LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

கணினியியல் வல்லுநர் திரு. வேல்முருகன் சுப்பிரமணியன் ...

தமிழ்க்கணினிமொழியியல் தொடர்பான முகநூல் ஊடாட்டத்தின்வழியே எனக்கு நண்பரான திரு. வேல்முருகன் சுப்பிரமணியன் அவர்களின் தமிழார்வமும் தமிழ்மொழி ஆய்வும் என்னை வியக்க வைத்துக்கொண்டிருக்கின்றன.
 
இதுவரை அவரை நான் நேரில் பார்த்தது இல்லை. தொலைபேசியில்கூட உரையாடிய நினைவு இல்லை. ஆனால் நாள்தோறும் என்னுடன் பழகிக்- கொண்டிருப்பவர்போல்தான் எனக்கு ஒரு உணர்வு.
 
தமிழ்மொழி தொடர்பான எனது முகநூல் பதிவுகளுக்கு உடனடியாகக் கருத்துரை வழங்குபவர் அவர். மிக நுட்பமாகவும், மிகுந்த அடக்கத்துடனும் கருத்துரை வழங்குவார்.
 
நெல்லை மாவட்டத்தில் பிறந்து , வளர்ந்து, கல்வி பெற்று, இன்று மிகச்சிறந்த ஒரு கணினிப் பொறியாளராக அமெரிக்காவில் கலிபோர்னியாவில் கூகிள் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். அதற்குமுன்னர் ஆரக்கிள் நிறுவனம், ஹைச் பி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு. நானும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி!
 
தமிழ்மொழி இலக்கணத்தில் ... பழந்தமிழ் மட்டுமல்ல .. இன்றைய தமிழிலும் மிக ஆழமான, நுட்பமான அறிவைக்கொண்டிருக்கிறார். தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் எந்தவொரு கருத்தையும் முகநூலில் முன்வைக்கமாட்டார். குறிப்பாக, தமிழ்ப்புணர்ச்சி இலக்கணத்தில் நிரம்பிய அறிவு பெற்றவர். மறைந்த மருத்துவர் பொன்முடியார் அவர்களின் இலக்கணக்கோட்பாட்டால் (''தமிழ்வெல்லத்தாழி'' என்ற ஆய்வுநூலால்) கவரப்பட்டவர். மருத்துவரின் மறைவுக்குப்பின்னர், அவர் குடும்பத்தினருக்கு ரூபாய் 70,000 ( எழுபதாயிரம்) கொடுத்துதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அவருடைய கணினியியல் துறையின் அறிவு .... உறுதியாகத் தமிழ்மொழி வளர்ச்சிக்கு ... குறிப்பாக மின்தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படும் என்பதில் ஐயம் இல்லை!
அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். மணிக்கணக்கில் இல்லை.... நாள்கணக்கில் அவருடன் தமிழ்மொழி, தமிழ்க்கணினிமொழியியல்பற்றி உரையாடவேண்டும் என்பது எனது நோக்கம். உறுதியாக ஒரு கட்டத்தில் அவர் இருக்குமிடத்திற்கே சென்று, தங்கியிருந்து, அவருடைய தொழில்நுட்ப அறிவைத் தெரிந்துகொண்டு வந்து, தமிழுக்குச் செயல்படுத்தவேண்டும் என்பது எனது விருப்பம்.
 
அயல்நாடுகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் செ.இரா. செல்வக்குமார், கு. கல்யாணசுந்தரம், திரு. இராமசாமி செல்வராசு ஆகியோரை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெற்ற எனக்கு .... வயது அனுமதித்தால் (தற்போது எனக்கு 72) ... உறுதியாக அவரை விரைவில் அவரிடத்திலேயே சந்திப்பேன்.
 
அவருக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றிகளும்!
by Swathi   on 20 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.