கோயில் கோபுரத் தின் உச்சியில் 103 அடி உயரத் தில் மார்பிளால் ஆன கலசம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. 3 டன் எடையில் செய்யப்பட்டு, தங்கக் கவசத்தால் மூடப்பட்டுள்ளது.யந்திர வழிபாடு என்பது மிகவும் பழ மையானது. அம்பாஜி அம்பே மா கோயிலில் அம்பிகையை ஒரு சிங்க வாகனத்தின் மீது அமர்த்தியிருப்பது போன்ற தோற்றம் இருந்தாலும், உண் மையில் அம்மன் சிலை இங்கு இல்லை. "விஷயந்த் ரம்' என்ற யந்திரமே வழிபாட் டில் உள்ளது.
இந்த யந்தி ரத்தை ஒரு மார்பிள் பிளேட் டில் பொருத்தி, நகைகளால் அலங்கரித்துள்ளனர்.இந்த யந்திரமே அம்பிகை சிலை போன்ற தோற்றத்தில் உள்ளது. இதை ஸ்ரீயந்த்ரம் என்றும் சொல்கின்றனர். இதை தரிசித் தால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. இது தங்கத்தில் செய்யப்பட்டது. ஆமை வாகனத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது. |