LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

தமிழ்மொழியின் வளர்ச்சியையும் இலக்கண அறிவியலின் வளர்ச்சியையும் ஏற்றுக் கொள்ளவேண்டும்!

தமிழ்மொழி தமிழர்களின் தேவையையொட்டி மாறியும் வளர்ந்தும் வந்திருப்பது என்பது உண்மையென்றால், உறுதியாக இன்றைய உரைநடைத்தமிழ் இலக்கணத்தில் சில புதிய இலக்கணக்கூறுகள் தோன்றியிருக்கவேண்டும். தோன்றியும் இருக்கிறது. இது எனது கருதுகோள்.
 
அவற்றிற்கு பழந்தமிழ் இலக்கணங்களில் குறிப்பு தேடுவது சரியில்லை என்பதே எனது கருத்து. தொல்காப்பியரின் சிறப்பையும் பிற தமிழ் இலக்கண ஆசிரியர்களின் சிறப்பையும் உணர்ந்தும் மகிழ்ந்தும் பாராட்டியும்தான் இக்கருத்தை முன்வைக்கிறேன்.
 
இலக்கணம் என்பது ஒரு அறிவியல். எந்தவொரு அறிவியலும் முன்நோக்கித்தான் செல்லும். தேக்கமடைந்து நிற்காது. நியூட்டன் அறிவியல், ஐன்ஸ்டீன் காலத்தில் மாற்றமடைந்தது: இதற்காக நியூட்டன் அறிவில் குறைந்தவர் என்பது பொருள் இல்லை! வளரும் ஒன்றிற்கு முக்காலத்திற்கும் சேர்த்து ஒரு ஆய்வை முன்வைக்கமுடியாது. மேலும் புதிய கூறுகளுக்குமட்டுமல்ல, பழைய கூறுகளுக்கும்கூட புதிய கருத்துக்கள், விதிகள் தோன்றும்.
 
நமது பழந்தமிழ் இலக்கணங்களின் சிறப்பைப் பாராட்டுவதோடு நின்றுவிடக்கூடாது. இன்றைய தமிழ்மொழியின் வளர்ச்சியின் அடிப்படையில் பழந்தமிழ் இலக்கண அறிவியலை அடுத்த உயர்நிலைக்கு எடுத்துச்செல்லவேண்டும்.
 
அன்றைய இலக்கணம் இன்றும் மாறாமல் இருக்கிறதென்றால் அது பெருமைக்குரிய ஒன்று இல்லை! மொழியும் மாறவில்லை, வளர்ச்சியடையவில்லை; தமிழ்ச்சமுதாயமும் மாறவில்லை, வளரவில்லை என்பதே அதன் பொருள்! இது எனது கருத்து! நண்பர்கள் இதில் மாறுபடலாம்.
 
-தெய்வ சுந்தரம் நயினார்
by Swathi   on 20 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.