ஏதாவது ஒரு பிரார்த்தனையை மனதில் வைத்துக் கொண்டு, அம்மையாரின் அபிஷேகத்துக்கு மிளகாய் அரைத்துக் கொடுத்தால், அது நிச்சயம் பலித்து விடும்
என்பது தலத்தின் சிறப்பு.குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதி, தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் பிறந்த நடராஜ சுவாமிகள் எனும் ஆன்மிக அடியாரால்
கண்டுபிடிக்கப்பட்டது. இளம் வயதிலேயே துறவறம் பூண்ட நடராஜர், யாத்திரையாகப் புறப்பட்டு பல திருத்தலங்களைத் தரிசித்து வந்து கொண்டிருந்தார். அப்படி
வந்தவர் புதுவையை அடைந்து சித்தானந்த சுவாமி கோயிலில் தவத்தில் ஆழ்ந்தார். அதுவரை நிரந்தரமாக எங்கும் தங்காமல் யாத்திரையாகப் பயணப்பட்டுக்
கொண்டே இருந்த நடராஜரை, ஓர் அசரீரிக் குரல் தடுத்தாட்கொண்டது. குருசாமி கோயிலுக்குப் போ.. அங்கே உனக்குப் பணிகள் காத்திருக்கின்றன என்பதே அந்த
அசரீரி. இதன்பின் அவரது உள்ளுணர்வுக்குக் கிடைத்த குறிப்புகளைக் கொண்டு விழுப்புரம் சாலையில் அரியூர் பகுதி வந்ததும், ஏதோ ஒரு குறிப்பு கிடைக்க...
அங்கே புதர் மண்டிய ஓர் இடத்தில் அமர்ந்து யோகத்தில் ஆழ்ந்தார். ஆம் ! அந்தப் புதருக்குள்தான் குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதி புதையுண்டு கிடந்தது.
தியானத்தின் போது நடராஜருக்கு குருசாமி அம்மையார் காட்சி கொடுத்து, நான் இங்கேதான் குடி கொண்டிருக்கிறேன் என்று சொல்ல... சட்டென்று தியானம்
கலைந்து எழுந்தார் நடராஜர். பரபரவென்று அந்த முள் புதரை அகற்றினார். சமாதியைக் கண்டுபிடித்தார். பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் படையினரின் எதிர்ப்பை
எல்லாம் சமாளித்து, அந்த ஜீவ சமாதிக்குப் புத்துயிர் தந்தார் நடராஜர்.
ஏதாவது ஒரு பிரார்த்தனையை மனதில் வைத்துக் கொண்டு, அம்மையாரின் அபிஷேகத்துக்கு மிளகாய் அரைத்துக் கொடுத்தால், அது நிச்சயம் பலித்து விடும் என்பது தலத்தின் சிறப்பு. அம்மையாரின் ஜீவ சமாதி, தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் பிறந்த நடராஜ சுவாமிகள் எனும் ஆன்மிக அடியாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இளம் வயதிலேயே துறவறம் பூண்ட நடராஜர், யாத்திரையாகப் புறப்பட்டு பல திருத்தலங்களைத் தரிசித்து வந்து கொண்டிருந்தார்.
அப்படி வந்தவர் புதுவையை அடைந்து சித்தானந்த சுவாமி கோயிலில் தவத்தில் ஆழ்ந்தார். அதுவரை நிரந்தரமாக எங்கும் தங்காமல் யாத்திரையாகப் பயணப்பட்டுக் கொண்டே இருந்த நடராஜரை, ஓர் அசரீரிக் குரல் தடுத்தாட்கொண்டது. குருசாமி கோயிலுக்குப் போ.. அங்கே உனக்குப் பணிகள் காத்திருக்கின்றன என்பதே அந்த அசரீரி. இதன்பின் அவரது உள்ளுணர்வுக்குக் கிடைத்த குறிப்புகளைக் கொண்டு விழுப்புரம் சாலையில் அரியூர் பகுதி வந்ததும், ஏதோ ஒரு குறிப்பு கிடைக்க... அங்கே புதர் மண்டிய ஓர் இடத்தில் அமர்ந்து யோகத்தில் ஆழ்ந்தார்.
ஆம் ! அந்தப் புதருக்குள்தான் குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதி புதையுண்டு கிடந்தது. தியானத்தின் போது நடராஜருக்கு குருசாமி அம்மையார் காட்சி கொடுத்து, நான் இங்கேதான் குடி கொண்டிருக்கிறேன் என்று சொல்ல... சட்டென்று தியானம் கலைந்து எழுந்தார் நடராஜர். பரபரவென்று அந்த முள் புதரை அகற்றினார். சமாதியைக் கண்டுபிடித்தார். பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் படையினரின் எதிர்ப்பை எல்லாம் சமாளித்து, அந்த ஜீவ சமாதிக்குப் புத்துயிர் தந்தார் நடராஜர். |