கிளிஞ்சிகுப்பம் அய்யனார் கோவில்
கிலோமீட்டரில் உள்ள தவளக்குப்பத்தில் இறங்கி, மேற்கு நோக்கிச்செல்லும் சாலையில் சுமார் ஐந்து கிலோமீட்டர் பயணிக்க வேண்டும் . உள்ளூர் அட்டோக்களை பயன் படுத்துவதே மிகவும் சிறந்தது . கரையாம்புத்தூர் வரை செல்லும் சில பேருந்துகள் வரும். ஆனால் அவற்றின் இடைவெளி மிக அதிகம் . பேருந்தில் செல்பவர்களுக்கு , ஊருக்குள் போகாது . அங்கிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் பசுமையான வயல்களுக்கு நடுவில் நடந்து சென்று ஊர் காவல் தெய்வம் அய்யனார் கோவிலை அடைய வேண்டும் . உள்ளூர் ஆடோக்களில் சென்றால் , ஊர் வரைச் சென்று , அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் நிலத்தின் நடுவே நடந்து செல்ல வேண்டும். போகும் வழியிலேயே பூசாரின் வீடு உள்ளது . போகும் போதே உடன் அழைத்துச் செல்லலாம் .
வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு , இங்கு நடைமுறையில் உள்ளது . அது ஒன்றே இந்த ஊர் மக்களின் , அய்யனாரை குல தெய்வமாக அனைத்து மக்களின் மென்மையான குணத்தை வெளிபடுத்தும் . அந்த ஒரு விஷயத்தில் கிளிஞ்சிகுப்பம் அய்யனார் கோவில் தமிழகத்திற்கு மட்டுமல்ல , இந்தியாவிற்கே ஒரு வழி காட்டி. அதுபற்றி இறுதியில் மறக்காமல் சொல்கிறேன்.
கிளிஞ்சிகுப்பம் அய்யனார் கோவிலின் அழகை சொல்ல வார்த்தைகள் ஆயிரம் வேண்டும் . பக்தர்களின் தண்ணீர் வசதிக்காக இங்கு மின்சார மோட்டார் உள்ளது . பல ஊர்களில் அய்யனார் மரம் செடி கொடிகள் அடங்கிய காடு போன்ற அடர்த்தியான இடத்தில் அமர்ந்து தன் காவல் தொழிலைச்செய்வார். கிளிஞ்சிகுப்பத்தில் இயற்கை எழில் சூழ , வளமான நிலங்களுக்கு நடுவே , தென்றல் தாலாட்ட அய்யனார் ,தேவியர்களுடன் காட்சித் தருவார்.
அய்யனார் கோவிலைச் சுற்றி பொங்கல் வைக்க நிறைய இடங்கள் உள்ளன . விறகுக்கு குறையில்லை . அது மட்டுமல்ல . கோவிலின் அருகிலே வாழை மரங்கள் உள்ளன . கோவிலுக்கு வருபவர்கள் , அங்கு தேவைக்கு ஏற்ப வாழை இலை எடுப்பதால் , யாரும் எதுவும் சொல்வதில்லை.
சிலருக்குத் தெரியும் . பலருக்குத் தெரியாது . அய்யனாரை வேண்டி, வேண்டுதல் நிறைவேறினால் , வேண்டியபடி அய்யனாருக்கு பலி கொடுப்பாகள் . அது வேண்டுதலைப் பொறுத்து ஆடு , கோழி என இருக்கலாம் .சிலர் சில ஊர்களில் மது பானங்களையும் வைத்து வழிபடுகிறார்கள் . அப்படி பலியிடும்போது, அய்யனார் கண்ணில் படாமல் தனியாககே பலியிடுவார்கள் .
ஆனால் அய்யனார் சைவ உணவையே உண்பார். எனவே படையல் போடும்போது அய்யனாருக்கு சர்க்கரை பொங்கல் , பழம் வைத்தே படைக்கப் படும்.
எல்லா ஊர்களிலும் இருப்பது போல் , இங்கேயும் அய்யனார் தனது இடது காலை மடித்து பீடத்தின் மேல் வைத்து , வலது காலை தொங்கவிட்டு அமர்ந்திருப்பார். அவரது இரு புறமும் தோழியர்கள் அப்படியே அமர்ந்து உள்ளனர்.
