நேற்று காலை 11:30 மணிக்கு சென்னை, தேனாம்பேட்டையிலுள்ள மாநில தகவல் ஆணையம் முன்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் & தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் சார்பாக “சங்கு ஊதும் போராட்டம்” நடத்தப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்தது.
சட்ட பஞ்சாயத்து இயக்க தலைவர் சிவ.இளங்கோ, பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம், செயலாளர்கள் பாலாஜி, ஜாகீர் உசேன் மற்றும் பல உறுப்பினர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க தலைவர் கார்த்திகேயன், பொதுச்செயலாளர் கிப்சன், முத்துக்குமார் மற்றும் பல ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
தகவல் உரிமைச்சட்ட ஆர்வலர் கோபாலகிருஷ்ணன், காந்தியவாதி சசிபெருமாள் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
|