ஆண்டாண்டு காலங்களாக ஆன்றோரும், சான்றோரும் வழி வழியாய் வழிபடும் அற்புத ஸ்தலமாக கோபிசெட்டிபாளையம் ஆண்டவர் மலை முருகன்
கோயில் திகழ்கிறது.குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் குடிகொண்டிருப்பான் என்பதை உணர்த்தும் விதத்தில் கோபியில் உள்ள மூன்று
குன்றுகளிலும் முருகப்பெருமான் வெவ்வேறு ரூபங்களில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோபியில் பச்சைமலை, பவளமலை,
ஆண்டவர்மலை என மூன்று குன்றுகள் இயற்கையாகவே அமையப்பெற்றுள்ளது.பச்சைமலை குன்றில் பாலமுருகனாகவும், பவளமலை குன்றில்
முத்துக்குமார சுவாமியாகவும், ஆண்டவர்மலை குன்றில் பால தண்டாயுதபாணி சுவாமியாகவும் வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை வழங்கி
பக்தர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று விளங்குகிறார்.சங்க இலக்கியம், தமிழ்ச்சங்கம், சங்கத்தமிழ் ஆகிய எல்லா சூழ்நிலைகளிலும் போற்றி
புகழப்படும் தெய்வம் முருகப்பெருமான். பாலதண்டாயுதபாணி சுவாமி ஆண்டவர் மலை குன்றில் நின்றகோலத்தில் வீற்றிருந்து வேண்டுவோருக்கு
வேண்டுவனவற்றை வாரி வழங்கி அருள்பொழிந்து வருகிறார்.
ஆண்டாண்டு காலங்களாக ஆன்றோரும், சான்றோரும் வழி வழியாய் வழிபடும் அற்புத ஸ்தலமாக கோபிசெட்டிபாளையம் ஆண்டவர் மலை முருகன் கோயில் திகழ்கிறது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் குடிகொண்டிருப்பான் என்பதை உணர்த்தும் விதத்தில் கோபியில் உள்ள மூன்று குன்றுகளிலும் முருகப்பெருமான் வெவ்வேறு ரூபங்களில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
கோபியில் பச்சைமலை, பவளமலை, ஆண்டவர்மலை என மூன்று குன்றுகள் இயற்கையாகவே அமையப்பெற்றுள்ளது. பச்சைமலை குன்றில் பாலமுருகனாகவும், பவளமலை குன்றில் முத்துக்குமார சுவாமியாகவும், ஆண்டவர்மலை குன்றில் பால தண்டாயுதபாணி சுவாமியாகவும் வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை வழங்கி பக்தர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று விளங்குகிறார்.
சங்க இலக்கியம், தமிழ்ச்சங்கம், சங்கத்தமிழ் ஆகிய எல்லா சூழ்நிலைகளிலும் போற்றி புகழப்படும் தெய்வம் முருகப்பெருமான். பாலதண்டாயுதபாணி சுவாமி ஆண்டவர் மலை குன்றில் நின்றகோலத்தில் வீற்றிருந்து வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை வாரி வழங்கி அருள்பொழிந்து வருகிறார். |