எல்லா நாட்களும் காலை , மாலை இரு வேலையும் அய்யனாருக்கு தவறாமல் விளக்கு ஏற்றுகிறார்கள் . பொதுவாக அனைத்து திங்கட்கிழமைகளிலும் வேண்டுதலுக்காக வருபவர்கள் அய்யனாருக்கு பொங்கல் வைத்து , படைத்து செல்கின்றனர் . பூசாரி கூப்பிடும் தூரத்தில் இருப்பதால் , மற்ற நாட்களில் வருபவர்களுக்கும் எவ்வித தடங்களும் இன்றி பூஜைக்கு வேண்டிய ஏற்பாட்டை செய்துத் தருகின்றனர்.
ஆடி மாதம் அய்யனாருக்கு ஏற்ற மாதம் . ஆடிமாதம் மழுவதும் திருவிழாவாகவே இருக்கும். ஆடி வெள்ளி, சனிக்கிழமைகளில் கூட்டம் அலை மோதும். அய்யனாருக்கு ஒரு பக்கம் பொங்கல் வைப்பார்கள் . ஒருபுறம் வேண்டுதல் நிறைவேறியவர்கள் தலை முடியை அய்யனாருக்கு காணிக்கையாக செலுத்துவார்கள் . ஒருபுறம் அய்யனாரின் இஷ்ட தெய்வங்களுக்கு கோழி , ஆடு பலி கொடுத்து , சமைத்து சாப்பிடுவார்கள் .
இங்கு சுற்றி உள்ள மக்களோடு மட்டுமில்லாமல் , வடக்கே பாண்டிச்சேரி , அதன் சுற்று கிராம மக்களுக்கும் , தெற்கே கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் வரை , பல குடும்பங்களுக்கும் அய்யனார் குல தெய்வமாக நின்று அருள் பாவித்து , அனைவருக்கும் நல்லாசி அளிக்கிறார்.
இங்குள்ள பூசாரியின் சிறப்பு , இங்குள்ள மக்களின் பகுத்தறிவிற்கு ஓர் சான்று . கடவுளிடம் ஆண் , பெண் , ஏழை , பணக்காரர் , திருமணமானவர் , ஆகாதவர் , கணவனை இழந்தவர் , மனைவியை இழந்தவர், விதவை என்ற பாகுபாடு இல்லை என்பதற்கும் , கடவுளின் முன் எல்லோரும் சமம் என்பதற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது .
அதுபோலவே , கிராமத்தில் வாழும் மக்களிடம் , மேற்கத்தைய நாகரீகம் குறைவாக இருக்கலாமே தவிர , மனிதமும் , முற்போக்குச் சிந்தனையும் , பிறரை மதிக்கும் குணமும் அதிகம் என்பதற்கும் இந்தக் கோவிலும் , இங்கு வாழும் மக்களும் , இங்கு வரும் மக்களும் ஒரு சான்றாக விளங்குகின்றனர் .
ஆமாம். இந்தக் கோவிலின் பூசாரி ஒரு பெண் . பெண் என்பதைவிட ஒரு விதவை . கணவனை இழந்தவர் . அவர் தான் பூஜை செய்கிறார் . சிறுவர் , புது மனத் தம்பதிகள் , பெரியவர்கள் என அனைவருக்கும் , பெண் பூசாரி மூலமே பூஜைகள் நடக்க , வேண்டுதலின் படி , எல்லாம் நிறைவேற , அவர்களும் கோவிலுக்கு காணிக்கையை செலுத்து கின்றனர் . மந்திரம் , தந்திரங்களை இறைவன் பார்ப்பதில்லை என்பதற்கும் , நல்ல மனம் ஒன்றே இறைவனின் ஆசி பெற , அருளை அடைய சிறந்த மார்க்கம் என்பதற்கும் கிளிஞ்சிகுப்பம் அய்யானார் கோவில் சிறந்த உதாரணமாக திகழ்கிறது .
