வள்ளி தெய்வானை தனி சன்னதியிலும் முருகன் தனி சன்னதியிலும் அருள்பாலிக்கின்றனர்.குன்றின் மீது 5 நிலை கொண்ட ராஜகோபுரம் கிழக்கு
நோக்கி நிற்கிறது. கோயிலுக்கு செல்ல அகலமான படிக்கட்டுகள் உள்ளன. ராஜகோபுரத்தின் முன்னால் தீப ஸ்தம்பம் உள்ளது. பிரகாரமும் இருக்கிறது.
முருகனின் கண தலைவரான இடும்பனுக்கு தனி சன்னதி உள்ளது.முருகனின் கோயிலுக்கு கீழே தென்கிழக்கு பக்கமுள்ள பாம்பு புற்றுக்கு தனி கோயில்
உள்ளது. இது மயூரகிரி சித்தரின் சமாதியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதற்கு அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
பக்தர்கள் இந்த புற்றை "சுப்பராயர்' என அழைக்கிறார்கள்.வள்ளி தெய்வானை சன்னதிக்கு செல்லும் வழியில் பாலை மரத்தின் அடியில் காவல்
தெய்வமான சுக்குமலையான் சன்னதி உள்ளது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் சுக்கு மலையானை வழிபாடு செய்கிறார்கள்.குன்று இருக்கும்
இடமெல்லாம் குமரன் இருப்பான்' என்பதற்கேற்ப ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி கதித்தமலையில் முருகப்பெருமான் அருள்பாலித்து
வருகிறார். அருணகிரிநாதரால் பாடல் பெற்றதும், அகத்தியர் பூஜித்த பெருமை பெற்றதுமான இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்குகிறது
வள்ளி தெய்வானை தனி சன்னதியிலும் முருகன் தனி சன்னதியிலும் அருள்பாலிக்கின்றனர். குன்றின் மீது 5 நிலை கொண்ட ராஜகோபுரம் கிழக்கு நோக்கி நிற்கிறது. கோயிலுக்கு செல்ல அகலமான படிக்கட்டுகள் உள்ளன. ராஜகோபுரத்தின் முன்னால் தீப ஸ்தம்பம் உள்ளது. பிரகாரமும் இருக்கிறது. முருகனின் கண தலைவரான இடும்பனுக்கு தனி சன்னதி உள்ளது.
முருகனின் கோயிலுக்கு கீழே தென்கிழக்கு பக்கமுள்ள பாம்பு புற்றுக்கு தனி கோயில் உள்ளது. இது மயூரகிரி சித்தரின் சமாதியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதற்கு அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. பக்தர்கள் இந்த புற்றை "சுப்பராயர்' என அழைக்கிறார்கள். வள்ளி தெய்வானை சன்னதிக்கு செல்லும் வழியில் பாலை மரத்தின் அடியில் காவல் தெய்வமான சுக்குமலையான் சன்னதி உள்ளது.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் சுக்கு மலையானை வழிபாடு செய்கிறார்கள். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்' என்பதற்கேற்ப ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி கதித்தமலையில் முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். அருணகிரிநாதரால் பாடல் பெற்றதும், அகத்தியர் பூஜித்த பெருமை பெற்றதுமான இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. |