கிழக்குப் பார்த்த கருவறையில் ஆஞ்சநேயர் தனது இடது பாதத்தை முன் வைத்தும், வலது பாதத்தை பின் வைத்தும் காட்சி கொடுக்கிறார். தாமரைத்
தண்டு போன்ற தனது இடது கை இடுப்பில் தாங்க, வலது கை அபயம் அளிக்கும் முத்திரையுடன் அமைந்துள்ளது. தனது காலை சிரசில் வைத்து
ஆனந்தமாக நர்த்தனமாடும் கோலத்தில் காட்சி தருகிறார். இத்தகைய கோலத்தில் இவரைக் காண்பது சிறப்பு.இந்த மலை வையாவூருக்கும் பெயர்
வந்ததே ஒரு வியப்பான செய்தியாகக் கூறப்படுகிறது. சஞ்சீவி பர்வதத்தை தனது கைகளில் சுமந்து வரும் ஆஞ்சநேயர் இந்த இடத்தில் சற்று
இளைப்பாற எண்ணி, மலையை கீழே வைக்காமல் தனது ஒரு கையிலிருந்து மறுகைக்கு மலையை மாற்றிக் கொண்டாராம். எனவே, மலையை கீழே
வைக்காத ஊர் என்பதே மருவி மலை வையாவூரானது என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இக்கோயிலின் எதிரே மண்டபம் அமைந்திருந்த பகுதியில்
மூலவர் இருந்ததாகவும்; மண்மூடி பலகாலம் இருந்த இவர் ஒரு மகானால் கண்டறியப்பட்டு அங்கிருந்து எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை
செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஆஞ்சநேயர் திருக்கோயிலுக்கு எதிர்புறத்தில் மலைமேல் தென் திருப்பதி என்று மக்களால் போற்றப்படும்
பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கிழக்குப் பார்த்த கருவறையில் ஆஞ்சநேயர் தனது இடது பாதத்தை முன் வைத்தும், வலது பாதத்தை பின் வைத்தும் காட்சி கொடுக்கிறார். தாமரைத் தண்டு போன்ற தனது இடது கை இடுப்பில் தாங்க, வலது கை அபயம் அளிக்கும் முத்திரையுடன் அமைந்துள்ளது. தனது காலை சிரசில் வைத்து ஆனந்தமாக நர்த்தனமாடும் கோலத்தில் காட்சி தருகிறார். இத்தகைய கோலத்தில் இவரைக் காண்பது சிறப்பு.
இந்த மலை வையாவூருக்கும் பெயர் வந்ததே ஒரு வியப்பான செய்தியாகக் கூறப்படுகிறது. சஞ்சீவி பர்வதத்தை தனது கைகளில் சுமந்து வரும் ஆஞ்சநேயர் இந்த இடத்தில் சற்று இளைப்பாற எண்ணி, மலையை கீழே வைக்காமல் தனது ஒரு கையிலிருந்து மறுகைக்கு மலையை மாற்றிக் கொண்டாராம். எனவே, மலையை கீழே வைக்காத ஊர் என்பதே மருவி மலை வையாவூரானது என்று கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் இக்கோயிலின் எதிரே மண்டபம் அமைந்திருந்த பகுதியில் மூலவர் இருந்ததாகவும், மண்மூடி பலகாலம் இருந்த இவர் ஒரு மகானால் கண்டறியப்பட்டு அங்கிருந்து எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஆஞ்சநேயர் திருக்கோயிலுக்கு எதிர்புறத்தில் மலைமேல் தென் திருப்பதி என்று மக்களால் போற்றப்படும் பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. |