LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் ஆர்வலர்கள்

கணினித்தமிழ் ஆய்வாளர் முனைவர் லோ.ரா. பிரேம்குமார் ( 1983)

முனைவர் லோ.ரா. பிரேம்குமார் ( 1983) ... 32 வயது இளைஞர்... இளங்கலையில் இயற்பியல் படித்த இவர், பின்னர் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் மொழியியலில் முதுகலைப்பட்டம், எம் ஃபில் பட்டம், முனைவர் பட்டம் ஆகியவற்றைப் பெற்றார். தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். எம் பில் பட்ட ஆய்விற்கு ஸ்ரீபிரியாவின் கவிதைகளின் மொழிநடையை ஆய்வுசெய்தவர், தனது முனைவர் பட்ட ஆய்விற்குத் தொடக்கப் பள்ளி நிலையில் வெளிவந்துள்ள தமிழ்ப் பாடநூல்களைப்பற்றிய மதிப்பீட்டை மேற்கொண்டார். சௌராஷ்டிரா மொழியிலும் பேச்சுத்திறன் பெற்றவர். கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் திறன் பெற்றவர். 2008 ஆண்டு முதல் 2010 ஆண்டுவரை ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறையில் இந்திய மொழிகளுக்கான இயந்திர மொழிபெயர்ப்பு ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். குறிப்பாக, அதற்குத் தேவையான உருபன் பகுப்பாய்விகளை உருவாக்குவதில் முனைந்தார்.

2010 ஆம் ஆண்டு மைசூர் இந்தியமொழிகள் நடுவண் நிறுவனத்தில் இந்தியமொழிகளுக்கான தரவு உருவாக்க மையத்தில் பணியில் சேர்ந்தார். அங்கே எழுத்து, பேச்சுத் தரவுகளைச் சேகரித்து, அவற்றிற்கான மொழியியல் குறிப்புகளைத் தானே தரும் மொழிக் கருவிகளை உருவாக்குவதில் முனைந்துள்ளார். இந்த ஆய்வு தமிழ்மொழி சார்ந்த பல மொழித்தொழில்நுட்பக் கருவிகளை உருவாக்க மிகவும் உதவும். அங்கேயே முதுநிலை ஆய்வாளராகத் தற்போது பணியாற்றிவருகிறார். அந்த மையத்தின் சார்பாக நாடெங்கும் நடைபெறும் பயிலரங்குகளில் இயற்கைமொழி ஆய்வுபற்றிய பயிற்சிகளை ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் அளித்துவருகிறார். தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

தரவகத்தின் அடிப்படையில் தமிழ்மொழி கற்பித்தலுக்குத் தேவையான பல ஆய்வுகளை அளித்துள்ளார். தேசிய அளவில் கணினி மொழியியல், மொழித்தொழில்நுட்பம் தொடர்பான ஏராளமான கருத்தரங்குகள், பயிலரங்குகளில் பங்கேற்று, பல ஆய்வுகளை அளித்துள்ளார். தரவக மொழியாய்வு, இயந்திரமொழிபெயர்ப்பு, தமிழ்மொழி பயிற்றுவித்தல் ஆகிய துறைகளில் முனைப்பாகச் செயல்படுகிற இவர், தமிழ்க் கணினிமொழியியல், மொழித்தொழில்நுட்பத் துறையில் நன்கு வளர்ந்துவருகிற ஒரு ஆய்வாளராகத் திகழ்கிறார்.

கணினிமொழியியல், மொழித்தொழில்நுட்பத்தில் இளைஞர்களுக்கு முறையான பயிற்சியளித்து, தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளவும் மைசூர் இந்தியமொழிகள் நடுவண் நிறுவனம் உதவிவருவது பாராட்டுதலுக்குரியது. அப்பணிகளின் தலைவராகச் செயல்பட்டுவருகிற பேரா. ல. இராமமூர்த்தியும் பாராட்டுக்குரியவர். அவருடைய வழிகாட்டுதலில் தமிழ் இளைஞர்கள் பலர் கணினிமொழியியல் துறையில் இன்று வளர்ந்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 21 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.