்று இப்பயிற்சி ஐந்து அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதற்படியாக, அகம், புறம் ஆகியவற்றிற்கான பாடங்கள் தயாரிக்கப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 800 மாணவர்களுக்குமேல் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி, செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் பயிற்சிபெற்றுள்ளனர். இணையவழிக் கல்வியில் செவ்வியல் இலக்கியங்களைக் கற்றுக்கொடுக்கும் பாடங்களைத் தயாரிக்கும் குழுவில் பணிபுரியும் இவர், தமிழிலக்கியங்களை நன்கு கற்றுத் தேர்ந்துள்ளார் என்பது இவரது படைப்புகளில் வெளிப்படுகிறது.
 
செவ்வியல் தமிழ் இலக்கியங்களுக்கான ஒலி ஒளி தொகுப்பு , படக்காட்சி தொகுப்பு ( Audio / Video / Image Editing) ஆகியவற்றிலும் இவர் தனது திறமையை வெளிப்படுத்திவருகிறார். இவரது கணினித்தமிழ் பணி சிறக்க இவரை வாழ்த்துங்கள்! 
by Swathi   on 21 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.