அன்புடன் ,
கோவி . சேகர்
கிளிஞ்சிகுப்பம் அய்யனார் கோவில் கிலோமீட்டரில் உள்ள தவளக்குப்பத்தில் இறங்கி, மேற்கு நோக்கிச்செல்லும் சாலையில் சுமார் ஐந்து கிலோமீட்டர் பயணிக்க வேண்டும் . உள்ளூர் அட்டோக்களை பயன் படுத்துவதே மிகவும் சிறந்தது . கரையாம்புத்தூர் வரை செல்லும் சில பேருந்துகள் வரும். ஆனால் அவற்றின் இடைவெளி மிக அதிகம் . பேருந்தில் செல்பவர்களுக்கு , ஊருக்குள் போகாது . அங்கிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் பசுமையான வயல்களுக்கு நடுவில் நடந்து சென்று ஊர் காவல் தெய்வம் அய்யனார் கோவிலை அடைய வேண்டும் . உள்ளூர் ஆடோக்களில் சென்றால் , ஊர் வரைச் சென்று , அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் நிலத்தின் நடுவே நடந்து செல்ல வேண்டும். போகும் வழியிலேயே பூசாரின் வீடு உள்ளது . போகும் போதே உடன் அழைத்துச் செல்லலாம் .வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு , இங்கு நடைமுறையில் உள்ளது . அது ஒன்றே இந்த ஊர் மக்களின் , அய்யனாரை குல தெய்வமாக அனைத்து மக்களின் மென்மையான குணத்தை வெளிபடுத்தும் . அந்த ஒரு விஷயத்தில் கிளிஞ்சிகுப்பம் அய்யனார் கோவில் தமிழகத்திற்கு மட்டுமல்ல , இந்தியாவிற்கே ஒரு வழி காட்டி. அதுபற்றி இறுதியில் மறக்காமல் சொல்கிறேன்.
கிளிஞ்சிகுப்பம் அய்யனார் கோவிலின் அழகை சொல்ல வார்த்தைகள் ஆயிரம் வேண்டும் . பக்தர்களின் தண்ணீர் வசதிக்காக இங்கு மின்சார மோட்டார் உள்ளது . பல ஊர்களில் அய்யனார் மரம் செடி கொடிகள் அடங்கிய காடு போன்ற அடர்த்தியான இடத்தில் அமர்ந்து தன் காவல் தொழிலைச்செய்வார். கிளிஞ்சிகுப்பத்தில் இயற்கை எழில் சூழ , வளமான நிலங்களுக்கு நடுவே , தென்றல் தாலாட்ட அய்யனார் ,தேவியர்களுடன் காட்சித் தருவார்.
அய்யனார் கோவிலைச் சுற்றி பொங்கல் வைக்க நிறைய இடங்கள் உள்ளன . விறகுக்கு குறையில்லை . அது மட்டுமல்ல . கோவிலின் அருகிலே வாழை மரங்கள் உள்ளன . கோவிலுக்கு வருபவர்கள் , அங்கு தேவைக்கு ஏற்ப வாழை இலை எடுப்பதால் , யாரும் எதுவும் சொல்வதில்லை.சிலருக்குத் தெரியும் . பலருக்குத் தெரியாது . அய்யனாரை வேண்டி, வேண்டுதல் நிறைவேறினால் , வேண்டியபடி அய்யனாருக்கு பலி கொடுப்பாகள் . அது வேண்டுதலைப் பொறுத்து ஆடு , கோழி என இருக்கலாம் .சிலர் சில ஊர்களில் மது பானங்களையும் வைத்து வழிபடுகிறார்கள் . அப்படி பலியிடும்போது, அய்யனார் கண்ணில் படாமல் தனியாககே பலியிடுவார்கள் .
