பட்டுப் போன நிலையிலுள்ள பலாமரத்தை பக்தர்கள் வணங்கி செல்வது இத்தலத்தின் சிறப்பு. நுழைவு வாயிலின் இடது புறம் பலிபீடத்தின் அருகில் புராதன பலா மரத்தின் அடிப்பாகம் மட்டும் காணப்படுகிறது. இந்த மரத்தின் அடியில் காணப்படும் பொந்தில் தான் மன்னர் பதுங்கி இருந்துள்ளார். மன்னரின் உயிரை காப்பாற்றிய இந்த மரத்திற்கு அம்மச்சி பிலாவு என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த மரத்தை வணங்கினால் ஆயுள்விருத்தியாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
கிருஷ்ணரின் திருக்கையில் வெண்ணெய் வைத்து வழிபாடு செய்யும் சடங்கும் நடக்கிறது.மன்னரின் உயிரை காப்பாற்றிய இடம் என்பதால், மார்த்தாண்டவர்மா தன்னுடைய படைக்கு ஆள்களை இங்கு வைத்து தேர்வு செய்துள்ளார். பணியில் சேரவிரும்புபவர்கள் கோயிலுக்கு வர அறிவுறுத்தப்பட்டனர். கோயில் முன்புள்ள உருண்டை கல்லை தூக்குபவர்களை படைக்கு தேர்வு செய்வார்கள். தற்போதும் அந்தக் கல் காணப்படுகிறது, ஆனால், எவராலும் தூக்க முடியவில்லை. |