பெயர்: திரு.ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் பிறந்த ஊர்: தென்காசி வசிக்கும் ஊர்: ப்ளானோ (டெக்சாஸ்), வட அமெரிக்கா பணி / தொழில்: கணினி மென்பொருள்
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் வலைப்பூவில் தனது எழுத்துப் பயணத்தைத் தொடங்கிய ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் இரண்டு நூல்களுக்கு ஆசிரியர். விரிவான புத்தக விமர்சனங்களையும், சினிமா விமர்சனங்களையும் எழுதுவதில் ஆர்வமுள்ள ஸ்ரீனிவாசன் “நாடோடி எக்ஸ்பிரஸ்“ என்ற பெயரில் பயணக் கட்டுரைகளையும் எழுதி வருகிறார். இவருடைய இணையதள முகவரி – www.seenuguru.com இவர் எழுதிய இரண்டு நூல்கள் பற்றிய சிறு அறிமுகம்.
1.தற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் (வாசகசாலை வெளியீடு) ஹாலிவுட் இயக்குநர் க்வெண்டின் டாரண்டினோ (Quentin Tarantino)-வின் திரைப்படங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட கட்டுரைத் தொகுப்பு இது. ஒரு குறிப்பிட்ட ஹாலிவுட் இயக்குநரின் அத்தனை திரைப்படங்களையும் பகுப்பாய்ந்து அவற்றின் கதை வடிவமைப்பு, கதாபாத்திரச் சிறப்புகள் எனப் பல கோணங்களில் அலசும் சிறப்பான தொகுப்பு இது. தமிழில் இது ஒரு புது முயற்சியும் கூட.
2. தனுஷ்கோடி - அழிந்துபோன கதை (அமேசான் கிண்டிலில்) புயலில் சிக்கிச் சிதைந்த தனுஷ்கோடி எனும் நிலம் தன்னுள் ஏற்படுத்திய உணர்வுகள் அற்புதமானவை என்கிறார் ஆசிரியர். அந்த நிலத்தின் கொந்தளிப்பு தந்த உந்துதலால் பல தரவுகளைத் தேடித்தேடி ஆராய்ந்து அங்கு நிகழ்ந்த துன்பியல் நிகழ்வை அழகாகப் பதிவு செய்திருக்கும் தொகுப்பு இது.
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் குறித்த விவரங்களை, படைப்புகளை வலைத்தமிழில் வெளியிட உங்கள் நூல்கள் குறித்த விவரங்களை Magazine@ValaiTamil.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
|