LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் ஆய்வுக்கட்டுரைகள்

திருவள்ளுவர் நாளில் தமிழர்கள் நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யலாம்?

உலகத் தமிழர்களுக்கு அடையாளமாக விளங்கும் திருவள்ளுவருக்கு ஆண்டுதோறும் ஒரு நாள் கடைப்பிடிக்கப் படுகிறது. தமிழக அரசு இந்நாளை திருவள்ளுவர் நாளாக அறிவித்த போதிலும் இந்த நாளை உலகத் தமிழர்கள் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பதை சிந்திப்பது அவசியமாகிறது. தமிழ் அமைப்புகள் மட்டும் தங்களால் முடிந்தவரை சிறிய அளவில் இந்நாளில் நிகழ்சிகளை நடத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் இந்நாளில் அறியப்பட வேண்டிய திருவள்ளுவரின் புகழை இன்று தமிழர்களே அறியாத நிலை தான் இன்றுவரை நீடிக்கிறது. இந்த நிலையை நாம் தான் மாற்ற வேண்டும். அதற்கு இந்நாளில் நாம் என்ன செய்ய வேண்டும் அல்லது என்ன செய்யலாம் ?

௧. இல்லந்தோறும் திருவள்ளுவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து திருக்குறள் ஓதுதல் .

௨. உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் திருவள்ளுவர் நாள் வாழ்த்து தெரிவித்தல் .

௩. நம் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களிடம் இனிப்பு வழங்கி வள்ளுவர் நாள் வாழ்த்து பகிர்தல்.

௪. சிறுவர்கள், மாணவர்களை ஒன்று கூடச் செய்து அவர்களை திருக்குறள் ஒப்புவிக்கச் செய்வதோடு திருக்குறள் காட்டும் நன்னெறியை கடைப்பிடிக்க உறுதி மொழி எடுத்தல்.

௫. ஒவ்வொரு தமிழரும் இந்த நாளில் தங்கள் உடையில் சிறிய திருவள்ளுவர் உருவ படத்தை குத்திக் கொள்ளுதல் வேண்டும்.

௬. அமைப்புகளாக இருப்பவர்கள் பிள்ளைகளுக்கு திருக்குறள் போட்டிகளை நடத்துதல்.

௭. தெரு முனைகளில் திருவள்ளுவர் உருவப்படத்தை நிறுவி அப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குதல்.

௮. இல்லங்களில் , நகரின் சுவர்களில் புதிய வண்ணம் தீட்டி திருக்குறள் எழுதுதல்.

௯. திருவள்ளுவர் நாளில் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல்.

௧௦. வள்ளுவர் கோட்டம், குமரி வள்ளுவர் சிலை மற்றும் வள்ளுவர் சிலைகள் அமைக்கப்பட்ட மண்டபங்களுக்கு குடும்பத்தோடு சென்று வருதல்.

இவ்வாறு பல வழிகளில் திருவள்ளுவர் நாளை தமிழர்கள் கடைபிடிக்க வேண்டுகிறோம். தமிழகமெங்கும் திருவள்ளுவர் நாள் வெகு சிறப்பாக கொண்டாடப் பட்டால் உலகமே தமிழர்களின் ஒற்றுமையை பெருமையை உற்று நோக்கும். இதன் மூலம் தமிழர்கள் தாங்கள் இழந்த பண்பாட்டை மீட்டெடுக்கலாம்.

நன்றி: தமிழர் பண்பாட்டு நடுவம்.

by Swathi   on 10 Oct 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா
சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா. சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா.
Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா
சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் Thirukkural Translations in World Languages சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் Thirukkural Translations in World Languages
திருவண்ணாமலையில் 1,330 திருக்குறள்களை ஓதி மலைவலம் திருவண்ணாமலையில் 1,330 திருக்குறள்களை ஓதி மலைவலம்
அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களுக்கு வரவேற்பு. அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களுக்கு வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.