அட்சய திருதியையிலிருந்து எட்டு நாட்கள் மட்டுமே மகாலட்சுமியை தரிசனம் செய்ய முடியும் என்பது தலத்தின் சிறப்பு.கேரளாவில் அடுவாச்சேரி எனும் இடத்தில் ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கிய பெருமாள் கோயில் பல தலைமுறைகளுக்குப் பின்னர் கவனிப்பாரின்றிக் கிடந்தது. அதனால் அந்த ஊர் மக்கள் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டனர்.
ஒருநாள் அவ்வழியாகச் சென்ற ஒரு முனிவர், இந்த ஊர்க்கோயில் குளத்தில் அந்த மகாலட்சுமியே நீரெடுத்துச் செல்வதைப் பார்த்ததும், அதற்கான காரணத்தை தேவியிடமே கேட்டார். அங்குள்ள கோயிலில் பூஜைகள் எதுவும் நடைபெறாததால், தான் விஷ்ணுவை பூஜித்து வருவதாகவும், அந்த ஊர் மக்களுக்கு அருள் பாலிக்கவில்லையென்றும் சொன்னாள்.
உடனே அந்த முனிவர், வறுமையில் வாடும் மக்களுக்கு உதவுமாறு மன்றாட, அதை ஏற்றுக் கொண்ட மகாலட்சுமி, வருடத்தில் எட்டு நாட்கள் மட்டும் தான் அருள்பாலிப்பதாகக் கூறினாள். அதன்படி, அட்சய திருதியை அன்று அந்த நாட்கள் ஆரம்பிக்கின்றன. |