இங்குள்ள மூலஸ்தானத்தில் அம்மனின் தலை மட்டுமே வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுவது சிறப்பு.மன வேற்றுமையால் கணவனைப் பிரிந்த பெண்கள் இங்கு வந்து ரேணுகாதேவியை வணங்கி, உரிய பரிகாரம் செய்து கொண்டால், மீண்டும் கணவருடன் சேரும் பாக்கியம் பெறுவர் என்ற நம்பிக்கை உள்ளது. அம்மனின் மூலஸ்தானத்துக்கு வெளியே சிறு கோயில் ஒன்றுள்ளது.
அதில் சத்தியமா என்ற அம்மன் அருள்கிறாள். என்னைக் காண வரும் பக்தர்கள் கோயில் குளத்தில் குளித்துவிட்டு முதலில் சத்தியமாவை வணங்கி விட்டு, பிறகு தான் என்னிடம் வந்து வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என ரேணுகாதேவி கட்டளையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. |