LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

பேராசிரியர் மறைமலை இலக்குவனார் (1946)

பேராசிரியர் மறைமலை இலக்குவனார் (1946) … தமிழாய்வுலகில் நன்கு அறிமுகமான ஒரு பேராசிரியர். மிக அமைதியாகவும் ஆனால் ஆழமாகவும் ஆய்வுகளை மேற்கொண்டுவருபவர். பெரும்பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் புதல்வர். திருநெல்வேலியில் (சிந்துபூந்துறையில்) பிறந்தவர். பேராசிரியர் இலக்குவனார் அவர்கள் தனது புதல்வருக்குத் தனித்தமிழ்ப் பேரறிஞர் மறைமலை (அடிகளார்) அவர்களின் பெயரை இட்டார். தந்தையார் பேராசிரியராக இருந்ததால், மறைமலை அவர்கள் தமிழகத்தின் பல பள்ளிகளில் கல்வி மேற்கொண்டார். மதுரைத் தியாகராசர் கல்லூரியில் புகுமுக வகுப்பு (1962-63), விலங்கியலில் இளங்கலை (1963-66) ஆகிய படிப்புகளை மேற்கொண்டார். மதுரைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப்பட்டம் (1969) பெற்றார். சமசுகிருத்திலும் (1979) , எண்மக் காணொளிப் படைப்பாக்கத்திலும் (2006) பட்டயங்கள் பெற்றுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பொற்கோ அவர்களின் வழிகாட்டுதலில் ‘இக்காலத் தமிழில் சொல்லாக்கம் – ஆட்சித்துறைச் சொற்களில் ஒரு சிறப்பாய்வு ‘ என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு, முனைவர் பட்டம் (1984) பெற்றார். 1969-இலிருந்து 2005 வரை தமிழகத்தின் பல அரசுக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி, இறுதி 5 ஆண்டுகளுக்கு மேலாகச் சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றி, பணி ஓய்வு பெற்றுள்ளார். 1997-98 – இல் அமெரிக்காவில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் தெற்கு, தென்கிழக்காசியவியல் ஆய்வுத்துறையில் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். இலக்கியத் திறனாய்வில் தலைசிறந்தவர். அவருடைய நூல்களில் 10-க்கும் மேற்பட்டவை இலக்கியத் திறனாய்வு தொடர்பானவையே. கவிதை நூல்களும் வெளியிட்டுள்ளார்.

பேராசிரியர்கள் மு.வரதராசனார், இலக்குவனார் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றைச் சிறந்த முறையில் எழுதி வெளியிட்டுள்ளார். கவிதைகள் மொழிபெயர்ப்பிலும் திறன்வாய்ந்த பேராசிரியர் அதிலும் தன் பங்களிப்பைச் செய்துள்ளார். ‘ சொல்லாக்கம்’ என்ற தலைப்பில் ஒரு மிகச் சிறந்த மொழியியல்தொடர்பான ஆய்வு நுலை வெளியிட்டுள்ளார். தற்போது இளம் கிறித்தவர் ஆடவர் (YMCA) ஆணையத்தின் வழியாக வாழும் கவிஞர்கள்பற்றித் தொடர்சொற்பொழிவாற்றி வருகிறார். ‘குறள்நெறி’ என்ற இதழுக்குப் பொறுப்பாசிரியராகவும் ‘ செம்மொழிச் சுடர் ‘ என்ற மின்னிதழின் ஆசிரியராகவும் இருந்துவருகிறார்.

நாற்பதுக்கும் மேற்பட்ட தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, வலைப்பூவில் இட்டிருக்கிறார். 2014-இல் சிட்னி தமிழ்ச்சங்கம் பேராசிரியருக்குத் தொல்காப்பியர் விருது அளித்துப் பாராட்டியுள்ளது. அமெரிக்கா. ஆஸ்திரேலியா, ஜப்பான், மோரிஷியஸ், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சென்று தமிழ்மொழி, இலக்கியம்பற்றிப் பல உரைகளை நிகழ்த்தியுள்ளார். பேராசிரியர் மறைமலையும் நானும் பேராசிரியர் பொற்கோ அவர்களிடம் ஒரே நேரத்தில் முனைவர் பட்டம் ஆய்வு செய்தோம் என்பதில் மகிழ்வடைகிறேன். பெரும்பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டுவிழாவை 2009- ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறையில் கொண்டாட (அப்போதைய துறைத்தலைவராகிய ) நான் ஏற்பாடு செய்தபோது அனைத்து உதவிகளையும் அவர் அளித்ததையும் நினைவுகூர்கிறேன்.

அவரது சகோதரர் திரு. திருவள்ளுவன் இலக்குவனாரும் இன்றும் தொடர்ந்து பல தமிழ்ப்பணிகளை மேற்கொண்டுவருகிறார். பேராசிரியர் மறைமலை அவர்களின் துணைவியாரும் ஒரு பொருளாதாரப் பேராசிரியர். மேலதிக விவரங்களுக்கு - https://ta.wikipedia.org/s/2n1k

 

-தெய்வ சுந்தரம் நயினார்

by Swathi   on 20 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சமஸ்கிருதம் ஆக்கப்பட்ட  தமிழ்ச் சொற்கள். சமஸ்கிருதம் ஆக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள்.
மூன்று தமிழ்ச்சங்கங்களின் சிறப்புகள் மூன்று தமிழ்ச்சங்கங்களின் சிறப்புகள்
தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும் தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும்
செம்மொழியும் - பேராசிரியர் முனைவர்.ஜார்ஜ் ஹார்ட் பரிந்துரையும் செம்மொழியும் - பேராசிரியர் முனைவர்.ஜார்ஜ் ஹார்ட் பரிந்துரையும்
தமிழை எவ்வாறெல்லாம் பிழையாக எழுதுவார்கள் ? தமிழை எவ்வாறெல்லாம் பிழையாக எழுதுவார்கள் ?
It seems Tamil is the only group that does not use a borrowed word to say language. It seems Tamil is the only group that does not use a borrowed word to say language.
தமிழ் பழமொழிகள் சிந்தித்து ரசிப்பதற்கு தமிழ் பழமொழிகள் சிந்தித்து ரசிப்பதற்கு
மணிமேகலை அமுத சுரபி நாள்   - அட்சயதிதி இரண்டுக்கும் ஏதும் தொடர்பு உண்டா? மணிமேகலை அமுத சுரபி நாள் - அட்சயதிதி இரண்டுக்கும் ஏதும் தொடர்பு உண்டா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.