ஆனால் அய்யனார் சைவ உணவையே உண்பார். எனவே படையல் போடும்போது அய்யனாருக்கு சர்க்கரை பொங்கல் , பழம் வைத்தே படைக்கப் படும்.எல்லா ஊர்களிலும் இருப்பது போல் , இங்கேயும் அய்யனார் தனது இடது காலை மடித்து பீடத்தின் மேல் வைத்து , வலது காலை தொங்கவிட்டு அமர்ந்திருப்பார். அவரது இரு புறமும் தோழியர்கள் அப்படியே அமர்ந்து உள்ளனர்.எல்லா நாட்களும் காலை , மாலை இரு வேலையும் அய்யனாருக்கு தவறாமல் விளக்கு ஏற்றுகிறார்கள் . பொதுவாக அனைத்து திங்கட்கிழமைகளிலும் வேண்டுதலுக்காக வருபவர்கள் அய்யனாருக்கு பொங்கல் வைத்து , படைத்து செல்கின்றனர் .
பூசாரி கூப்பிடும் தூரத்தில் இருப்பதால் , மற்ற நாட்களில் வருபவர்களுக்கும் எவ்வித தடங்களும் இன்றி பூஜைக்கு வேண்டிய ஏற்பாட்டை செய்துத் தருகின்றனர்.ஆடி மாதம் அய்யனாருக்கு ஏற்ற மாதம் . ஆடிமாதம் மழுவதும் திருவிழாவாகவே இருக்கும். ஆடி வெள்ளி, சனிக்கிழமைகளில் கூட்டம் அலை மோதும். அய்யனாருக்கு ஒரு பக்கம் பொங்கல் வைப்பார்கள் . ஒருபுறம் வேண்டுதல் நிறைவேறியவர்கள் தலை முடியை அய்யனாருக்கு காணிக்கையாக செலுத்துவார்கள் . ஒருபுறம் அய்யனாரின் இஷ்ட தெய்வங்களுக்கு கோழி , ஆடு பலி கொடுத்து , சமைத்து சாப்பிடுவார்கள் .
இங்கு சுற்றி உள்ள மக்களோடு மட்டுமில்லாமல் , வடக்கே பாண்டிச்சேரி , அதன் சுற்று கிராம மக்களுக்கும் , தெற்கே கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் வரை , பல குடும்பங்களுக்கும் அய்யனார் குல தெய்வமாக நின்று அருள் பாவித்து , அனைவருக்கும் நல்லாசி அளிக்கிறார். இங்குள்ள பூசாரியின் சிறப்பு , இங்குள்ள மக்களின் பகுத்தறிவிற்கு ஓர் சான்று . கடவுளிடம் ஆண் , பெண் , ஏழை , பணக்காரர் , திருமணமானவர் , ஆகாதவர் , கணவனை இழந்தவர் , மனைவியை இழந்தவர், விதவை என்ற பாகுபாடு இல்லை என்பதற்கும் , கடவுளின் முன் எல்லோரும் சமம் என்பதற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது . அதுபோலவே , கிராமத்தில் வாழும் மக்களிடம் , மேற்கத்தைய நாகரீகம் குறைவாக இருக்கலாமே தவிர , மனிதமும் , முற்போக்குச் சிந்தனையும் , பிறரை மதிக்கும் குணமும் அதிகம் என்பதற்கும் இந்தக் கோவிலும் , இங்கு வாழும் மக்களும் , இங்கு வரும் மக்களும் ஒரு சான்றாக விளங்குகின்றனர் .ஆமாம். இந்தக் கோவிலின் பூசாரி ஒரு பெண் . பெண் என்பதைவிட ஒரு விதவை . கணவனை இழந்தவர் . அவர் தான் பூஜை செய்கிறார் . சிறுவர் , புது மனத் தம்பதிகள் , பெரியவர்கள் என அனைவருக்கும் , பெண் பூசாரி மூலமே பூஜைகள் நடக்க , வேண்டுதலின் படி , எல்லாம் நிறைவேற , அவர்களும் கோவிலுக்கு காணிக்கையை செலுத்து கின்றனர் . மந்திரம் , தந்திரங்களை இறைவன் பார்ப்பதில்லை என்பதற்கும் , நல்ல மனம் ஒன்றே இறைவனின் ஆசி பெற , அருளை அடைய சிறந்த மார்க்கம் என்பதற்கும் கிளிஞ்சிகுப்பம் அய்யானார் கோவில் சிறந்த உதாரணமாக திகழ்கிறது .
அன்புடன் ,
கோவி . சேகர் |