LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

வேதியியல் அறிஞர் முனைவர் செயபாண்டியன் கோட்டாளம்

அறிவியல் அறிஞர் திரு. செயபாண்டியன் கோட்டாளம் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அருகிலுள்ள உமரிக்காடு பள்ளியில் தமிழ்வழிப் படித்தவர். சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (IIT, Chennai) வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
 
பின்னர் அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர் ஆய்வைத் தொடர்ந்தார். ஆய்வுக் கல்விக்குப்பிறகு அமெரிக்காவில் பல நிறுவனங்களில் அறிவியல் ஆய்வறிஞராகப் பணியாற்றியுள்ளார். தற்போது பணி ஓய்வுபெற்று, மீண்டும் தூத்துக்குடிக்கே திரும்பி வாழ்ந்துவருகிறார்.
 
அவரது வேதியியல் ஆய்வுப்பணிகள் ஒருபுறம் இருக்க, அவரது தமிழார்வமும் தமிழாய்வும் வியக்கவும் பாராட்டவும் தக்கவை. முகநூல்வழியே எனக்கு நண்பர் ஆனார். தமிழ்மொழியியல், இலக்கணம் தொடர்பான கலந்துரையாடல்களில் மிக்க ஆர்வத்துடன் பங்கேற்றுவருகிறார்.
 
எழுத்துத்தமிழுக்கு ஒரு நல்ல கையேடு வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். தமிழ் இலக்கண வரம்பை மீறாமல், அதேவேளையில் தமிழில் ஏற்பட்டுள்ள புதிய வளர்ச்சிகளையும் உள்ளடக்கி, ஒரு நடைக்கையேடு ஒன்றைத் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
 
ஒரு வேதியியல் அறிஞர் இவ்வளவு சிறப்பாக ஒரு தமிழ்நடைக் கையேட்டை உருவாக்கியுள்ளது பெரிதும் பாராட்டத்தக்கது. தமிழறிஞர்களும் மொழியியல் அறிஞர்களும் மேற்கொள்ளவேண்டிய ஒரு முக்கியப் பணியை முனைவர் செயபாண்டியன் கோட்டாளம் அவர்கள் மேற்கொண்டுள்ளார்.
 
தமிழ் ஆய்வாளர்கள் அவரது இந்த நூலைப் படித்து, மேலும் அதை வளப்படுத்துவதற்கு உதவும்படி அன்பு வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார்.
முனைவர் செயபாண்டியன் கோட்டாளம் அவர்களுக்கு மீண்டும் எனது வாழ்த்தும் பாராட்டும்!
 
அவரது நூலைப் பெறுவதற்கான இணைய முகவரியைக் கீழே தந்துள்ளேன்.
by Swathi   on 20 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சமஸ்கிருதம் ஆக்கப்பட்ட  தமிழ்ச் சொற்கள். சமஸ்கிருதம் ஆக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள்.
மூன்று தமிழ்ச்சங்கங்களின் சிறப்புகள் மூன்று தமிழ்ச்சங்கங்களின் சிறப்புகள்
தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும் தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும்
செம்மொழியும் - பேராசிரியர் முனைவர்.ஜார்ஜ் ஹார்ட் பரிந்துரையும் செம்மொழியும் - பேராசிரியர் முனைவர்.ஜார்ஜ் ஹார்ட் பரிந்துரையும்
தமிழை எவ்வாறெல்லாம் பிழையாக எழுதுவார்கள் ? தமிழை எவ்வாறெல்லாம் பிழையாக எழுதுவார்கள் ?
It seems Tamil is the only group that does not use a borrowed word to say language. It seems Tamil is the only group that does not use a borrowed word to say language.
தமிழ் பழமொழிகள் சிந்தித்து ரசிப்பதற்கு தமிழ் பழமொழிகள் சிந்தித்து ரசிப்பதற்கு
மணிமேகலை அமுத சுரபி நாள்   - அட்சயதிதி இரண்டுக்கும் ஏதும் தொடர்பு உண்டா? மணிமேகலை அமுத சுரபி நாள் - அட்சயதிதி இரண்டுக்கும் ஏதும் தொடர்பு உண்டா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.