|
|||||
எனைத்தானும் நல்லவை கேட்க : 2- பகுதி 2- குறலோடு உறவாடு - டாக்டர். சுப. திருப்பதி - அமெரிக்க நரம்பியல் நிபுணருக்கு ஆச்சரியமூட்டிய வள்ளுவர் |
|||||
எனைத்தானும் நல்லவை கேட்க : 2- பகுதி 2- குறலோடு உறவாடு - டாக்டர். சுப. திருப்பதி - அமெரிக்க நரம்பியல் நிபுணருக்கு ஆச்சரியமூட்டிய வள்ளுவர் ஆச்சரியமான அமெரிக்க நரம்பியல் நிபுணர்: திரு. சுப. திருப்பதி அவர்கள் நரம்பியல் துறைக்கு வந்த போது ‘இவரைப் போல் நரம்பியல் நிபுணராகத் தான் மாற வேண்டும்’ என்று ஒரு அமெரிக்க நரம்பியல் வல்லுநரை நினைத்திருக்கிறார். மேலும் திரு. சுப. திருப்பதி அவர்களுக்குத் திருக்குறளில் இயல்பாகவே அதிக ஈடுபாடு என்பதால் எதைப் பேசினாலும் அதில் திருக்குறளை மேற்கோள் காட்டி விடுவார். இதனை நரம்பியல் துறைக்கும் பயன்படுத்தியுள்ளார். இதனைக் கேட்ட அந்த பிரபல அமெரிக்க நரம்பியல் நிபுணர் ஆச்சரித்துடன் திரு. சுப. திருப்பதி அவர்களைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். வாழ்க்கைக்கான திருக்குறள்: எந்தவொரு மனிதனும் தன் வாழ்நாளில் நிச்சயமாக 10 குறட்பாக்களுக்காவது எடுத்துக்காட்டாக வாழ்ந்திருப்பான். எனவே எந்தவொரு மனிதர் இறக்கும் போதும் அவருக்கு மலர்மாலை, பொன்னாடை அணிவிப்பதற்குப் பதிலாக அவர் வாழ்க்கையைக் குறிப்பிடுகின்ற 10 குறட்பாக்களை லேமினேசன் செய்து இறந்தவர் மேல் வைத்து அவரது குடும்பத்தார்க்குக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் திரு. சுப. திருப்பதி அவர்கள். இதனால் அவர் இறந்த பிறகும் கூட அந்த குறட்பாக்களால் உயிர் வாழ்வதாக அவரது குடும்பத்தார் நினைத்துக் கொள்வர். இது போல மற்றவரும் செய்ய முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறார். உளவியல் நோக்கில் திருக்குறள்: திருக்குறளை உளவியல் நோக்கில் பார்ப்பது இவருக்கு பிடித்தமான ஒன்று. திருக்குறளின் காமத்துப்பாலானது இன்றும் சரியான முறையில் வெளிப்படுத்தப்படவில்லை என்று கூறி வருத்தப்படுகிறார் திரு. சுப.. திருப்பதி அவர்கள். நன்றாக யோசித்தோமானால் காமத்தில் நாம் தேடுவது தாய்மையை. தாய்மையின் எச்சமும், மீதியும் தான் காமத்தில் தேடப்படுகின்றன. ஊடலானது மனிதனின் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்றும், அது எப்படி இருக்க வேண்டும் என்றும், அதனால் விளையும் நன்மை என்னவென்றும் திருவள்ளுவர் கூறியிருக்கிறார். ஒரு தனி மனிதனின் வாழ்க்கையைத் திருவள்ளுவரை விட உளவியல் நோக்கில் யாரும் கூறவில்லை. உளவியல் வல்லுநர் சிக்மண்ட் பிராய்டுவை விடத் திருவள்ளுவர் சிறந்த உளவியல் வல்லுநர். நாம் அதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முன்வர வேண்டும். சிந்தனைத் தெளிவு: எல்லா துறையில் இருப்பவர்களும் திருக்குறளைக் கற்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகத் திருவள்ளுவர் வெளிப்படுவார். சிந்தனைத் தெளிவு இருந்தாலே போதுமானது. தினமும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். தெளிவான சிந்தனையானது ஒரு வலிமையாகத் திகழும். |
|||||
by Lakshmi G on 13 Oct 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|