பெயர் : இரம்யா ரவீந்திரன் பிறந்த ஊர் : கடலூர் வசிக்கும் ஊர் : சார்லட், வட கரோலைனா, வட அமெரிக்கா பணி : கணினி மென்பொருள்
இரம்யா ரவீந்திரன் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக கவிதை, கதை, பயணக் கட்டுரை, அரசியல், சினிமா என்று பல்வேறு வகைமைகளில் தனது வலைப்பக்கத்தில் எழுதி வருகிறார். அட்லாண்டாவில் இருந்து வெளி வரும் வல்லினச் சிறகுகள் என்ற மின்னிதழின் ஆசிரியர் குழுவில் இருக்கிறார். அவருடைய படைப்புகளை https://pachaimannu.blogspot.com/ என்ற இணையதள முகவரியில் காணலாம்.
தமிழ்ச்சரம்.காம் நடத்திய 2020-சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டியில் "அன்றாட வாழ்வில் நகைச்சுவை" என்ற தலைப்பில் முதல் பரிசு பெற்றவர்.
இரம்யா அவர்களின் இரண்டு நூல்கள் பற்றிய சிறிய அறிமுகம் இங்கே:
அம்புலிக்கு அப்பால்
(ஒரு துளிக் கவிதை வெளியீடு)
|
வல்லினச் சிறகுகள் மற்றும் உலகப் பெண் கவிஞர் பேரவை இணைந்து நடத்திய மருத்துவர் அம்பிகாதேவி நினைவு கவிதைப் போட்டியில் பரிசு வென்ற நூல். இயற்கை, சமூகம் குறித்த பார்வை, பெண்கள், குழந்தைகள் குறித்த கவிதைகள் என்று பல்வேறு பொருண்மைகளில் கவிதைகளைப் படைத்திருக்கிறார். இவருடைய கவிதைகளில் சமூகத்தை குறித்த தன்னுடைய பார்வையையும், பெண்களின் நிலை குறித்த அக்கறையையும் காண முடிகிறது.
|
முக்கோணம்(குறு நாவல்)
(அமேசான் கிண்டிலில்)
|
ஒரு மாறுபட்ட கதைக் களத்தில் பின்னப்பட்ட கதை. ஆசிரியர் அனுபவத்தில் விளைந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
|
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் குறித்த விவரங்களை, படைப்புகளை வலைத்தமிழில் வெளியிட உங்கள் நூல்கள் குறித்த விவரங்களை Magazine@ValaiTamil.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
|