LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

தமிழறிஞர் முனைவர் (சிங்காரம்). சிதம்பரம் (1976)

முனைவர் (சிங்காரம்). சிதம்பரம் (1976) ... காரைக்குடி நகரைச் சேர்ந்த ஒரு இளம் ஆய்வாளர். அங்கேயுள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் உருவாக்கம்... அங்கேயே தமிழில் முதுகலை, எம்ஃபில், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். ' சோழநாட்டுப் புலவர்களின் இலக்கியக்கொள்கை ( சங்ககாலம் )' என்ற தலைப்பில் இவரது முனைவர் பட்ட ஆய்வு அமைந்தது. கோயில்கலையில் முதுகலைப் பட்டயச் சான்றிதழும் காந்தியச் சிந்தனையில் பட்டயச் சான்றிதழும் பெற்றுள்ளார்.

கல்வெட்டுகளைப் படியெடுத்தல், விலங்குகள், பறவைகளைப் பதப்படுத்துதல் ஆகியவற்றிலும் முறையான பயிற்சிகள் பெற்றுள்ளார். அப்பல்கலைக்கழகத்தின் மகளிரியல் மையத்திலும் பணியாற்றியுள்ளார். முதுமுனைவர் ஆய்வையும் அங்கே மேற்கொண்டுள்ளார். தற்போது காந்திகிராமப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்புலத்தில் இந்தியமொழிகள் , கிராமியக்கலைத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். ' முதல்வன்', ' உறந்தைத்தமிழ்வளம்', ' உள்வழி' என்ற மூன்று ஆய்வு நூல்களை உருவாக்கியுள்ளார். இந்நூல்களை இவர் மின்னூல்களாகவும் இணையதள வெளியீடுகளாகவும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறுந்தகடுகளிலும் தனது நூல்களை ஏற்றியுள்ளார். 40-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை இவர் அளித்துள்ளார். இணையத்தமிழ், உயர்கல்வி வளர்ச்சியில் இணையத்தின் பங்கு, மின்னூல்கள் தயாரிப்பதில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும் போன்ற தலைப்புகளில் கணினித்தமிழுக்கான கட்டுரைகளையும், மகளிர், சங்க இலக்கியம் பற்றியும் கட்டுரைகளையும் உள்ளடக்கி, ஏறத்தாழ 32 ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

உத்தமத்தின் மாநாடுகளில் தொடர்ந்து தனது பங்கை அளித்துவருகிறார். தமிழ் நூல்களை மின்னூல்களாக ஆக்கும்போது ஏற்படும் சிக்கல்களையும் அவற்றிற்கான தீர்வுகளையும் உள்ளடக்கியதே அவரது ' உள்வழி' என்ற நூலாகும். தமிழில் குறுஞ்செயலிகளின் உருவாக்கம், உள்ளடக்கம், பயன்பாடு பற்றியெல்லாம் மதிப்பீடு செய்து ஆய்வுகளை வெளியிட்டுள்ளார். ' முதல்வன் .in ' என்ற ஒரு மின்னிதழைத் தொடர்ந்து நடத்திவருகிறார். ஆன்மீகம், சுற்றுலா, தலீத்தியம் , இலக்கிய ஆய்வு, இணையம் என்று பல துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார். 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சிட்னியில் நடைபெற்ற உலகத்தமிழ் இலக்கியமாநாட்டில் பங்கேற்றார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற உத்தமம் மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை அளித்தார். சென்னையில் இயங்கும் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இளம் அறிஞர்களுக்கான (2010-11 ஆண்டுகளுக்கான) குடியரசுத்தலைவர் விருது இவருக்கு அளிக்கப்பட்டது , இவருடைய ஆய்வுகளுக்கான ஒரு அங்கீகாரமாகும்.. தமிழாய்விற்கும் இணையத்திற்கும் பாலமாகச் செயல்படுகிறார் முனைவர் சி. சிதம்பரம் அவர்கள் . இன்றைய கணினியுகத்தில் ஒரு தமிழாய்வாளர் எவ்வாறு தமிழாய்வையும் கணினியையும் இணைத்துச் செயல்படவேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். குடியரசுத் தலைவரின் இளம் அறிஞர் விருது பெற்ற இவர் , மேலும் பல சிறப்புகளைப் பெறுவார் ... பெறவேண்டும் என்று வாழ்த்துவோம்.

by Swathi   on 20 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.