மூலவர் நரசிம்மர், குறுக்காக குத்துக் காலிட்டு,அதில் கைகளைத் தொங்கவிட்டபடி யோகநிலையில் காட்சி தருகிறார். இங்குள்ள சுதர்சனர் அஷ்டபுஜ
சுதர்சனராக எட்டுக்கைகளுடன் காட்சி தருவது இத்தலத்தின் தனி சிறப்பு.1998, மே25ல் யோக நரசிம்மர் சிலை இக்கோயிலில் பிரதிஷ்டை
செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மே 25ல் லட்சார்ச்சனையும், 26ல் சகஸ்ர கலசாபிஷேகமும், 27ல் சுதர்சன ஹோமமும் நடக்கிறது. அமாவாசை
நாட்களில் இரவு 12மணிவரை விசேஷ பூஜை உண்டு. 300லிட்டர் பால், 300லிட்டர் தயிர் யோகநரசிம்மருக்கு அபிஷேகம் செய்யப்படும். அமாவாசை
வழிபாட்டில் எதிரிகளின் தொல்லை நீங்கவும், வழக்கில் வெற்றி உண்டாகவும் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.புரட்டாசி நவராத்திரியின் ஒன்பது
நாளும் ஒன்பது விதமாக யோகநரசிம்மர் அலங்கரிக்கப்படுகிறார். வெண்ணெய், செந்தூரம், துளசி, எலுமிச்சை, நவபுஷ்பம் அலங்காரங்கள் பார்ப்பவரை
பரவசத்தில் ஆழ்த்தும்.
மூலவர் நரசிம்மர், குறுக்காக குத்துக் காலிட்டு,அதில் கைகளைத் தொங்கவிட்டபடி யோகநிலையில் காட்சி தருகிறார். இங்குள்ள சுதர்சனர் அஷ்டபுஜ சுதர்சனராக எட்டுக்கைகளுடன் காட்சி தருவது இத்தலத்தின் தனி சிறப்பு. 1998, மே25ல் யோக நரசிம்மர் சிலை இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மே 25ல் லட்சார்ச்சனையும், 26ல் சகஸ்ர கலசாபிஷேகமும், 27ல் சுதர்சன ஹோமமும் நடக்கிறது.
அமாவாசை நாட்களில் இரவு 12மணிவரை விசேஷ பூஜை உண்டு. 300லிட்டர் பால், 300லிட்டர் தயிர் யோக நரசிம்மருக்கு அபிஷேகம் செய்யப்படும். அமாவாசை வழிபாட்டில் எதிரிகளின் தொல்லை நீங்கவும், வழக்கில் வெற்றி உண்டாகவும் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். புரட்டாசி நவராத்திரியின் ஒன்பது நாளும் ஒன்பது விதமாக யோகநரசிம்மர் அலங்கரிக்கப்படுகிறார். வெண்ணெய், செந்தூரம், துளசி, எலுமிச்சை, நவபுஷ்பம் அலங்காரங்கள் பார்ப்பவரை பரவசத்தில் ஆழ்த்தும். |