காவல்தெய்வமாக இருந்து ஊரை காத்து வருகிறாள்.ஆண்டுதோறும் பெருமாளுக்கு முடிக்காணிக்கை செலுத்துவதற்காக ஸ்ரீரங்கத்துக்கு செல்லும் வழக்கத்தை ஈஞ்சன் குல மக்கள் கடைபிடித்தனர். ஒருமுறை ஸ்ரீரங்கம் செல்லும் போது இடையில் இளைப்பாறி செல்வதற்காக ஒரு இடத்தில் அமர்ந்தனர். அப்போது, நிதிக்காப்பாளராக செயல்பட்ட பெரியவர், இளைப்பாறிய இடத்திலேயே பணமுடிப்பை மறந்து வைத்து விட்டு பயணத்தை தொடர்ந்தார்.
பல மைல்கள் நடந்து சென்ற பிறகு பணமுடிப்பு இல்லாததை உணர்ந்த ஈஞ்சன் குல மக்கள், முடிப்பைத் தேடி வந்த வழியே திரும்பி சென்றனர். கடைசியாக தங்கிய இடத்தில் பணமுடிப்பு அப்படியே இருப்பதை கண்டு ஈஞ்சன் குலத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.பணமுடிப்பு அருகில் சென்று பார்த்தபோது அதில் நாகப்பாம்பு சுற்றி காவல் காத்துக் கொண்டிருந்தது.
இந்த பணமுடிப்பை காவல் காக்க தங்கள் குலத் தெய்வமான செல்லாண்டியம்மனே நாகமாக வந்தாள் என அவர்கள் எண்ணினர். தங்கள் குல அன்னைக்கு நாள்தோறும் பூஜை செய்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மதுக்கரை செல்லாண்டியம்மனை, ஈங்கூரில் தம்பிராட்டி அம்மனாக பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். |