LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

பேராசிரியை வீ.சு. ராஜம்

பேராசிரியை வீ.சு. இராஜம் …
வீரவநல்லூர் சுந்தரம் அவர்களின் புதல்வி. தமிழின் சிறப்பை உலகறியச் செய்த தமிழாய்வாளர். கணிதத்தில் இளங்கலைப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றவர், தமிழார்வத்தில் மதுரையில் தமிழ் முதுகலைப் படிப்பில் சேர்ந்து (1963) முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றார். 1963 – 75 வரை பாத்திமா கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். மொழியியலில் சான்றிதழ் (1974), பட்டயப் படிப்புகளையும் (1975) அங்கேயே மேற்கொண்டார். பாத்திமா கல்லூரியில் சில ஆண்டுகள் தமிழ் பயிற்றுவித்தபின்னர், அமெரிக்கா சென்றார்.
 
1977 –இல் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முதுகலைப் பட்டமும் 1981 –இல் முனைவர் பட்டமும் பெற்றார். பென்சில்வேனியா பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக்கழகம் இரண்டிலும் பல ஆண்டுகள் விரிவுரையாளராகவும் உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றினார். அமெரிக்க மாணவர்களுக்குப் பலநிலைகளில் தமிழ்மொழி பயிற்றுவித்துள்ளார். பல ஆராய்ச்சித்திட்டங்களுக்கு அமெரிக்காவில் நிதி உதவிபெற்று, தமிழாராய்ச்சியை மேற்கொண்டார்.
 
வரலாற்றில் நிலைத்துநிற்கக்கூடிய அவருடைய ஒரு மிகப் பெரிய ஆய்வு நூல் - “ A Reference Grammar of Classical Tamil Poetry ( 150 B.C. – pre-fifth / sixth centuryA.D.) “. இந்நூலை American Philosophical Society (1992) வெளியிட்டுள்ளது. இந்நூலின் சிறப்பறிந்து, அதன் ஒரு படியை எனது பேரா. செ.வை. சண்முகம் அவர்களிடமிருந்து பெற்றுப் படித்தேன். மொழியியல் அடிப்படையில் தமிழ்மொழியை அவர் ஆழமாக ஆராய்ந்து, தமிழின் சிறப்பை வெளிக்கொண்டுவந்துள்ளார்.
 
மற்றொரு குறிப்பிடத்தகுந்த ஒரு நூல், அவரும் ஜீனி ஹெயின் ( Jeanne Hein) என்பவரும் இணைந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள 16 – ஆம் நூற்றாண்டில் Fr. Henriques என்பவரால் போர்த்துகீசிய மொழியில் எழுதப்பட்ட ஒரு தமிழ் இலக்கணம் ( ஹார்வார்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது) . முனைவர் ராஜம் அவர்கள் பழம்பெரும் புலவர்களான பேராசிரியர் இலக்குவனார், உரைவேந்தர் துரைசாமிப்பிள்ளை, பேரா. தமிழண்ணல் போன்றோரின் மாணவி. பேரா. அ. கி. ராமானுஜன், பேரா. எமனோ ஆகியோரின் பாராட்டைப் பெற்றவர். ராமானுஜன் தனது சங்கப் பாடல்களின் மொழிபெயர்ப்புகளைச் சரிபார்க்க முனைவர் ராஜம் அவர்கள் துணையை நாடினார் (நன்றி: திரு. மணி மணிவண்ணன்) .
 
பேராசிரியை அவர்கள் கணினி நிரல் ஆக்கத்திலும் வல்லவர். கணினித்தமிழ் என்ற ஒரு தொடர் தமிழகத்தில் புழங்குவதற்கு முன்னரே தமிழ்மொழிக்குப் பல நிரல்கள் எழுதியுள்ளார்..
 
தமிழகமும் தமிழ் ஆய்வுலகமும் இவருக்குச் சிறப்புசெய்யக் கடமைப்பட்டுள்ளது.
by Swathi   on 20 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.