காவல் வீரர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கணபதி என்பது தலத்தின் சிறப்புகி.பி. 1795 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகர் பத்மனாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. மகாராஜா ராமவர்மா, பத்நாபபுரத்தில் இருந்து படை வீரர்களில் பெரும்பாலானவர்களை திருவனந்த புரத்துக்கு அனுப்பினார். அப்போது காவல் வீரர்கள் அந்த கணபதி சிலையையும் உடன் எடுத்துச் சென்றனர்.
அந்தச் சிலை முதலில் பழைய ஸ்ரீகண்டேஸ்வரம் கோயிலில் ஒரு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிறகு, கிழக்குக் கோட்டையில் பிள்ளையாரை பிரதிஷ்டை செய்தால் நாங்கள் வழிபட வசதியாக இருக்கும் என்று காவல் வீரர்களும், தளபதிகளும் மன்னரிடம் வேண்டினர். அதை ஏற்றுக் கொண்டு 1860-ஆம் ஆண்டு, ஆயில்யம் திருநாள் மகாராஜா தற்போதைய கோயிலைக் கட்டினார்.
இங்கு அதே கணபதி விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோயில் திறந்திருக்கும் நேரத்தில் இடைவிடாமல் நாளொன்றுக்கு குறைந்த பட்சம் 25000 தேங்காய்கள் உடைக்கப்படுகின்றன. இப்படி உடைக்கப்படும் தேங்காய்கள் ஏலம் விடப்படுகிறது. ஏலம் எடுத்தவர் பக்தர்களின் எண்ணற்ற தேங்காய்களை வாங்கி உடைப்பதும், சிதறு தேங்காயையும் அவரே எடுத்துக் கொள்ளலாம். இங்கு ஏலம் எடுக்கக் கடும் போட்டி நிலவுகிறது. |