LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

தமிழறிஞர் பேராசிரியர் (சவுந்தர) மகாதேவன் ( 1974)

பேராசிரியர் (சவுந்தர) மகாதேவன் ( 1974) ...நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பன்முகத் திறனுடைய ஒரு இளம் தமிழாய்வாளர். எழுத்தாளராக ... கவிஞராக ... பேச்சாளராக ... ஆய்வாளராக ... பேராசிரியராகத் திகழ்கிறார். பாளை தூய சவேரியார் கல்லூரியில் தமிழில் முதுகலை, எம் ஃபில் பட்டங்களைப் பெற்ற இவர், நெல்லை மதிதா இந்துக்கல்லூரியில் பேராசிரியர் கட்டளை கைலாசம் அவர்களின் வழிகாட்டுதலில் 'வண்ணதாசன் படைப்பிலக்கியங்கள் ' பற்றி ஆய்வு மேற்கொண்டு, முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

தனது 20 வயதில் இவர் பாரதப் பிரதமரின் 'சத்பவனா தேசியக் கட்டுரையாளர் விருதையும்', இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் ' தேசிய அங்கீகரிப்புச் சான்றிதழையும் ரூ. 10,000 முதல் பரிசினையும்' பெற்றவர். 21 ஆவது வயதில் தஞ்சையில் நடைபெற்ற 8 ஆம் உலகத்தமிழ்மகாநாட்டின்போது நடைபெற்ற கட்டுரைப்போட்டியில் 'புதுக்கவிதைகளில் சமுதாயநோக்கு' என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டிக்குக் கட்டுரை எழுதி, மாநிலத்திலேயே முதலிடம் பெற்று, தமிழக முதல்வரின் தங்கப் பதக்கத்தை வென்றார். கட்டுரைப் போட்டி மட்டுமல்லாமல், கவிதைப்போட்டி, ஆய்வுக்கட்டுரைப்போட்டி ஆகியவற்றிலும் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவைபோன்று பல விருதுகளைப் பெற்ற இவர், 'இணையத்தமிழ்', மகாபாரதி இணையக்கவிதைகள்', 'தேமதுரத்தமிழ்' 'பொய்கையாழ்வார்', 'பூதத்தாழ்வார்', 'வண்ணதாசன்' ஆகிய நூல்களைப் படைத்துள்ளார். ஊடகத் துறையில் இளம் வயதிலிருந்தே பெரும்பங்காற்றிவருகிறார். குறிப்பாக, இளைஞர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கும் ஏராளமான கட்டுரைகளைத் 'தினமலர்' இதழில் தொடர்ந்து எழுதிவருகிறார். தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றிலும் தொடர்ந்து தனது பங்களிப்பை அளித்துவருகிறார். தமிழ் இணையக்கல்விக்கழகத்திற்காக ஏராளமான மின்னூல்களையும் கல்லூரித்தமிழ்ப் பாடத்திட்டக்குழுவின் சார்பாக ஆறு நூல்களையும் பதிப்பித்துள்ளார்.

பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவின் உதவிபெற்று, வண்ணதாசனின் படைப்பிலக்கியங்களில் இயற்கைபற்றி ஒரு குறு ஆய்வுத்திட்டத்தைச் செய்துமுடித்துள்ளார். வலைப்பூக்கள், சிற்றிதழ்கள் ஆகியவற்றில் தொடர்ந்து தனது பங்களிப்பைச் செம்மையாகச் செய்துவருகிறார். நெல்லையில் பேராசிரியர்கள் சிவசு, கட்டளை கைலாசம் ஆகியோருடன் இணைந்து பல்வேறு இலக்கியக் கூட்டங்களை நடத்திவருகிறார். http://namipikai.blogspot.in/ என்ற வலைப்பூவில் தொடர்ந்து தரமான கட்டுரைகளை அளித்துவருகிறார்.

மலேசியாப் பல்கலைக்கழகத்தின் கருத்தரங்கு ஒன்றில் ஆய்வுரை வழங்கியுள்ளார். இளம் ஆய்வாளர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இந்த 41 வயது இளைஞர் செயல்பட்டுவருகிறார். கடந்த சில மாதங்களாக இவரது தொடர்பு எனக்கு கிடைத்துவருகிறது. தற்போது இவர் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிவருகிறார். தமிழ் விக்கிபீடியாவில் எழுத்தாளர்கள்பற்றிய குறிப்புகளில் இவரும் இடம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 21 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சமஸ்கிருதம் ஆக்கப்பட்ட  தமிழ்ச் சொற்கள். சமஸ்கிருதம் ஆக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள்.
மூன்று தமிழ்ச்சங்கங்களின் சிறப்புகள் மூன்று தமிழ்ச்சங்கங்களின் சிறப்புகள்
தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும் தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும்
செம்மொழியும் - பேராசிரியர் முனைவர்.ஜார்ஜ் ஹார்ட் பரிந்துரையும் செம்மொழியும் - பேராசிரியர் முனைவர்.ஜார்ஜ் ஹார்ட் பரிந்துரையும்
தமிழை எவ்வாறெல்லாம் பிழையாக எழுதுவார்கள் ? தமிழை எவ்வாறெல்லாம் பிழையாக எழுதுவார்கள் ?
It seems Tamil is the only group that does not use a borrowed word to say language. It seems Tamil is the only group that does not use a borrowed word to say language.
தமிழ் பழமொழிகள் சிந்தித்து ரசிப்பதற்கு தமிழ் பழமொழிகள் சிந்தித்து ரசிப்பதற்கு
மணிமேகலை அமுத சுரபி நாள்   - அட்சயதிதி இரண்டுக்கும் ஏதும் தொடர்பு உண்டா? மணிமேகலை அமுத சுரபி நாள் - அட்சயதிதி இரண்டுக்கும் ஏதும் தொடர்பு உண்டா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.