கால்நடைகளுக்கும் நோய் நொடி வராமல் இருப்பதற்காக வெள்ளை குதிரை ஒன்று அக்னி குண்டத்தில் இறங்குவது சிறப்பு.ஆனி மாதம் தேர்திருவிழா நடக்கிறது. தேர் திருவிழாவின் போது முதல் மூன்று மாதத்திற்கு முன்னால் தேங்காய் தட்டுதல் விழா நடக்கிறது. இதனை தேர் முகூர்த்தம் என்பர். சித்திரை மாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு அபிஷேகம் செய்து புண்யாச வாசனை செய்து விழா நடத்துவர்.
சீதேவியம்மன் தன் தங்கை கொண்டத்து காளியை அடிமைப்படுத்தியவரிடமிருந்து விடுவித்ததால், பல்வேறு சூழ்நிலைகளில் கொடுமைப்படுத்தப்படும் எண்ணப்படும் பெண்களும், நீண்டகாலம் குழந்தை இல்லாதவர்களும் இங்கு மாவிளக்கு ஏற்றி அம்மனை வேண்டிக் கொள்கின்றனர். கன்னிப்பெண்கள் நல்ல மணமகன் அமைய முளைப்பாரி வளர்க்கின்றனர். விஜயநகர மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கோயில் இது. |