ஆதிமூர்த்தி நரசிம்மன் தாருவால் ஆனவர் இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் 82 ஊற்றுக் கண்கள் உள்ளன. நடுவில் 12 கிணறுகள் உள்ளன. அவற்றில் ஆறு தானாகவே தண்ணீரை வடித்துக் கொள்ளும். அதுவாகவே ஊறும். யாரும் ஊற்றுவதில்லை. இத்தண்ணீர் பச்சை நிறமாக இருப்பதற்கு காரணம் அப்ரகம் எனும் கந்தக அமிலம். இந்த அமிலம் இருப்பதை அறிவியலார்களும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
இந்த தீர்த்தத்தில் குளித்தால் ஜூரம், தலைவலி ஆகியவை எல்லாம் உடனே குணமாகி விடுகிறது.கடலூருக்கு அருகில் உள்ள திவ்ய தேசமான திருவஹீந்திரபுரத்திலுள்ள பெருமாள் கோயிலின் அபிமான தலம் இது. எனவே அங்கு பெருமாளுக்கு நடக்கும் அத்தனை விசேஷங்களும் இங்கும் செய்யப்படுகின்றன.விசேஷ கண்ணாடி அறை உள்ளது. 108 திவ்ய தேசங்களிலும் உள்ள பெருமாளின் சுதை வடிவங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளது மிகவும் சிறப்பு.
இது வேறு எந்த கோயிலிலும் காண் முடியாத அரிய அம்சம்.சுந்தர ஆஞ்சநேயர் கடலூர் அழகாநந்த முதலியார் என்பவரது நிலத்திலிருந்து எடுக்கப்பட்டவர். நிகமாந்த ஸ்ரீ மகாதேசிக சுவாமியும், ஸ்ரீ மணவாள மாமுனிகளையும் ஒரு சேர இங்கு தரிசிக்கலாம். |