இந்துக்களின் புனித பூமியான இங்கு இந்துக்கள் அனைவரும் சென்று தரிசிக்க வேண்டும். இங்குள்ள கண்ணன் விக்ரகம் 3.5 அடி உயரத்தில் "அஞ்சனா' எனும் கல்லால் ஆனது. இந்தக்கல்லில் இரும்பு, தாமிரம் அதிக அளவில் கலந்திருப்பதால் இதற்கு சக்தி அதிகம். பெருமாள் தலங்களிலேயே குருவாயூரில் உள்ள கண்ணன் சிலையும், இங்கும் மட்டுமே "அஞ்சனா' கல்லில் ஆன விக்ரகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலவரான திருக்காலடியப்பன் வலது கையில் வெண்ணெய் வைத்துள்ளார். இடதுகை இடுப்பில் இருக்கிறது. வலது மேல்கையில் சக்கரம், இடது மேல்கையில் சங்கு வைத்திருக்கிறார். பெருமாள் கோயில்களில் கண்ணனின் அருகில் சிவ, பார்வதி அருள் பாலிப்பது இங்கு மட்டும் தான் என்கின்றனர்.
இதன் அருகே தலவிருட்சமான பவளமல்லி உள்ளது. நுழைவு வாயில் முழுவதும் பித்தளை தகடு பதிக்கப்பட்டுள்ளது. இதில் குழலூதும் கண்ணனும், அமர்ந்த நிலையில் ஆதிசங்கரரும் அருளுகின்றனர். கோயிலின் எதிரில் சங்கரரின் தாய் ஆரியாம்பாள் சமாதி உள்ளது. |