LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
- சட்ட பஞ்சாயத்து இயக்கம்

தமிழகத்தில் மது விலக்கு தொடர்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கைக்கள்

மதுவினால் சீரழியும் குடும்பங்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கேரளாவைப் பின்பற்றி மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த உடனே தொடங்கி 2016 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும்.


மதுவிலக்கை நோக்கிய முதற்கட்ட செயல்பாடாக, தமிழக அரசு கீழ்கண்ட நடவடிக்கைகளை உடனே அமல்படுத்த சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோருகிறது.


1. இலக்கு வைத்து வருமானத்தைப் பெருக்காமல் மக்கள் நல்வாழ்வே முக்கியம் என்ற அடிப்படையில் புதிய மதுக்கடைகள் இனி திறக்கப்படாது என தமிழக அரசு கொள்கை அறிவிப்பு வெளியிடவேண்டும்.


2. பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகளை மூடக்கோரி மனு அளித்தாலோ, போராட்டம் நடத்தினாலோ, அக்கடைகள் உடனடியாக மூடப்பட வேண்டும். போராட்டத்தின் காரணமாக மூடப்படும் கடைகளை வேறு இடத்தில் திறக்கக் கூடாது.


3. தற்போது 12 மணிநேரமாக உள்ள மதுக்கடைகள் செயல்படும் நேரத்தை 6 மணி நேரமாகக் குறைக்க வேண்டும்.


4. வாரக்கூலி பெறும் குடிநோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளுக்கு சனி, ஞாயிறு என 2 நாட்கள் விடுமுறை விடவேண்டும். அதேபோல், மாதத்தில் முதல் நாள், அரசு விடுமுறை நாட்களில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். 


5. குற்றச்செயல்கள் உருவாகும் இடமாக இருக்கும், குடிப்பகங்கள் (பார்கள்) உடனடியாக மூடப்படவேண்டும்.


6. தமிழகமெங்கும் உள்ள குடிநோயாளிகள் மறுவாழ்வு பெறுவதற்கு ஒன்றித்திற்கு ஒரு மறுவாழ்வு மையங்கள் திறக்கப்பட வேண்டும். மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வுப் பாடங்களை பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.


7. 21 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட எவருக்கும் மது விற்பனை செய்யக்கூடாது என தற்போது உள்ள சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும். இளையதலைமுறையின் எதிர்காலத்தை கருத்தி கொண்டு இச்சட்டத்தை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

by Swathi   on 26 Aug 2014  0 Comments
Tags: Satta Panchayat Iyakkam   SPI   சட்ட பஞ்சாயத்து இயக்கம்              
 தொடர்புடையவை-Related Articles
நாட்டுக்காக 4 பேர் டாஸ்மாக்கை ஊத்தி மூடும் போராட்டம்… நாட்டுக்காக 4 பேர் டாஸ்மாக்கை ஊத்தி மூடும் போராட்டம்…
தமிழகத்தில் மது விலக்கு தொடர்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கைக்கள் தமிழகத்தில் மது விலக்கு தொடர்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கைக்கள்
சட்ட பஞ்சாயத்து இயக்கம் நடத்திய டாஸ்மாக்கிற்கு அஞ்சலி செலுத்தும் ஆர்ப்பாட்டம் !! சட்ட பஞ்சாயத்து இயக்கம் நடத்திய டாஸ்மாக்கிற்கு அஞ்சலி செலுத்தும் ஆர்ப்பாட்டம் !!
தூங்கிக் கொண்டிருக்கும் தகவல் ஆணையத்தை தட்டி எழுப்பக் கோரி நடைபெற்ற சங்கு ஊதும் போராட்டம் !! தூங்கிக் கொண்டிருக்கும் தகவல் ஆணையத்தை தட்டி எழுப்பக் கோரி நடைபெற்ற சங்கு ஊதும் போராட்டம் !!
சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மதுவிலக்கு செயல்திட்டம்  -2016 – மதுவிலக்கு ஆண்டு சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மதுவிலக்கு செயல்திட்டம் -2016 – மதுவிலக்கு ஆண்டு
ஊழலை ஒழிக்கவும், மதுவிற்கு எதிராகவும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சற்று முன் தொடங்கப்பட்டது. ஊழலை ஒழிக்கவும், மதுவிற்கு எதிராகவும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சற்று முன் தொடங்கப்பட்டது.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.